Type Here to Get Search Results !

TNPSC 7th SEPTEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 'ஹைபர்சோனிக்' வாகன சோதனை வெற்றி
  • முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஹைபர்சோனிக் தொழில்நுட்ப வாகனம் நேற்று வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது.
  • அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் `ஹைபர் சோனிக்' தொழில்நுட்பத்தில் செயல்படும் அதிநவீன வாகனங்கள் (எச்எஸ்டிடிவி) உள்ளன. அந்த வரிசையில் இந்தியாவும் இந்த வாகனத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), இந்த வாகனத்தை வெற்றிகரமாகத் தயாரித்தது.
  • ஒடிசா மாநிலம் பாலாசோரில் உள்ள அப்துல் கலாம் ஏவுதளத்தில் இருந்து வாகனம் விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாகப் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. காற்று அழுத்தத்துக்கு ஏற்ப விரைந்து செயல்படும் `ஸ்கிராேேம்ஜெட்' இன்ஜின் சக்தியுடன் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • அக்னி ரக ஏவுகணை பூஸ்டர், ஹைபர்சோனிக் வாகனத்தை விண்ணில் 30 கி.மீ உயரத்துக்கு எடுத்துச் சென்றது. அதன்பிறகு, ஹைபர்சோனிக் வாகனம் அதில் இருந்து தனியாக பிரிந்தது. வாகனம் தனியாக பிரிந்தவுடன் ஸ்கிராம்ஜெட் இன்ஜின் உடனடியாக இயங்கியது.
  • வாகனம் காற்றைக் கிழித்துக் கொண்டு ஒலியின் வேகத்தை விட 6 மடங்கு வேகத்தில் சீறிப் பாய்ந்தது. அணுஆயுதங்கள் மற்றும் அதிக தொலைவில் உள்ள எதிரி இலக்குகளை தாக்கி அழிக்கும் அதிநவீன ஏவுகணைகளை தாங்கிச் செல்லும் வாகனமாக இது செயல்படும்.
வோடபோன் ஐடியா நிறுவனம் 'விஐ' எனும் தனது புதிய பிராண்ட்
  • வோடபோன்-ஐடியா நிறுவனங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே இணைக்கப்பட்டு விட்டன. அதிலிருந்து, இரண்டு மிகப்பெரிய நிறுவனங்களின் நெட்வொக்குகளை ஒருங்கிணைப்பதில் முழு கவனம் செலுத்தப்பட்டு வந்தது.
  • இந்த நிலையில், தற்போது நிறுவனத்தின் வா்த்தகத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில் நிறுவனத்தின் புதிய பிராண்ட் 'விஐ' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • வோடாபோன்-ஐடியா ஆகிய இரு நிறுவனங்களின் முதல் எழுத்தைக் கொண்டு புதிய பிராண்ட் உருவாக்கப்பட்டுள்ளது.
  • தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய பிராண்ட் உலகின் மிகப்பெரிய இரு தொலைத்தொடா்பு நிறுவனங்கள் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டதை குறிப்பது மட்டுமின்றி எதிா்கால பயண இலக்கையும் நிா்ணயிப்பதாக அமைந்துள்ளது. 
  • நடப்பாண்டு ஜூன் மாத இறுதி நிலவரப்படி வோடபோன் ஐடியா நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளா் எண்ணிக்கை 28 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கண் தானம் செய்ய விரும்புவோருக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட இணைய தளம்
  • கண் தானம் செய்ய விரும்புவோருக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட இணையதளத்தை, முதல்வர், இ.பி.எஸ்., துவக்கி வைத்து, கண்தானம் செய்தார். 
  • கண் தானம் செய்ய விரும்புவோர், யாரிடம் உறுதிமொழி கொடுப்பது, இறந்தபின் எவ்வாறு, எங்கு, எப்படி கண்களை தானமாக கொடுப்பது போன்ற விவரங்கள், தெரியாமல் உள்ளனர். 
