Type Here to Get Search Results !

TNPSC 13th NOVEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

தன்வந்திரி ஜெயந்தியான ஐந்தாவது ஆயுர்வேத தினம் கொண்டாட்டம்
  • மத்திய ஆயுஷ் அமைச்சகம் உருவாக்கப்பட்ட பின், கடந்த, 2016 முதல், ஆயுர்வேத தினம், ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. தன்வந்திரி ஜெயந்தியான ஐந்தாவது ஆயுர்வேத தினம் கொண்டாடப்பட்டது. 
  • இதையொட்டி, குஜராத்தின், ஜாம்நகரில், ஆயுர்வேதா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும், ராஜஸ்தானின் ஜெய்பூரில், தேசிய ஆயுர்வேதா நிறுவனமும் துவக்கப்பட்டன. 
  • இதை, பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். இதில், ஜாம்நகரில் துவக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனத்துக்கு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனம் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
  • ஜெய்பூரில் திறக்கப்பட்ட கல்வி நிறுவனத்துக்கு, நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்தை, பல்கலை மானியக்குழு வழங்கியது.இந்த துவக்க விழாவில், உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல், டெட்ராஸ் அதானோம் கெப்ரயேசஸ் பங்கேற்றார் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
  • பாரம்பரிய மருத்துவம் குறித்த கல்வி, ஆராய்ச்சி, விழிப்புணர்வு மற்றும் சான்றுகளை வலுப்படுத்தும் நோக்கில், பாரம்பரிய மருத்துவத்துக்கான சர்வதேச மையத்தை, இந்தியாவில் நிறுவ, உலக சுகாதார நிறுவனம் முடிவு செய்துள்ளது.
  • சுகாதாரமான, பாதுகாப்பான உலகத்தை உருவாக்க விரும்பும் நாடுகளுக்காக, 2014 -- 23ம் ஆண்டுகளுக்கான, பாரம்பரிய மருத்துவ செயல்திட்டத்தினை, உலக சுகாதார நிறுவனம் உருவாக்க திட்டமிட்டுள்ளது.
  • இதில், பாரம்பரிய மருத்துவத்துக்கான சர்வதேச மையம், எங்களுக்கு பேருதவியாக இருக்கும் என, எதிர்பார்க்கிறோம்.
  • இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:எங்கள் நாட்டுக்கு மிகப் பெரிய பொறுப்பை அளித்துள்ள உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல், டெட்ராஸ்சுக்கு மனமார்ந்த நன்றி. பாரம்பரிய மருத்துவத்துக்கான சர்வதேச மையத்தை, இங்கு அமைப்பதில், அனைத்து இந்தியர்களும் பெருமை அடைவர். 
  • உறுதிசர்வதேச மருந்தகமாக இந்தியா எப்படி உருவெடுத்ததோ, அதே போல, இந்த பாரம்பரிய மருத்துவ மையமும், ஆரோக்கியத்துக்கான சர்வதேச மையமாக நிச்சயம் உருவெடுக்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன்.
  • கொரோனா பெருந்தொற்று காலத்தில், ஆயுர்வேத பொருட்களுக்கான தேவை, உலக அளவில் அதிகரித்துள்ளது. இதன் ஏற்றுமதி, கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு செப்டம்பரில், 45 சதவீதம் உயர்ந்துள்ளது.
  • மஞ்சள், இஞ்சி போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதால், அதற்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளன. ஆயுர்வேத மருத்துவம் குறித்து, உலகின் மிகச்சிறந்த மருத்துவ இதழ்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
  • கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் மத்திய அரசு ஒருபுறம் கவனம் செலுத்தி வந்தாலும், மற்றொரு பக்கம், ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சியில், சர்வதே ஒத்துழைப்பை அதிகரித்து வருகிறது.
  • கொரோனாவை கட்டுப்படுத்துவதில், ஆயுர்வேத மருத்துவ பங்கு குறித்து, டில்லியில் உள்ள, அனைத்திந்திய ஆயுர்வேதா நிறுவனம் உட்பட, நாட்டின் 100க்கும் மேற்பட்ட இடங்களில், ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
தரையிலிருந்து வானுக்கு ஏவப்படும் QRSAM ஏவுகணை சோதனை வெற்றி
  • விமானி இல்லாத இலக்கு விமானம் ஒன்றை சரியாக தாக்கியதன் மூலம் முக்கிய மைல்கல் ஒன்றை இந்தியாவின் துரிதமாக செயலாற்றும் தரையிலிருந்து வானுக்கு ஏவப்படும் ஏவுகணை (QRSAM) எட்டியுள்ளது.
  • ஒடிசா கடற்கரைக்கு அருகே ஐடிஆர் சந்திப்பூரிலிருந்து பிற்பகல் 3.50 மணியளவில் இந்த ஏவுகணை ஏவப்பட்டது.
  • ஏவுகணையின் வெற்றிக்காக விஞ்ஞானிகளை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உயரதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel