2020ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு (NOBEL PRIZE FOR ECONOMICS 2020)
TNPSCSHOUTERSOctober 13, 2020
0
ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த, விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும், பல் துறை சாதனை யாளர்களுக்கு நோபல் பரிசு கள் வழங்கப்படுகின்றன.
உலகின் உயர்ந்த விருதாக இது கருதப்படுகிறது. இந்த ஆண்டுக்கான, மருத்துவம், இயற்பியல், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளுக்கான விருதுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளன. பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுக்குரியவர் பெயர் அறிவிக்கப்பட்டது.
ஏலம் விடுவது தொடர்பான புதிய கோட்பாடுகளை உருவாக்கியதற்காக, அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலை பேராசிரியர்கள் பால் மில்குரோம், 72, ராபர்ட் வில்சன், 83, ஆகியோருக்கு, இந்தாண்டுக்கான, பொருளாதார நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், ஸ்டான்போர்டு பல்கலை பேராசிரியர்களான பால் மில்குரோம், ராபர்ட் வில்சன், இந்தாண்டு பொருளாதார நோபல் பரிசைப் பெற உள்ளனர்.
ஏலம் விடுவது தொடர்பாக புதிய கோட்பாடுகளை வகுத்ததுடன், புதிய வழிமுறைகளையும் இவர்கள் உருவாக்கியுள்ளனர். அது பொருளாதார வளர்ச்சியுடன் இணைந்ததாக அமைந்துள்ளது. மேலும், ஏல முறை குறித்த ஆராய்ச்சிகளையும், இவர்கள் மேற்கொண்டு உள்ளனர்.
ரேடியோ அலைவரிசை, மீன் பிடிக்க குத்தகை, விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் நேரம் ஒதுக்க என, பல்வேறு விஷயங்களுக்கு, இவர்களது கோட்பாடுகள் சரியான தீர்வாக அமைந்துள்ளதாக, தேர்வுக் குழுவினர் தெரிவித்து உள்ளனர்.
விருது பெறும் மில்குரோம், பிஎச்.டி., படித்தபோது, அவரது வழிகாட்டியாக இருந்தவர் வில்சன். கடந்த, 1970களில் இருந்தே, ஏலம் தொடர்பான ஆய்வுகளில் இருவரும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.