- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் உள் கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கும் இந்நிறுவனத்தின் வைப்பீட்டாளர்களின் நலனிற்காக www.tnpowerfinance.com என்ற புதிய வலைதளமும், TNPFCL என்ற கைப்பேசி செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.
- இவற்றை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் துவக்கி வைத்தார். இப்புதிய வலைதளத்தின் மூலமாக பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் உள்ள 8 ஆயிரம் பயனாளிகளுக்கு 30 கோடி ரூபாய் நிதியை முதலமைச்சர் வழங்கினார்.
- இந்நிறுவனம் பொதுமக்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வைப்பீடுகள் மூலம் நிதி திரட்டி வருகிறது. மேலும், இந்நிறுவனம் பொது நிதி நிறுவனமாக பத்து இலட்சத்திற்கும் மேலான வைப்பீட்டாளர்களுக்கு பொதுத்துறை வங்கிகளை விட அதிக வட்டியை அளித்து வருகிறது.
TNPFCL MOBILE APP / TNPFCL என்ற கைப்பேசி செயலி
July 10, 2020
0