தன்வந்திரி ஜெயந்தியான ஐந்தாவது ஆயுர்வேத தினம் கொண்டாட்டம்
- மத்திய ஆயுஷ் அமைச்சகம் உருவாக்கப்பட்ட பின், கடந்த, 2016 முதல், ஆயுர்வேத தினம், ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. தன்வந்திரி ஜெயந்தியான ஐந்தாவது ஆயுர்வேத தினம் கொண்டாடப்பட்டது.
- இதையொட்டி, குஜராத்தின், ஜாம்நகரில், ஆயுர்வேதா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும், ராஜஸ்தானின் ஜெய்பூரில், தேசிய ஆயுர்வேதா நிறுவனமும் துவக்கப்பட்டன.
- இதை, பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். இதில், ஜாம்நகரில் துவக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனத்துக்கு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனம் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
- ஜெய்பூரில் திறக்கப்பட்ட கல்வி நிறுவனத்துக்கு, நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்தை, பல்கலை மானியக்குழு வழங்கியது.இந்த துவக்க விழாவில், உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல், டெட்ராஸ் அதானோம் கெப்ரயேசஸ் பங்கேற்றார் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
- பாரம்பரிய மருத்துவம் குறித்த கல்வி, ஆராய்ச்சி, விழிப்புணர்வு மற்றும் சான்றுகளை வலுப்படுத்தும் நோக்கில், பாரம்பரிய மருத்துவத்துக்கான சர்வதேச மையத்தை, இந்தியாவில் நிறுவ, உலக சுகாதார நிறுவனம் முடிவு செய்துள்ளது.
- சுகாதாரமான, பாதுகாப்பான உலகத்தை உருவாக்க விரும்பும் நாடுகளுக்காக, 2014 -- 23ம் ஆண்டுகளுக்கான, பாரம்பரிய மருத்துவ செயல்திட்டத்தினை, உலக சுகாதார நிறுவனம் உருவாக்க திட்டமிட்டுள்ளது.
- இதில், பாரம்பரிய மருத்துவத்துக்கான சர்வதேச மையம், எங்களுக்கு பேருதவியாக இருக்கும் என, எதிர்பார்க்கிறோம்.
- இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:எங்கள் நாட்டுக்கு மிகப் பெரிய பொறுப்பை அளித்துள்ள உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல், டெட்ராஸ்சுக்கு மனமார்ந்த நன்றி. பாரம்பரிய மருத்துவத்துக்கான சர்வதேச மையத்தை, இங்கு அமைப்பதில், அனைத்து இந்தியர்களும் பெருமை அடைவர்.
- உறுதிசர்வதேச மருந்தகமாக இந்தியா எப்படி உருவெடுத்ததோ, அதே போல, இந்த பாரம்பரிய மருத்துவ மையமும், ஆரோக்கியத்துக்கான சர்வதேச மையமாக நிச்சயம் உருவெடுக்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன்.
- கொரோனா பெருந்தொற்று காலத்தில், ஆயுர்வேத பொருட்களுக்கான தேவை, உலக அளவில் அதிகரித்துள்ளது. இதன் ஏற்றுமதி, கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு செப்டம்பரில், 45 சதவீதம் உயர்ந்துள்ளது.
- மஞ்சள், இஞ்சி போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதால், அதற்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளன. ஆயுர்வேத மருத்துவம் குறித்து, உலகின் மிகச்சிறந்த மருத்துவ இதழ்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
- கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் மத்திய அரசு ஒருபுறம் கவனம் செலுத்தி வந்தாலும், மற்றொரு பக்கம், ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சியில், சர்வதே ஒத்துழைப்பை அதிகரித்து வருகிறது.
- கொரோனாவை கட்டுப்படுத்துவதில், ஆயுர்வேத மருத்துவ பங்கு குறித்து, டில்லியில் உள்ள, அனைத்திந்திய ஆயுர்வேதா நிறுவனம் உட்பட, நாட்டின் 100க்கும் மேற்பட்ட இடங்களில், ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
தரையிலிருந்து வானுக்கு ஏவப்படும் QRSAM ஏவுகணை சோதனை வெற்றி
- விமானி இல்லாத இலக்கு விமானம் ஒன்றை சரியாக தாக்கியதன் மூலம் முக்கிய மைல்கல் ஒன்றை இந்தியாவின் துரிதமாக செயலாற்றும் தரையிலிருந்து வானுக்கு ஏவப்படும் ஏவுகணை (QRSAM) எட்டியுள்ளது.
- ஒடிசா கடற்கரைக்கு அருகே ஐடிஆர் சந்திப்பூரிலிருந்து பிற்பகல் 3.50 மணியளவில் இந்த ஏவுகணை ஏவப்பட்டது.
- ஏவுகணையின் வெற்றிக்காக விஞ்ஞானிகளை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உயரதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.