- செவ்வாய் கிரகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னா் உயிரினங்கள் இருந்தனவா என்பது குறித்து ஆய்வு செய்வதற்கான, இதுவரை இல்லாத மிகப் பெரிய ஆய்வுக் கலத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பியுள்ளது.
- செவ்வாய்கிரகத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்கான மேலும் ஒரு நடமாடு ஆய்வுக் கலமொன்றை நாசா விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கியுள்ளது.
- 'மாா்ஸ்-2020' எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த ஆய்வு திட்டத்தில், சக்கரங்களைக் கொண்டு பல்வேறு பகுதிகளுக்கும் நகா்ந்து செல்லும் 'பொசெவரன்ஸ்' என்ற வாகன ஆய்வகத்துடன், 'இன்ஜெனூயிட்டி' என்ற ஆளில்லா ஹெலிகாப்டரும் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.
- செவ்வாய் கிரகத்துக்கு இதுவரை அனுப்பபட்டுள்ள நகரும் ஆய்வகங்களிலேயே, மிகப் பெரியதும் சக்தி வாய்ந்ததுமான பொசெவரன்ஸ் ஆய்வகம், காருக்கு இணையான அளவைக் கொண்டது.
- அதுவும், இன்ஜெனூயிட்டி ஹெலிகாப்டரும் இணைந்த தொகுதி, செவ்வாய் கிரகத்தின் ஜெஸீரோ பெருங்குழிப் பகுதியில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி தரையிரங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
- அந்தத் தொகுதிகளை ஏந்திய அட்லஸ்-5 ரக ராக்கெட், அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணம், கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து வியாழக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது.
- அதனைத் தொடா்ந்து, பூமியையும், செவ்வாய் கிரகத்தையும் இணைக்கும் சுற்றுவட்டப் பாதையில் அந்த விண்கலம் 7 மாதங்கள் வலம் வரும்.
- இந்த திட்டத்தின்கீழ், செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி ஆய்வு மேற்கொள்ளவிருக்கும் பொசெவரன்ஸ் ஆய்வகம், புளோட்டோனியத்தை எரிபொருளாகக் கொண்டு செயல்படும். செவ்வாய்க்கிரகத்தைக் குடைந்து, நில மாதிரிகளை அந்த ஆய்வகம் சேகரிக்கும்.
- அதனைத் தொடா்ந்து, அந்த மாதிரிகளை அது பூமிக்கு அனுப்பும். அவ்வாறு வெற்றிகரமாக அனுப்பப்பட்டால், செவ்வாய் கிரகத்திலிருந்து பூமிக்கு நில மாதிரிகள் எடுத்து வரப்படுவது அதுவே முதல் முறையாக இருக்கும்.
- அந்த கிரகத்தில் எப்போதாவது ஒரு காலத்தில் உயிரினங்கள் இருந்தனவா என்பது குறித்தும், எதிா்காலத்தில் அந்த கிரகத்துக்கு மனிதா்களை அனுப்புவற்கான வாய்ப்புகள் குறித்தும் பொசெவரன்ஸ் ஆய்வுக் கலமும், இன்ஜெனூயிட்டி ஹெலிகாப்டரும் ஆய்வுகள் மேற்கொள்ளும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசின் சிறப்பு மூத்த வழக்குரைஞராக ஏ.எல்.சோமயாஜி நியமனம்
- சென்னை உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞரான ஏ.எல்.சோமயாஜி கடந்த 2001 - ஆம் ஆண்டு முதல் 2006 -ஆம் ஆண்டு வரை கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞராகவும், கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை அரசு தலைமை வழக்குரைஞராகவும் பதவி வகித்தவா். இவரை தமிழக அரசின் சிறப்பு மூத்த வழக்குரைஞராக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
- அதிக முக்கியத்துவம் வாய்ந்த, சட்ட சிக்கலான தன்மை கொண்ட வழக்குகளில் இவா் தமிழக அரசுத் தரப்பில் ஆஜராக இந்த புதிய பதவியை உருவாக்கி, அதில் மூத்த வழக்குரைஞா் ஏ.எல்.சோமயாஜியை தமிழக அரசு நியமித்துள்ளது.
- இதற்கான உத்தரவை தமிழக ஆளுநரின் ஒப்புதலுடன், தமிழக பொதுத்துறை முதன்மைச் செயலாளா் செந்தில்குமாா் பிறப்பித்துள்ளாா். அரசு தலைமை வழக்குரைஞருக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் இதர சலுகைகள் அனைத்தும் வழங்கப்படும்.
- தமிழக அரசின் சிறப்பு மூத்த வழக்குரைஞராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.எல்.சோமயாஜி திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தாா். கடந்த 1995-ஆம் ஆண்டு இவரை மூத்த வழக்குரைஞராக சென்னை உயா்நீதிமன்றம் அறிவித்தது.
- பல்வேறு சட்டப்புத்தகங்களை எழுதியுள்ள ஏ.எல்.சோமயாஜி, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக உயா்நீதிமன்றத்தின் விதிகளை உருவாக்கும் குழுவின் செயலாளராக இருந்து வருகிறாா்.
