Type Here to Get Search Results !

தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் / NATIONAL CANCER AWARENESS DAY

  • புற்றுநோயை முன்பே கண்டறிந்து குணப்படுத்துவதை வலியுறுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் நவ. 7ல் நாடு முழுவதும் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 
  • புற்றுநோய் தாக்கத்தில் முன்னிலையில் இருக்கும் இந்தியாவில் அதிக வீச்சில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கையை மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
  • புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் புற்றுநோய் தான் அதிகம். இன்று வயது வித்தியாசம், பாலின வேறுபாடு இன்றி பெரும்பாலானோர் புகையிலை, சிகரெட், பீடி, குட்கா போன்ற பொருட்களுக்கு அடிமையாக உள்ளனர்.
  • இதனால் அதிகளவு புற்று நோய் தாக்கு கிறது. பெண்களை மார்பக புற்றுநோய், கர்ப்பவாய் புற்றுநோய்தான் அதிகளவில் தாக்குகின்றன. மரபை விட சுற்றுச்சூழல் தான் புற்றுநோயை அதிகளவில் தீர்மானிக்கிறது. சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கும் புற்றுநோயக்கும் தொடர்பு உண்டு.
  • காற்று, நீர், மண் ஆகியவற்றில் புற்றுநோயை உருவாக்கும் வேதிபொருட்கள் இருந்தால் அதை பயன்படுத்தும் மக்களுக்கும் புற்றநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. 
  • துரித உணவு, சமச்சீரற்ற வாழ்க்கை முறை, போதிய உடற்பயிற்சியின்மையாலும் புற்றுநோய் ஏற்படுகிறது. பல முன்னணி பிரபலங்களும் கேன்சருடன் போராடி வென்றவர்கள் தான். கேன்சர் வந்தால் குணப்படுத்த முடியாது என துவண்டு விடுவது உடலை இன்னும் பலவீனப்படுத்தும்.
  • கேன்சர் வந்தாலும் மீண்டுவிடலாம் என்ற மன உறுதி வேண்டும். உடலில் எந்த இடத்தில் வலி இல்லாத கட்டிகள் வந்தாலும் அதை உடனே மருத்துவரிடம் அணுகி உரிய ஆலோசனை பெற வேண்டும். 
  • நெல்லிக்காய், துளசி, அருகம்புல், வில்வம் புற்றுநோயை வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தாய்ப்பால் கொடுக்காவிடில் புற்றுநோய் இந்தியாவில் 28 பெண்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய், 53 பெண்களில் ஒருவருக்கு கர்ப்பபை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. மரபணு மூலம் 14 சதவீதமே புற்று நோய்க்கு வாய்ப்புள்ளது.
  • குழந்தை பேறின்மை, தாய்ப்பால் கொடுக்காதவர்களுக்கு வர வாய்ப்புள்ளது. புற்றுநோய் கட்டிகளை துவக்க கட்டத்தில் கண்டறிந்து விட்டால் எளிதில் குணப்படுத்தி விடலாம். 
  • அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தொற்றா பிரிவுகளில் இந்த இரு புற்றுநோய்களுக்கான ஆரம்ப கட்ட சோதனை இலவசமாக செய்யப்படுகிறது. 
  • மாஸ்க் கொரோனாவுக்கு மட்டுமல்ல புற்றுநோய் ஏற்படுத்தும் சிகரெட் புகை, காற்று மாசு உள்ளிட்டவற்றிற்கும் சிறந்த தீர்வு.கே.எஸ்.மல்லிகா, அறுவை சிகிச்சை நிபுணர், விருதுநகர் அரசு மருத்துவமனைஅலைபேசியால் பரவாதுஅலைபேசி பயன்படுத்துவதால் புற்றுநோய் வருகிறது என இதுவரையிலும் எந்த ஆதாரமும் இல்லை.
  • ஆனால் அலைபேசி டவர் இருக்கும் இடங்களில் குடியிருப்பவர்களுக்கு புற்றுநோய் வருகிறது என கூறுவர். அதற்கும் ஆதாரம் இல்லை. 
  • அலைபேசியினை தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் துாக்கமின்மை, அதிகளவில் கோபம் வரும். எக்ஸ்-ரே எடுக்கும் போது வெளிவரும் ரேடியேசன் மூலமாக புற்றுநோய் வருகிறது. 
  • எக்ஸ்-ரே டெக்னீசியன்கள், எலும்பு டாக்டர்களை இது அதிகளவில் பாதிக்கிறது. இவர்களும் முறையான பாதுகாப்போடு இருக்க வேண்டும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel