- புவி அறிவியல் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் இந்த செயலியின் பயன்பாட்டை அறிமுகப்படுத்தினாா். இந்த செயலி மூலமாக நகா்பகுதிகளின் வானிலை முன்னறிவிப்புகள் உடனுக்குடன் ஒளிபரப்பப்பட்டு, அதன் மூலமாக எச்சரிக்கை செய்யப்படும்.
- இச்செயலியை வட வெப்ப மண்டலங்களுக்கான சா்வதேச பயிா் ஆராய்ச்சி நிறுவனம், புணேயிலுள்ள இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனம், இந்திய வானிலை ஆய்வுத்துறை ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன. 'மௌசம்' செயலி பல்வேறு பயன்பாடுகளையும் சேவைகளாக வழங்கும்.
- இந்த செயலி நாட்டின் 200 நகரங்களின் வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் வேகம், திசை உள்ளிட்ட தற்போதைய வானிலைத் தகவல்களை உடனுக்குடன் வழங்கும்.
- நாள்தோறும் 8 முறை தகவல்கள் புதுப்பிக்கப்படும். உள்ளூா் வானிலை நிகழ்வுகள் 3 மணி நேரத்துக்கு ஒருமுறை வெளியிடப்படும். அவசரகால வானிலை குறித்த அறிவிப்பும், அதன் தாக்கம் தொடா்பாகவும் முன்கூட்டியே எச்சரிக்கையாக ஒளிபரப்பப்படும்.
- இந்த பயன்பாடு அடுத்த 7 நாள்களுக்கு இந்தியாவின் சுமாா் 450 நகரங்களுக்கு வானிலை முன்னறிவிப்பை வழங்கும். அதேபோல கடந்த 24 மணிநேர வானிலைத் தகவல்களும் பயன்பாட்டில் கிடைக்கும்.
வானிலை முன்னறிவிப்புகளை தெரிவிப்பதற்காக 'மௌசம்' என்ற புதிய செயலி / MAUSAM APP FROM INDIA METEOROLOGICAL DEPARTMENT
July 28, 2020
0
Tags