Type Here to Get Search Results !

19th SEPTEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

கி.மு. 6 -ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்களிடம் எழுதும் பழக்கம்: நான்காம் கட்ட அகழாய்வு அறிக்கை வெளியீடு
  • கீழடியில் மேற்கொள்ளப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வு குறித்த அறிக்கையின் மூலம் தமிழ்ச் சமூகம் கி.மு. 6-ஆம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற சமூகமாக விளங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
  • மதுரை நகருக்கு தென்கிழக்கில் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் கடந்த 2018-ஆம் ஆண்டில் தமிழக அரசால் நடத்தப்பட்ட 4-ஆவது அகழ்வாய்வில் கிடைத்த பொருள்களை வைத்து கிடைத்த முடிவுகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.
  • அமெரிக்க ஆய்வகத்தில் சோதனையில் வெளியான தகவல்கள்: கீழடியில் 2018-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வின்போது சேகரிக்கப்பட்ட ஆறு கரிம மாதிரிகள் அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணம், மியாமி நகரத்தில் அமைந்துள்ள பீட்டா பகுப்பாய்வு சோதனை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் அதிகபட்சமாக 353 செ.மீ. ஆழத்தில் கிடைக்கப் பெற்ற கரிமத்தின் காலம் கி.மு. 580 என்று கணக்கீடு செய்யப்பட்ட ஆய்வறிக்கை கிடைத்துள்ளது.
  • இக்கால கணிப்பு கி.மு. 6-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 1-ஆம் நூற்றாண்டு வரை வளமையான பண்பாடு கொண்ட பகுதியாக கீழடி விளங்கியிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. தற்போது கிடைக்கப் பெற்றுள்ள சான்றுகளின் மூலம் வைகை நதிக்கரையில் நகரமயமாதல், கி.மு. 6-ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது என்பது தெளிவாகிறது. இதே காலகட்டத்தில்தான் வட இந்தியாவின் கங்கைச் சமவெளிப் பகுதியிலும் நகரமயமாதல் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
  • கீழடி அகழாய்வில் கிடைத்த அறிவியல் ரீதியான காலகணிப்புகள் தமிழ்- பிராமியின் காலம். மேலும், நூறாண்டுகள் (கி.மு.6-ஆம் நூற்றாண்டு) பழமை வாய்ந்தது எனும் முடிவுக்கு நம்மை இட்டுச் செல்கிறது. இதன் மூலம் 2,600 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழகம் எழுத்தறிவு பெற்ற சமூகமாக விளங்கியுள்ளதை நிலைநிறுத்த முடிகிறது.
  • வேளாண்மையே முதன்மைத் தொழில்: கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை (53 சதவீதம்) காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. இந்தப் பகுப்பாய்வு முடிவுகளின் மூலம் சங்ககாலச் சமூகம், வேளாண்மையை முதன்மைத் தொழிலாகக் கொண்டிருந்ததோடு கால்நடை வளர்ப்பையும் மேற்கொண்டிருந்தனர் என்பது தெளிவாகிறது.
  • கீழடியில் கிடைத்த ஓடுகள், செங்கற்கள், காரை ஆகியவற்றில் மண், சுண்ணாம்பு, இரும்பு, மெக்னீசியம், அலுமினியம் ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இங்கு நடத்தப்பட்ட ஆய்வுகளில் சுவர்கள், கட்டடங்களின் இடிபாடுகளும் கிடைத்தன. தரைகள் வழுவழுப்பான களிமண்ணால் மெழுகப்பட்டிருந்தன. 
  • கட்டடங்களைப் பொருத்தவரை அவற்றின் சுவர்கள், கூரை வரை எழுப்பப்பட்டிருக்கவில்லை. மாறாக சுவர்களுக்கு அருகில் கம்புகள் நடப்பட்டு கூரைகள் போடப்பட்டிக்கின்றன. அதே போன்று இந்த கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. 
  • இவற்றில் குவிரன், ஆத(ன்) உள்ளிட்ட பெயர்களும் முழுமையடையாத எழுத்துகளும் கிடைத்துள்ளன. இதில் ஆதன் என்ற பெயர், அதன் என்று குறிப்பிடப்படுகிறது. முற்கால தமிழ் பிராமியில், நெடிலைக் குறிக்க ஒலிக்குறியீடு இடும் வழக்கம் இல்லை என்பதால், இந்த தமிழ் பிராமி எழுத்துகள் காலத்தால் மிகவும் முந்தையவையாகக் கருதப்படுகின்றன.
  • நெசவுத் தொழில்- தாய விளையாட்டு: மேலும் கீழடியில் நூல் நூற்கப் பயன்படும் தக்கிளி, தறிகளில் பயன்படுத்தப்படும் தூரிகை, தறியில் தொங்கவிடும் கருங்கல் போன்றவையும் கிடைத்திருப்பதால், இப்பகுதியில் வாழ்ந்தவர்கள் நெசவுத் தொழிலிலும் ஈடுபட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 
  • இங்கு பல விளையாட்டுப் பொருள்கள் குறிப்பாக ஆட்டக் காய்கள், தாய விளையாட்டிற்கான பகடைக்காய்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன. இவை பெரும்பாலும் சுட்டமண்ணால் ஆனவை. 
  • அதேபோன்று பெண்கள் விளையாடும் வட்டச்சில்லுகள் 600 எண்ணிக்கையிலும், சிறுவர்கள் கயிறு சுட்டி விளையாடும் சுடுமண்ணாலான வட்டச் சுற்றிகள், வண்டி இழுத்து விளையாடும் வண்டிகளின் சக்கரங்கள் கிடைத்துள்ளன. மேலும் பெரியவர்கள் தங்கள் திறமையில் வெளிப்படுத்தும் வகையில் விளையாடும் சதுரங்க விளையாட்டுக்குப் பயன்படும் பல்வேறு அளவிலான 80 சதுரங்கக் காய்கள் கிடைத்துள்ளன.
  • தமிழகத்தில் ரோம் வணிகர்கள்: மேலும், வடமேற்கு இந்தியாவின் மகாராஷ்டிரம், குஜராத் போன்ற பகுதிகளில் பரவலாகக் காணப்படும் அகேட் மற்றும் கார்னீலியம் கற்களால் ஆன மணிகளும் கிடைத்துள்ளன.
  • ரோம் நாட்டை சேர்ந்த அரிட்டைன் பானை ஓடு மண்ணடுக்கின் மேல் நிலையில் கிடைத்திருக்கிறது. இவை ரோம் நாட்டில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்தவை. எனவே, ரோம் நாட்டைச் சேர்ந்த வணிகர்கள் அல்லது அழகன்குளத்தில் தங்கியிருந்த ரோம் நாட்டைச் சேர்ந்த வணிகர்கள் இந்தப் பகுதிக்கு வந்திருக்கலாம்.
  • இங்கு ஒட்டுமொத்தமாக சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், 650-க்கும் மேற்பட்ட விளையாட்டுப் பொருள்கள், 35 காதணிகள், பிற அணிகலன்கள் கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு தொடர்பான தொல்பொருள்கள் எவையும் தெளிவான முறையில் இதுவரை கிடைக்கவில்லையென தொல்லியல் துறையின் ஆய்வறிக்கை கூறுகிறது.



4 மாவட்டங்களில் 14 சேமிப்புக் கிடங்குகள்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்
  • தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் 14 புதிய சேமிப்புக் கிடங்குகளை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
  • வேலூர் மாவட்டம் பாச்சூர் கிராமத்தில் 2 சேமிப்புக் கிடங்குகள், கடலூர் மாவட்டம் கொட்டாரம் கிராமத்தில் 2 கிடங்குகள், மதுரை இடையப்பட்டி கிராமத்தில் 2 கிடங்குகள், திருநெல்வேலி மாவட்டம் முத்தூர் கிராமத்தில் 8 சேமிப்புக் கிடங்குகள் என மொத்தம் 14 சேமிப்புக் கிடங்குகளை முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார். ஒவ்வொரு சேமிப்புக் கிடங்குகளும் தலா ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்டதாகும்.
சென்னை ஐஐடி-யில் விண்வெளி தொழில்நுட்ப மையங்களின் முதல் மாநாடு
  • விண்வெளி தொழில்நுட்ப மையங்களின் (செல்) முதல் மாநாடு சென்னை ஐஐடி-யில் நடைபெற்றது.
  • நடைபெற்ற இந்த இரண்டு நாள் மாநாட்டில் விண்வெளி ஆராய்ச்சிக்கான நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பான ஆய்வுகள் குறித்தும், மையங்களின் புதிய கண்டுபிடிப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
  • விண்வெளி ஆராய்ச்சியில் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பைப் பெறும் வகையில், இந்திய விண்வெளி ஆய்வு மையமும் (இஸ்ரோ), மத்திய விண்வெளி துறையும் இணைந்து முன்னணி தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் விண்வெளி தொழில்நுட்ப மையங்களை அமைத்துள்ளன.
  • சென்னை, மும்பை, கான்பூர், காரக்பூர் ஐஐடி-க்களிலும், பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்திலும் (ஐஐஎஸ்சி) இந்த மையங்கள் ஏற்கெனவே செயல்பட்டு வருகின்றன. இப்போது, குவாஹாட்டி, ரூர்க்கி ஐஐடி-க்களிலும் தொடங்கப்பட்டுள்ளன.
ஆம் ஆத்மி பெண்.எம்.எல்.ஏ. அல்கா லம்பா தகுதி நீக்கம்
  • டில்லி, சாந்தினி சவுக் தொகுதியின், ஆம் ஆத்மி, எம்.எல்.ஏ., அல்கா லம்பா, 43. அந்த கட்சியின் முக்கிய பெண் தலைவர்களில் ஒருவராக இருந்தார். 
  • சமீபகாலமாக காங். மேலிடத்துடன் தொடர்பு வைத்திருந்ததையடுத்து அவர் மீது கெஜ்ரிவால் நடவடிக்கை எடுத்தார்.
  • இந்நிலையில் கடந்த 6-ம் தேதி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்து சோனியா சந்தித்து காங். கட்சியில் ஐக்கியமானார். டில்லி சட்டசபை சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல், அல்கா லாம்பாவிற்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டதையடுத்து. கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக இன்று அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.



அரசு பள்ளி மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன்: பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல்
  • பஞ்சாப் மாநிலத்தில் காங். முதல்வராக அமிரீந்தர் சிங் உள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில் இளைஞர்களுக்கு மொபைல் வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும் என காங். தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
  • இந்நிலையில் பஞ்சாப் அமைச்சரவை கூட்டம் முதல்வர் அமிரீந்தர் சிங் தலைமையில் நடந்தது. இதில் நடப்பு நிதியாண்டில் அரசு பள்ளிகளில் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 
  • இதன்படி வரும் டிசம்பரில் முதற்கட்டமாக, இத்திட்டம் அமல்படுத்தப்படும். இதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளதாக பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.
கல்வித்துறையில் மாற்றங்கள்
  • தற்போது தொடக்கக் கல்வி இயக்குநராக உள்ள கருப்புசாமி, மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • அதேபோல மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநர் ராமேஸ்வர் முருகன், பள்ளிசாரா கல்வி இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • அதேசமயம் பள்ளிசாரா கல்வி இயக்குநர் சேதுராமவர்மா தொடக்கக்கல்வி இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ். பதாரியா நியமனம்
  • இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ராகேஷ்குமார் சிங் பதாரியா நியமிக்கப்பட்டுள்ளார். ஆர்.கே.எஸ். பதாரியா வரும் 30-ந் தேதி விமானப் படை தளபதியாக பொறுப்பேற்க உள்ளார்.
  • இந்திய விமானப் படையில் தற்போது துணை தளபதியாக இருப்பவர் ராகேஷ்குமார் சிங் (ஆர்.கே.எஸ்) பதாரியா. 1980-ம் ஆண்டு விமானப் படையில் சேவையாற்றி வருகிறார் பதாரியா.
  • 2017-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை தென்னிந்திய விமான படை பிரிவின் கட்டளை தளபதியாக பணியாற்றினார் பதாரியா. 36 ஆண்டுகால விமானப் படை சேவையில் வாயு சேனா பதக்கம் உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.
  • கடந்த 2019-ம் ஆண்டு விமானப் படை துணை தளபதியாக பதாரியா நியமிக்கப்படார். தற்போது விமானப் படை தளபதியாக ஆர்.கே.எஸ். பதாரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
8 மாநிலங்கள் வழியே செல்லும் சாலைத்திட்டம் தனியார் அரசு பங்களிப்புடன் ரூ.30,000 கோடியில் செயல்பட உள்ளதாக தகவல்
  • தமிழ்நாடு, கர்நாடகம், மராட்டியம், அரியானா, ஆந்திரம் வழியே புதிய சாலை அமைக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் வழியாகவும் புதிய சாலை அமைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 
  • 8 மாநிலங்கள் வழியே செல்லும் சாலைத்திட்டம் தனியார் அரசு பங்களிப்புடன் ரூ.30,000 கோடியில் செயல்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.



தமிழ்நாடு வக்பு வாரியத்துக்கு புதிய அதிகாரி நியமனம்
  • தமிழ்நாடு வக்பு வாரியத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி சித்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • வக்பு வாரிய உறுப்பினர்களான அன்வர் ராஜா உள்பட 11 பேரின் பதவிக்காலம் செப்டம்பர் 6 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
  • இந்த நிலையில், தமிழ்நாடு வக்பு வாரியத்துக்கு சிறப்பு அதிகாரியாக சித்திக்கை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரை ஐஏஎஸ் அதிகாரி சித்திக் சிறப்பு அதிகாரியாக செயல்படுவார் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகராக பிரையன் நியமனம்
  • அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவர் ஜான் பால்டன். அவர் சிறப்பாக செயல்படவில்லை எனக்கூறி, பதவியில் இருந்து அதிபர் டிரம்ப் நீக்கினார். 
  • இந்நிலையில், புதிய ஆலோசகராக ராபர்ட் சி.பிரையன் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், ராபர்ட் சி. பிரையனுடன் நீண்ட நாட்கள் பணியாற்றி உள்ளதாகவும், அவர் சிறப்பாக பணியாற்றுவார் எனவும் கூறியுள்ளார்.
தேஜஸ் போர் விமானத்தில் பறந்த முதல் பாதுகாப்பு துறை அமைச்சர்
  • ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம், இந்தியாவில் உருவாக்கப்பட்ட குறைவான எடையுள்ள ஜெட் ஃபைடர் ஆகும்.
  • இந்நிலையில் இன்று பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வருகை தந்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், போர் விமானத்தில் வீரர்கள் அணிந்து கொள்ளும் சீருடையை அணிந்து கொண்டு தேஜஸ் விமானத்தில் பறக்க தயாரானார். பின்னர் தேஜஸ் விமானத்தில் அவரும், விமான படை தளபதி என்.திவாரியும் பறந்து சென்றனர்.
  • இந்திய தொழில்நுட்பத்தில் தயாரான தேஜஸ் போர் விமானத்தில் பறந்த முதல் பாதுகாப்புத் துறை அமைச்சர் என்ற பெருமையை ராஜ்நாத் சிங் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel