2020ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு (NOBEL PRIZE FOR PEACE 2020)
TNPSCSHOUTERSOctober 10, 2020
0
உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய ஆறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
அமைதிக்கான நோபல் பரிசு, ஐரோப்பிய நாடான நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு, ஐரோப்பிய நாடான சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், இந்த ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசு, ஐ.நா.,வின் உலக உணவுத் திட்டம் என்ற அமைப்புக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான இத்தாலி தலைநகர் ரோமை தலைமையிடமாக வைத்து செயல்படும் இந்த அமைப்பு, உலகம் முழுவதும், 88 நாடுகளில், வறுமையில் வாடும் நபர்களுக்கு, 53 ஆண்டுகளாக உணவு அளித்து வந்துள்ளது.
பசிப்பிணி போக்குதல் மற்றும் போரைத் தவிர்த்து அமைதியை காப்பதால், இந்த விருதுக்கு, உலக உணவுத்திட்ட அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது.