- இந்தியாவின் வடக்கே உள்ள இமயமலையில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரம், உலகிலேயே மிகவும் உயர்ந்த மலைசிகரமாக உள்ளது. கடந்த, 1954ல், இந்தியா நடத்திய ஆய்வில், இதன் உயரம், 8,848மீட்டர் என, தெரியவந்தது.
- இந்நிலையில், பல்வேறு இயற்கை மாற்றங்கள் மற்றும் 2015ல் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால், எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என, கருதப்பட்டது.
- இதையடுத்து, சீனா மற்றும் நேபாளம் இணைந்து கூட்டாக, உயரத்தை அளவிடும் பணியை துவக்கின. புதிய உயரத்தை, சீனா மற்றும் நேபாளம் அறிவித்துள்ளன.
- இதன்படி, அதன் தற்போதைய உயரம், 8,848.86 மீட்டர்.ஏற்கனவே, இந்தியா நடத்திய ஆய்வில் தெரியவந்த அளவை விட, தற்போது, 86 செ.மீ., அதிகரித்துள்ளது.
- சீனா இதற்கு முன், இரண்டு முறை,எவரெஸ்டின் உயரத்தை அளந்துள்ளது. கடந்த, 1975 ஆய்வின்படி, 8,848.13 மீட்டராகவும், கடந்த, 2005ல் நடத்திய ஆய்வின்படி, 8,844.43 மீட்டராகவும் அறிவிக்கப்பட்டது.
எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் / The Height of Mount Everest
December 09, 2020
0
Tags