பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் பெற்ற ரபேல் நடால் சாதனை
- பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் நடைபெற்றது.
- 'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற இந்த போட்டியில், 12 முறை சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), உலக தரவரிசையில் முதலிடம் வகிக்கும் செர்பியாவின் ஜோகோவிச்சை எதிர்த்து விளையாடினார்.
- விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், சிறப்பாக விளையாடிய நடால், 6-0, 6-2, 7-5- என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். ரபேல் நடால் வெல்லும் 20-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.
சொத்துரிமை ஆவண அட்டை திட்டம் துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
- கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு, 'ஸ்வமித்வா' திட்டத்தின் கீழ், சொத்துரிமை ஆவண அட்டை அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதன்படி, நாடு முழுதும், 763 கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு, நில உரிமை ஆவண அட்டைகள் வழங்கப்பட்டன.
- கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு, அவர்களது வீடு மற்றும் வீடு அமைந்துள்ள சொத்து உரிமையை அளிக்கும் வகையில், ஸ்வமித்வா திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி, ஏப்., மாதத்தில் அறிவித்தார்.
- நாடு முழுதும் இந்த திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் பயனாளிகளுக்கு, பிரதமர் பங்கேற்ற விழாவின் வாயிலாக, ஆவண அட்டைகள் வழங்கப்பட்டன.
- அதன்படி, 763 கிராமங்களைச் சேர்ந்த, 1.32 லட்சம் பேருக்கு ஆவண அட்டை வழங்கப்பட்டு உள்ளது.நாடு முழுதும், 6.62 லட்சம் கிராமங்களில், வரும், 2024ம் ஆண்டுக்குள் இந்த ஆவண அட்டை வழங்கப்பட உள்ளது.