  • இது குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தமிழகத்தில் கண்தானம் செய்ய விரும்புவோர் குறித்த பதிவேட்டை ஏற்படுத்தவும், www.hmis.tn.gov.in/eye-donor என்ற, புதிய இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது.
  • இந்த இணையதளத்தில், கண் தானம் செய்ய விரும்புவோர், தங்கள் பெயர், இருப்பிட முகவரி,மொபைல் போன் எண், 'இ -- மெயில்' முகவரிபோன்ற, தகவல்களை பதிவு செய்து, கண் தானத்திற்கான உறுதி மொழியை ஏற்க வேண்டும்.
  • அதற்கான சான்றிதழை, நேரடியாக இணையதளம் வழியாக, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.சான்றிதழை பதிவு செய்யப்பட்ட, மின்னஞ்சல் வழியாகவும் பெற்றுக் கொள்ளலாம். 
சிவகங்கை அருகே ஆசிரியம் பற்றிய 13ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு
  • சிவகங்கை அருகே கோமாளிபட்டியில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 2 ஆசிரியம் கல்வெட்டுகளை சக்கந்தியைச் சேர்ந்த மலைராஜன் உதவியுடன் கானப்பேரெயில் தொல்லியல் குழுமத்தைச் சேர்ந்த இலந்தக்கரை ரமேஷ், கருங்காலி விக்னேஷ்வரன், காளையார்கோவில் சரவணமணியன் ஆகியோர் கண்டறிந்துள்ளனர்.
  • கல்வெட்டுகள் குறித்து அவர்கள் கூறியதாவது: ஆசிரியம் என்றால் அடைக்கலம் தருதல், பாதுகாப்பு தருதல் என்று பொருள். ஆசிரியம் சொல்லுடன் காணப்படும் கல்வெட்டுகள் இதுவரை தமிழகத்தில் 70-க்கும் குறைவாகவே கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • பெரும்பாலும் புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் காணப்படுகின்றன. ஆசிரியம் கல்வெட்டுகள் பெரும்பாலும் தனி கற்களில் பொறிக்கப்பட்டு நடப்பட்டவையாக உள்ளன. 
  • சோழர், பாண்டியர்கள் ஆட்சிக்காலத்தில் ஊரவர், நாட்டவர், சிற்றரசர், படைப்பிரிவைச் சார்ந்தோர் தலைமையில் அந்தந்த பகுதிகளில் படைகளை உருவாக்கி ஊர்களை பாதுகாத்து வந்துள்ளனர்.
  • சோழர், பாண்டியர்களுக்கு பிறகு மதுரை சுல்தான்கள் ஆட்சி காலத்திலும் ஆங்காங்கே படைகள் இருந்தன. ஆனால் அவர்கள் ஆட்சி நிலையற்று இருந்ததால் நாட்டு மக்களின் உடைமைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாமல் போனது.
  • இதையடுத்து அவரவர் தங்களது உயிர், உடமைகளை பாதுகாக்க படைகளை வைத்து கொண்டனர். படைவீரர்களுக்கு சில உரிமைகள், வருவாய்களை ஏற்படுத்திக் கொடுத்தனர்.
  • தற்போது கோமாளிப்பட்டியில் கிடைத்திருக்கும் இரண்டு கல்வெட்டுகளில் ஒன்று பதிமூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியையும், மற்றொன்று பதிமூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியையும் சேர்ந்தது. 
  • முற்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டில் வில், அம்பு சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு மூலம் படைவீரர்கள் கேழாநிலை (தற்போதைய கீழாநிலைக்கோட்டையாக இருக்கலாம்) என்ற ஊரில் தங்கியிருந்து இரட்டகுலகாலபுரம் நகரத்தார்க்கு பாதுகாப்பு தந்துள்ளனர்.
  • பதிமூன்றாம் நூற்றாண்டு பிற்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டில் பூரண கும்ப சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு மூலம் குலசேகர பாண்டியன் தனது ஆட்சிக்காலத்தில் படையை உருவாக்கி அப்பகுதிக்கு பாதுகாப்பு தந்துள்ளார் என்பதை காட்டுகிறது, என்று கூறினர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel