Type Here to Get Search Results !

23rd JULY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF


தேசிய ஒளிபரப்பு நாள் 
  • ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 23 அன்று, இந்தியா முழுவதும் தேசிய ஒளிபரப்பு நாள் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஒளிபரப்பப்பட்ட முதல் வானொலி ஒலிபரப்பை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
  • https://www.tnpscshouters.com/2020/07/national-broadcasting-day.html
Digantara-திகன்தாரா(இந்தியாவின் முதல் சுற்றுப்பாதையில் உள்ள விண்வெளி குப்பைகள் கண்காணிப்பு)
  • திகன்தாரா என்று அழைக்கப்படும் ஒரு விண்வெளி தொடக்கமானது இந்தியாவின் முதல் சுற்றுப்பாதையில் உள்ள விண்வெளி குப்பைகள் கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு முறையை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பு LIDAR (Light Detection and Ranging) தொழில்நுட்பத்தில் இயங்குகிறது.
  • https://www.tnpscshouters.com/2020/07/Digantara.html

முதலீட்டாளா்களின் எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்ய புதிய இணையதளம்: முதல்வா் தொடக்கி வைத்தாா்
  • தமிழகத்தில் முதலீடுகளைச் செய்ய விரும்பும் முதலீட்டாளா்களின் எதிா்பாா்ப்பைப் பூா்த்தி செய்யும் வகையில் தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. www.investingintamilnadu.com என்ற இந்த இணையதளத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வா் பழனிசாமி தொடக்கி வைத்தாா்.
  • இந்த இணையதளத்தில் தொழில் துறை தொடா்பான பல முக்கிய தகவல்களும், தமிழகம் ஏன் முதலீட்டுக்கு ஏற்ற மாநிலம் என்பதற்கான விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன. 
  • மேலும், தமிழகம் முன்னணி பெற்று விளங்கும் சிறந்த துறைகளான ஆட்டோமொபைல், வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல், மின்னணு மற்றும் வன்பொருள், வானூா்தி மற்றும் ராணுவ தளவாட உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதுசாா்ந்த சேவைகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கனரக பொறியியல், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தி, வேதிப் பொருள்கள் உற்பத்தி, மருந்து உற்பத்தி, உருக்கு, கண்ணாடி, தொழிற்பூங்காக்கள் தொடா்பான தமிழக அரசின் கொள்கைகள் உள்பட பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
  • அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளைச் சோந்தவா்களும் தங்களது கருத்துகளையும் பகிா்ந்துள்ளனா். தமிழகத்தில் முதலீடு செய்ய விரும்புவோருக்கான ஒரு அறிமுகத் தகவல்கள் அடங்கிய விளக்கக் கையேடாக இந்த இணையதளம் அமைந்திருக்கிறது.
மத்திய நிலக்கரி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்
  • மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் சார்பில் நாடு முழுவதும் 10 மாநிலங்களுக்குட்பட்ட 38 மாவட்டங்களில் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மரக்கன்றுகள் நடப்படும். இந்த திட்டத்தின் தொடக்க நாளான 600 ஏக்கரில் மரக்கன்றுகள் நடப்படும். 
  • இதற்காக 5 லட்சம் மரக்கன்றுகள் விநியோகிக்கப்படும். இயற்கையே நமது தாய் அதை அழிக்கக் கூடாது என்பதுதான் இந்திய கலாச்சாரம். ஆனால் வளர்ச்சி என்ற பெயரில் நாம் இதை மறந்துவிட்டோம். இதனால்தான் பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதுடன் பருவநிலையும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
தமிழகத்தில் புதிய தொழில் தொடங்க 16 நிறுவனங்களுடன் ரூ.5,137 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
  • தமிழகத்தில் தொழில் தொடங்க 16 தொழில் நிறுவனங்களுடன் ரூ.5,137 கோடி முதலீட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. 
  • தமிழ்நாட்டில் 16 புதிய தொழில் திட்டங்களை துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டன.
  • இத்திட்டங்கள் மூலம், 5,137 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு சுமார் 6,555 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இந்த 16 திட்டங்களில், 6 திட்டங்களுக்கு நேரடியாகவும், 10 திட்டங்களுக்கு காணொலிக் காட்சி மூலமாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. 
  • இத்திட்டங்களின் விவரங்கள்: செங்கல்பட்டு மாவட்டம் சிறுசேரியில் 2,300 கோடி ரூபாய் முதலீட்டில் தகவல் தரவு மையம், காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் வல்லம் வடகால் தொழிற்பூங்காவில் 500 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 320 கோடி ரூபாய் முதலீட்டில் போக்குவரத்து உபகரணங்கள் உற்பத்தி செய்யும் திட்டம், 
  • திருநெல்வேலி மாவட்டம் சிப்காட் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில், 250 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டம், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் 100 கோடி ரூபாய் முதலீட்டு திட்டம், 
  • திண்டுக்கல் மாவட்டத்தில் 100 கோடி ரூபாய் முதலீட்டில் சேமியா உற்பத்தி தொழிற்சாலை, செங்கல்பட்டு மாவட்டம் சிறுசேரியில் 750 கோடி ரூபாய் முதலீட்டில் தகவல் தரவு மையம், 
  • காஞ்சிபுரம் அல்லது செய்யார் பகுதியில் 500 கோடி ரூபாய் முதலீட்டில் லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி செய்யும் திட்டம், 150 கோடி ரூபாய் முதலீட்டில் மின்சார பைக்குகள் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், அமெரிக்காவில் உள்ள அமெரிக்க தொழில் முனைவோர் சங்கத்தின் 7 தொழில் நுட்ப திட்டங்களுக்கு காணொலிக் காட்சி மூலமாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என மொத்தம், 16 திட்டங்களின் மூலம் தமிழ்நாட்டிற்கு 5,137 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, சுமார் 6,555 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். 
தியான்வென்-1 செவ்வாய்க்கு வெற்றிகரமாக விண்கலம் அனுப்பிய சீனா 
  • கொரோனா வைரஸ் பரவல், பொருளாதார நெருக்கடி, அமெரிக்காவுடனான வர்த்தக மோதல் உள்ளிட்ட பிரச்சனைகள் சூழ்ந்த சமயத்திலும், திட்டமிட்டபடி செவ்வாய் கிரகத்தை ஆராயும் தனது முதல் விண்கலத்தை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
  • லோங் மார்ச் 5 என்று பெயரிடப்பட்டுள்ள ஏவூர்தி ஹைனன் தீவிலிலுள்ள ஏவுதளத்திலிருந்து உள்ளூர் நேரப்படி 12:40 மணிக்கு இந்த விண்வெளி பயணத்தின் மிக முக்கிய அங்கமான ஆறு சக்கரம் கொண்ட ரோபோ உள்ளிட்டவற்றை சுமந்துகொண்டு விண்ணில் சீறிப்பாய்ந்தது.
  • செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையை இது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • தியான்வென்-1 அல்லது "சொர்க்கத்திற்கான கேள்விகள்" என்று அழைக்கப்படும் இந்த ரோவர் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையை அடைந்த பின்னரும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு மேற்பரப்பில் தரையிறங்க முயற்சிக்காது.
  • செவ்வாய் கிரகத்தில் நிலவும் மோசமான வானிலையில் சிக்கி ரோவர் செயலிழப்பதை தவிர்க்கும் வகையில், இந்த இடைப்பட்ட காலத்தில் அதன் மேற்பரப்பில் நிலவும் சூழ்நிலை குறித்து ஆராயும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபடுவார்கள். பொறுத்திருந்து முடிவு செய்யும் அணுகுமுறையானது 1970களில் அமெரிக்காவால் கடைபிடிக்கப்பட்டதாகும்.
  • கடந்த திங்கட்கிழமை முதல் அதற்கடுத்த 10 நாட்களில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டிருந்த மூன்று திட்டங்களில் இது இரண்டாவது ஆகும். 
  • அதாவது, கடந்த திங்கட்கிழமையன்று ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பியிருந்த நிலையில், இன்று இரண்டாவதாக சீனாவும் அந்த பட்டியலில் சேர்ந்துள்ளது. 
  • இந்த நிலையில், அடுத்த வாரம் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தனது விண்கலத்தை செவ்வாய் கிரகத்தை ஆய்வு அனுப்ப உள்ளது.
  • செவ்வாய் கிரகத்தின் உட்டோப்பியா சமவெளிக்கு உட்பட்ட பகுதியில் தரையிறங்க தீர்மானிக்கப்பட்டுள்ள இந்த விண்கலம், அந்த பகுதியின் நிலப்பரப்பின் மேல் மற்றும் கீழ்ப்பகுதியிலுள்ள புவியியல் அமைப்பு குறித்து ஆய்வு செய்யும்.
  • சூரிய மின்தகடுகளின் மூலம் கிடைக்கும் ஆற்றல் மூலம் இயங்கும் தியான்வென்-1 ரோவர் சுமார் 240 கிலோ எடை கொண்டது. இது 2000ஆவது ஆண்டுகளில் நாசாவால் பயன்படுத்தப்பட்ட ஸ்பிரிட் மற்றும் ஆபர்ச்சுனட்டி உள்ளிட்ட ரோவர்களை ஒத்தி இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
  • ரோவரில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை படம் எடுப்பதற்கும், ரோவருக்கு வழிகாட்டுவதற்கும் தேவையான கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதைத்தவிர்த்து ரோவரில் இணைக்கப்பட்டுள்ள ஐந்து கருவிகள் செவ்வாய் கிரகத்திலுள்ள பாறைகள் மற்றும் நீர் இருப்பை ஆய்வு செய்யும்.
தேசிய ஒளிபரப்பு நாள் 
  • ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 23 அன்று, இந்தியா முழுவதும் தேசிய ஒளிபரப்பு நாள் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஒளிபரப்பப்பட்ட முதல் வானொலி ஒலிபரப்பை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
  • https://www.tnpscshouters.com/2020/07/national-broadcasting-day.html
Digantara-திகன்தாரா(இந்தியாவின் முதல் சுற்றுப்பாதையில் உள்ள விண்வெளி குப்பைகள் கண்காணிப்பு)
  • திகன்தாரா என்று அழைக்கப்படும் ஒரு விண்வெளி தொடக்கமானது இந்தியாவின் முதல் சுற்றுப்பாதையில் உள்ள விண்வெளி குப்பைகள் கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு முறையை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பு LIDAR (Light Detection and Ranging) தொழில்நுட்பத்தில் இயங்குகிறது.
  • https://www.tnpscshouters.com/2020/07/Digantara.html
ஜூலை 23, 2020
  • அனாசிஸ் II: தென் கொரியாவின் முதல் இராணுவ செயற்கைக்கோள்
  • இந்தியா-இஸ்ரேல் 30 வினாடிகள் விரைவான COVID-19 சோதனையை உருவாக்க உள்ளது
  • ஜூலை 23: தேசிய ஒளிபரப்பு நாள்
  • கர்நாடக டிஜிட்டல் பொருளாதார மிஷனுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
  • இந்தியாவின் முதல் சுற்றுப்பாதையில் உள்ள விண்வெளி குப்பைகள் கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு
  • சீனா தனது முதல் செவ்வாய் கிரகத்தை அறிமுகப்படுத்தியது
  • டி.ஆர்.டி.ஓ COHID-19 சோதனை வசதியை டிஹார், லேவில் நிறுவுகிறது
  • UNEP மற்றும் IEA அறிக்கை: 2050 க்குள் உலகிற்கு குறைந்தது 14 பில்லியன் குளிரூட்டும் உபகரணங்கள் தேவைப்படும்
  • ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை முதன்முறையாக மெய்நிகர் செல்ல உள்ளது
  • சாஹில் சேத் பிரிக்ஸ் சி.சி.ஐ.யின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்
  • GoI: “சுவாச வால்வுகளுடன் கூடிய N95 முகமூடிகள் COVID-19 ஐத் தடுக்காது”
  • சர்வதேச ரயில்வே ஒன்றியத்தின் துணைத் தலைவராக அருண்குமார் பரிந்துரைக்கப்பட்டார்
  • நடிகர் சோனு சூத் “பிரவாசி ரோஜ்கர் ஆப்” அறிமுகப்படுத்தினார்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel