அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி
- அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை தற்போது முடிவடைந்துள்ளது. மொத்தம் உள்ள 538 தேர்தல் வாக்குகளில், வெற்றி பெற 270 வாக்குகள் தேவைப்படும் நிலையில், ஜோ பைடன் 290 வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.
- அவரை எதிர்த்து போட்டியிட்ட டிரம்ப் 214 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். இந்த அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
- அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்ந்தெடுப்பதும் உறுதியாகியுள்ளது.
ஊராட்சி தலைவர், உறுப்பினரை திரும்ப பெறும் மசோதா ஹரியாணா பேரவையில் நிறைவேறியது
- ஹரியாணா சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளான நேற்று முன்தினம் 2020-ம் ஆண்டுக்கான ஹரியாணா பஞ்சாயத்து ராஜ் (இரண்டாவது திருத்தம்) மசோதாவை துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா தாக்கல் செய்தார்.
- கிராம பஞ்சாயத்து தலைவர்கள், ஒன்றிய அளவிலான பஞ்சாயத்து சமிதிகள் மற்றும் மாவட்ட அளவிலான ஜில்லா பரிஷத் உறுப்பினர்கள் சரியாக செயல்படத் தவறினால் அவர்களை திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமையை மக்களுக்கு இந்த மசோதா வழங்குகிறது.
- மேலும் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 8 சதவீத இடஒதுக்கீடும் வழங்க இந்த மசோதாவில் வகை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
- இதன் மூலம் ஊரகப் பகுதிகளில் கிராம பஞ்சாயத்து தலைவரையோ அல்லது ஒன்றிய மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் உறுப்பினர்களையோ அவர்களின் பதவிக் காலம் முடிவதற்கு முன்பேமக்கள் திரும்ப அழைத்துக் கொள்ள முடியும்.
- உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்வு செய்யப்படுவோரின் பொறுப்புடைமையை அதிகரிப்பதே இந்த திருத்தத்தின் நோக்கமாக கூறப்பட்டுள்ளது.
- தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் ஹரியாணாவைச் சேர்ந்தவர்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா மாநில சட்டப்பேரவையில் கடந்த வியாழக் கிழமை நிறைவேற்றப்பட்டது.
இஓஎஸ்-01 உள்ளிட்ட 10 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது
- இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி வருகிறது.
- இந்தநிலையில், பி.எஸ்.எல்.வி-சி49 ராக்கெட் மூலம் இஓஎஸ்-01 என்ற நவீனரக புவிகண்காணிப்பு செயற்கைக்கோள் நவம்பர் 7ம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்தது.
- அதன்படி நேற்று ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி49 ராக்கெட்டை விண்ணில் ஏவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 26 மணி நேர கவுண்டவுன் தொடங்கியது.
- ராக்கெட்டை நேற்று மாலை 3.02 மணிக்கு விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக ராக்கெட்டை திட்டமிட்டபடி விண்ணில் ஏவும் பணிகள் தடைபட்டது. இதையடுத்து கவுண்டவுன் நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர்,
- ராக்கெட் புறப்படும் நேரம் 9 நிமிடம் தாமதமாக மதியம் 3.11 மணி என மாற்றப்பட்டது. அதன்படி, சரியாக 3.11 மணிக்கு முதலாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி49 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
- பூமியில் இருந்து புறப்பட்டு 15 நிமிடம் 20 வினாடியில் 575 கி.மீ தூரத்தில் இந்தியாவின் இ.ஓ.எஸ்-01 செயற்கைகோள் அதன் சுற்றுவட்டப்பாதையில் திட்டமிட்டப்படி நிலைநிறுத்தப்பட்டது.
- இதையடுத்து, வணிக ரீதியாக ஏவப்பட்ட லக்சம்பெர்க்கிற்கு சொந்தமான 4 செயற்கைக்கோள்கள், அமெரிக்காவிற்கு சொந்தமான 4 செயற்கைக்கோள்கள், லிதுவேனியா நாட்டிற்கு சொந்தமான 1 செயற்கைக்கோள் என 9 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
- இஓஎஸ்- 01 செயற்கைக்கோள் புவிகண்காணிப்பு, விவசாயம், பேரிடர் மேலாண்மை, காடுகள் கண்காணிப்பு ஆகிய பணிகளை துல்லியமாக மேற்கொள்ளும். இது 630 கிலோ எடை கொண்டது.
- இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இதில் உள்ள எக்ஸ்பேண்ட் சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் அதிக திறன் கொண்ட படங்களை எந்த காலநிலையிலும் துல்லியமாக எடுக்கும்.
ஐ.நா., ஆலோசனை குழு உறுப்பினராக இந்திய துாதர் விதிஷா மைத்ரா நியமனம்
- ஐக்கிய நாடுகள் சபையில், 193 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இவை, ஐ.நா., நிர்வாகம் மற்றும் பட்ஜெட் கேள்விகளுக்கான ஆலோசனைக் குழுவிற்கு, பிராந்தியம் மற்றும் தகுதி அடிப்படையில், 16 உறுப்பினர்களை தேர்வு செய்கின்றன.
- இக்குழுவின், 2021 - 23ம் ஆண்டிற்கான உறுப்பினர் தேர்வு நடந்தது. இதில், ஆசிய - பசிபிக் நாடுகள் பிரிவில், விதிஷா மைத்ரா தேர்வு செய்யப்பட்டார்.இவருக்கு ஆதரவாக, 126 ஓட்டுக்கள் கிடைத்தன.
- எதிர்த்து போட்டியிட்ட, ஈரான் பிரதிநிதி அலி முகமது பேக் அல் தபாக், 64 ஓட்டுக்கள் பெற்றார். இதையடுத்து, நிர்வாக - பட்ஜெட் கேள்விகளுக்கான ஆலோசனைக் குழுவிற்கு, விதிஷா மைத்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- மேலும், ஐ.நா., நிர்வாகம், சிறப்பு முகமை அமைப்புகளின் நிதி பரிவர்த்தனைகள் உள்ளிட்டவை தொடர்பான ஆலோசனைகளையும், இந்த குழு, பொதுச் செயலருக்கு வழங்கும்.விதிஷா, டில்லியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.