- தமிழக தொல்லியல் துறையின் தலைமை அதிகாரி ரஞ்சித் தலைமையிலான அலுவலர்கள் 5 குழுக்களாகப் பிரிந்து கடந்த 10 நட்களாக கொடுமணலில் அகழாய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வில் பழங்கால ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் பேசிய மொழியின் எழுத்து பொறிக்கப்பட்ட மண் பொருட்கள் கிடைத்துள்ளன.
- இதன் மூலம் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளுடனும் தமிழகத்துக்கு வணிக தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது.
- இதேபோல் நகைகளுக்கு பொருத்தப்படும் வண்ண கற்களை விற்கவும், கொடுமணலில் பட்டை தீட்டப்பட்ட ஆபரணக் கற்களை வாங்கவும் ஆப்கானிஸ்தான் நாட்டு வியாபாரிகள் வந்து சென்றதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
- மேலும், கல்மணி சங்குகள், பளிங்கு கற்கள், இரும்பு பொருட்கள் உள்ளிட்டவைகள் ஆய்வின் மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மிகப் பழமையான முதுமக்கள் தாழிகளும் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
- கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளை தொடர்ந்து கொடுமணலிலும் பண்டைய வரலாறு தேண்டி எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழர்கள் பண்டைய ஆப்கானிஸ்தானுடன் வணிகம் செய்ததற்கான ஆதாரம் கண்டெடுப்பு
June 12, 2020
0
Tags