Type Here to Get Search Results !

TNPSC 24th SEPTEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

திருச்சி 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த யானை குத்தி பட்டான் நடுகல் கண்டெடுப்பு

  • திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள வாளாடியில் நடுகல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 
  • இது நடுக்கல் என்றும், யானை குத்தி பட்டான் கல் என்று அழைக்கப்படும் இக்கல், கிபி 12ஆம் நூற்றாண்டில் பெரம்பலூர் வனப்பகுதியில் இருந்து யானைகள் வேளாண் பொருட்களை தேடி இப்பகுதிக்கு வந்திருக்கக் கூடும் என்றும் அந்த யானையைக் கொன்ற வீரனுக்கு அல்லது யானையினால் கொல்லப்பட்ட வீரனுடைய நினைவாக இந்த நடுகல் நாட்டப்பட்டிருக்கும் என்று தெரிவித்தார்.
  • யானை குத்தி பட்டான் கல் என்பது ஊருக்குள் நுழையும் யானையை வீரன் ஒருவன் கொன்றாலோ அல்லது வீரனை யானை கொன்றாலே அதன் நினைவாக வைக்கப்படும் நடு கல்லாகும். 

அகரம் அகழாய்வில் 20 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிப்பு

  • கீழடியில் கடந்த பிப்ரவரி 19-ந் தேதி முதல் 6 ஆம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. அருகேயுள்ள அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களிலும் அகழாய்வு விரிவுபடுத்தப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. 
  • இதுவரை இப்பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொன்மையான பொருள்கள், கட்டிட அமைப்புகள், சுவர்கள், வடிகால் வசதி , மனிதர்கள், குழந்தைகளின் எலும்புகள், விலங்கு வகை எலும்புகள் மற்றும் குறைந்த அடுக்கு கொண்ட உறைகிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
  • செப்டம்பர் 3- ந் தேதியுடன் கீழடியில் நடந்து வரும் அகழாய்வுப் பணிகள் நிறைவு பெறுகின்றன. இந்நிலையில் அகரத்தில் நடந்து வரும் அகழாய்வில் 20 அடுக்குகளுக்கும் மேல் உள்ள வட்ட வடிவிலான உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இதுவரை 6ஆம் கட்ட அகழாய்வில் கிடைத்த உறைகிணறுகளின் உயரத்தை விட தற்போது இங்குக் கிடைத்துள்ள உறைகிணறு அதிக உயரம் கொண்டதாக உள்ளது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel