எதிரி போர்க் கப்பல்களை அழிக்கும் SAM ஏவுகணை சோதனை வெற்றி
- வங்கக் கடலில் இருந்து எதிரி போர்க் கப்பல்களை தாக்கி அழிக்கும் (ஏஎஸ்எம்) ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. திட்டமிட்டபடி மாதிரி கப்பலை ஏவுகணை துல்லியமாகத் தாக்கி அழித்தது.
- இந்த சோதனை ஐஎன்எஸ் கோரா கப்பலில் இருந்து நடத்தப்பட்டது. ஏவுகணை தாக்கியதும் மாதிரி கப்பல் முற்றிலும் சேதம் அடைந்து தீப்பிடித்து எரிந்தது.
பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்திற்கு ராணுவ வீரர்களுக்காக சாய் என்ற செயலியை இந்திய ராணுவம் அறிமுகம்
- இந்திய - சீன எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே, சீன ராணுவத்தினர், சமூக வலைதளங்கள் வாயிலாக, இந்திய ராணுவம் குறித்த தகவல்களை பெற முயற்சிகள் செய்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
- இதையடுத்து, நம் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு, 'வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்த, தடை விதிக்கப்பட்டது.
- இந்நிலையில், ராணுவ வீரர்களின் பயன்பாட்டிற்காக, பிரத்யேகமாக செயலி ஒன்றை, இந்திய ராணுவம் அறிமுகம் செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின், 'சுயசார்பு இந்தியா' திட்டத்தின் கீழ், 'சாய்' என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
- பணியில் இருக்கும் ராணுவ வீரர்களும், அதிகாரிகளும், இந்த செயலியை பயன்படுத்தலாம்.இந்த செயலி, மிகவும் பாதுகாப்பானது. அதன் வாயிலாக பகிரப்படும் தகவல்கள், 'ஹேக்' செய்ய முடியாத வகையில், தொழில்நுட்ப வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
- இதில், 'ஆண்ட்ராய்டு' மொபைல் போனில் உள்ள, 'வாட்ஸ் ஆப், டெலிகிராம், சம்வத், ஜிம்ஸ்' மற்றும் 'மெசேஜ், வாய்ஸ் மெசேஜ், வீடியோ காலிங்' உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன.
- இந்த செயலியின் செயல்பாடுகளை ஆய்வு செய்த ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த செயலியை உருவாக்கிய கர்னல் சாய் சங்கருக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
குஜராத்தில் மூலிகை தோட்டம் திறந்து வைத்தார் பிரதமர் மோடி
- குஜராத்தில், ஒற்றுமை சிலையான, சர்தார் படேல் சிலை அருகே, மூலிகை தோட்டத்தை, பிரதமர் மோடி திறந்துவைத்தார். இங்கு, 'ஆரோக்ய வனம்' என, பெரியிடப்பட்டுள்ள மூலிகை தோட்டத்தை திறந்து வைத்தார்.
- 17 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த தோட்டத்தில், 380 மூலிகைகளின், ஐந்து லட்சத்துக்கும் அதிகமான செடிகள் வளர்க்கப் படுகின்றன.
- இதன் பின், ஒற்றுமை சிலை அருகே, பல மாநிலங்களின் கைவினைப் பொருட்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ள வணிக வளாகத்தை, பிரதமர் திறந்து வைத்தார். இந்த வணிக வளாகத்துக்கு, 'ஏக்தா மால்' என, பெயரிடப்பட்டுள்ளது.
- ஏக்தா மாலில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனி அரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சர்தார் படேலின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.
பெண்களின் பாதுகாப்புக்காக என் தோழி திட்டம் - இந்தியன் ரயில்வே
- ரயில்களில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்புக்காக என் தோழி என்ற பெயரில் புதிய திட்டத்தை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின்படி ஒரு பெண் ரயிலில் ஏறும் இடத்திலிருந்து இறங்கும் வரை அவரது பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
- ரயிலில் செல்லும் பெண் பயணிகள், குறிப்பாக தனியாக செல்லும் பயணிகளை அணுகும் ரயில்வே பாதுகாப்பு படையினர் பயணத்தின்போது எப்படியெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்துவார்கள்.
- பயணத்தின்போது பிரச்னை எதுவும் ஏற்பட்டால் 182 என்ற எண்ணுக்கு அழைத்து உதவி கோரலாம். இது போன்றவர்களுக்கு விரைந்து உதவி வழங்கப்படுவதுடன் இந்த நடைமுறை சரியாக அனுசரிக்கப்படுகிறதா என மூத்த அதிகாரிகளும் கண்காணிப்பர்.
- இத்திட்டத்தின் கீழ் பெண் பயணிகளின் கருத்துகளை கேட்டு அதன் அடிப்படையில் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.
ஒற்றுமை சிலை வலைதளம் துவக்கி வைத்தார் பிரதமர்
- குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி ஒற்றுமை சிலைக்கான வலைதளம் மற்றும் மொபைல் செயலியை துவக்கி வைத்தார்.
- பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத் வந்தார். ஆமதாபாத் விமான நிலையம் வந்திறங்கிய பிரதமர் மோடியை, முதல்வர் விஜய் ரூபானி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
- தொடர்ந்து ஒற்றுமை சிலைக்கான வலைதளம் மற்றும் மொபைல் செயலியை துவக்கி வைத்தார். மேலும் கேவாடியாவில் உள்ள பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்டார்.