- புற்றுநோயை முன்பே கண்டறிந்து குணப்படுத்துவதை வலியுறுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் நவ. 7ல் நாடு முழுவதும் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
- புற்றுநோய் தாக்கத்தில் முன்னிலையில் இருக்கும் இந்தியாவில் அதிக வீச்சில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கையை மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் புற்றுநோய் தான் அதிகம். இன்று வயது வித்தியாசம், பாலின வேறுபாடு இன்றி பெரும்பாலானோர் புகையிலை, சிகரெட், பீடி, குட்கா போன்ற பொருட்களுக்கு அடிமையாக உள்ளனர்.
- இதனால் அதிகளவு புற்று நோய் தாக்கு கிறது. பெண்களை மார்பக புற்றுநோய், கர்ப்பவாய் புற்றுநோய்தான் அதிகளவில் தாக்குகின்றன. மரபை விட சுற்றுச்சூழல் தான் புற்றுநோயை அதிகளவில் தீர்மானிக்கிறது. சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கும் புற்றுநோயக்கும் தொடர்பு உண்டு.
- காற்று, நீர், மண் ஆகியவற்றில் புற்றுநோயை உருவாக்கும் வேதிபொருட்கள் இருந்தால் அதை பயன்படுத்தும் மக்களுக்கும் புற்றநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
- துரித உணவு, சமச்சீரற்ற வாழ்க்கை முறை, போதிய உடற்பயிற்சியின்மையாலும் புற்றுநோய் ஏற்படுகிறது. பல முன்னணி பிரபலங்களும் கேன்சருடன் போராடி வென்றவர்கள் தான். கேன்சர் வந்தால் குணப்படுத்த முடியாது என துவண்டு விடுவது உடலை இன்னும் பலவீனப்படுத்தும்.
- கேன்சர் வந்தாலும் மீண்டுவிடலாம் என்ற மன உறுதி வேண்டும். உடலில் எந்த இடத்தில் வலி இல்லாத கட்டிகள் வந்தாலும் அதை உடனே மருத்துவரிடம் அணுகி உரிய ஆலோசனை பெற வேண்டும்.
- நெல்லிக்காய், துளசி, அருகம்புல், வில்வம் புற்றுநோயை வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தாய்ப்பால் கொடுக்காவிடில் புற்றுநோய் இந்தியாவில் 28 பெண்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய், 53 பெண்களில் ஒருவருக்கு கர்ப்பபை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. மரபணு மூலம் 14 சதவீதமே புற்று நோய்க்கு வாய்ப்புள்ளது.
- குழந்தை பேறின்மை, தாய்ப்பால் கொடுக்காதவர்களுக்கு வர வாய்ப்புள்ளது. புற்றுநோய் கட்டிகளை துவக்க கட்டத்தில் கண்டறிந்து விட்டால் எளிதில் குணப்படுத்தி விடலாம்.
- அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தொற்றா பிரிவுகளில் இந்த இரு புற்றுநோய்களுக்கான ஆரம்ப கட்ட சோதனை இலவசமாக செய்யப்படுகிறது.
- மாஸ்க் கொரோனாவுக்கு மட்டுமல்ல புற்றுநோய் ஏற்படுத்தும் சிகரெட் புகை, காற்று மாசு உள்ளிட்டவற்றிற்கும் சிறந்த தீர்வு.கே.எஸ்.மல்லிகா, அறுவை சிகிச்சை நிபுணர், விருதுநகர் அரசு மருத்துவமனைஅலைபேசியால் பரவாதுஅலைபேசி பயன்படுத்துவதால் புற்றுநோய் வருகிறது என இதுவரையிலும் எந்த ஆதாரமும் இல்லை.
- ஆனால் அலைபேசி டவர் இருக்கும் இடங்களில் குடியிருப்பவர்களுக்கு புற்றுநோய் வருகிறது என கூறுவர். அதற்கும் ஆதாரம் இல்லை.
- அலைபேசியினை தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் துாக்கமின்மை, அதிகளவில் கோபம் வரும். எக்ஸ்-ரே எடுக்கும் போது வெளிவரும் ரேடியேசன் மூலமாக புற்றுநோய் வருகிறது.
- எக்ஸ்-ரே டெக்னீசியன்கள், எலும்பு டாக்டர்களை இது அதிகளவில் பாதிக்கிறது. இவர்களும் முறையான பாதுகாப்போடு இருக்க வேண்டும்.
தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் / NATIONAL CANCER AWARENESS DAY
November 07, 2020
0
Tags