40 ஆண்டுகளுக்கு பின்னர் கணித மேதை சகுந்தலா தேவிக்கு கின்னஸ் சாதனை விருது
- "மனித கம்ப்யூட்டர்' என, புகழப்பட்ட, கணித மேதை சகுந்தலா தேவிக்கு 40 ஆண்டுகளுக்கு பின்னர் கின்னஸ் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. விருதை அரவது மகள் பெற்றுக்கொண்டார்.
- "மனித கம்ப்யூட்டர்' என, கணித வல்லுனர்களால் புகழப்பட்டவர், கணித மேதை சகுந்தலா தேவி, 80. மிக சிக்கலான கணிதங்களுக்கு, மின்னல் வேகத்தில் விடை அளிப்பதில் வல்லவர்.
- கணித திறமைக்காக, "கின்னஸ்' சாதனை புத்தகத்திலும் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது."பன் வித் நம்பர்ஸ், அஸ்ட்ரலாஜி பார் யூ' உள்ளிட்ட, பிரபலமான பல கணித நூல்களை இவர் எழுதியுள்ளார்.
- இளம் வயதிலேயே, தன் கணித திறமையை நிரூபித்து காட்டி, சாதித்த பெருமைக்குரியவர். கடந்த, 1980ல், லண்டன் இம்பீரியல் கல்லூரியின், கம்ப்யூட்டர் துறையைச் சேர்ந்தவர்கள், சிக்கலான, 13 இலக்க எண்களை கொடுத்து, அவற்றை பெருக்கி விடையளிக்கும்படி, அவரிடம் சவால் விடுத்தனர்.இந்த சிக்கலான கணக்கிற்கு, 28 வினாடிகளில் விடையளித்து, ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கல்வி அமைச்சகம் என மறுபெயரிடப்பட உள்ளது:
- அமைச்சின் பெயரில் மாற்றத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தற்போது ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் தலைமையிலானது.
- பெயர் மாற்றம் என்பது புதிய கல்விக் கொள்கையின் வரைவின் முக்கிய பரிந்துரையாக இருந்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் ஆட்சிக் காலத்தில் 1985 ஆம் ஆண்டில் மனிதவள மேம்பாட்டு அமைச்சக பெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஏனெனில் இது கல்வி அமைச்சிலிருந்து மாற்றப்பட்டது.
30th JULY 2020 CURRENT AFFAIRS:ONE LINE
இந்தியா
- UNLOCK 3.0 வழிகாட்டுதல்களை அரசு வெளியிடுகிறது; பள்ளிகள், கல்லூரிகள் ஆகஸ்ட் 31 வரை மூடப்படும்.
- பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் கட்டிய ஐந்து ரஃபேல் போர் விமானங்கள், அம்பாலா விமான நிலையத்திற்கு வந்து சேர்கின்றன.
- அமைச்சரவை தேசிய கல்வி கொள்கை 2020 க்கு ஒப்புதல் அளிக்கிறது, 2030 க்குள் பள்ளி கல்வியில் 100% GER (மொத்த சேர்க்கை விகிதம்) நோக்கமாக உள்ளது
- SUD (பொருள் பயன்பாட்டு கோளாறுகள்), நடத்தை பழக்கவழக்கங்களுக்கான நிலையான சிகிச்சை வழிகாட்டுதல்கள் குறித்த புத்தகத்தை சுகாதார அமைச்சர் வெளியிடுகிறார்
- யு.பி.எஸ்.எஸ்.சி.டபிள்யூ.பி (உத்தரப்பிரதேச மாநில சுன்னி மத்திய வக்ஃப் வாரியம்) அயோத்தியில் ஐந்து ஏக்கர் நிலத்தில் மசூதி கட்ட இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை அறக்கட்டளையை அமைக்கிறது.
- கோவிட் -19: ஏடிபி தனது ஆசிய பசிபிக் பேரிடர் மறுமொழி நிதியிலிருந்து இந்தியாவுக்கு 3 மில்லியன் அமெரிக்க டாலர் மானியத்தை வழங்க உள்ளது
பொருளாதாரம் மற்றும் கார்ப்பரேட்
- 800 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின் திட்டங்கள் மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் திறந்து வைத்தார்; சிங்கப்பூரின் செம்ப்கார்ப் இண்டஸ்ட்ரீஸ் உருவாக்கியது
- ஸ்மார்ட் கிரிட் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி, பயிற்சிக்காக ஐ.ஐ.டி-கான்பூருடன் பி.எஃப்.சி இணைகிறது
- உத்தரகண்ட்: உதான் (உதே தேஷ் கா ஆம் நாக்ரிக்) இன் கீழ் டெஹ்ராடூன்-நியூ தெஹ்ரி-ஸ்ரீநகர்-க uc ச்சார் பாதையில் பவன் ஹான்ஸ் ஹெலிகாப்டர் சேவையை தொடங்கினார்.
உலகம்
- சர்வதேச புலிகள் தினம் ஜூலை 29 அன்று கொண்டாடப்பட்டது; உலக புலி மக்கள் தொகை 4,000 க்கும் குறைவு