Type Here to Get Search Results !

1st JULY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

ஜூன் மாதத்தில் ரூ.99,939 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது: மத்திய நிதியமைச்சகம் தகவல்
  • 2019ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரியாக(ஜி.எஸ்.டி) ரூ.99,939 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 
  • சிஜிஎஸ்டி-ரூ.18,366 கோடி, எஸ்ஜிஎஸ்டி-ரூ.25,344 கோடி, ஐஜிஎஸ்டி-ரூ.47,772 கோடி, செஸ்-ரூ.8,457 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் புதிய நிதித்துறை செயலாளராக கிருஷ்ணன் நியமனம்
  • வீட்டு வசதித்துறை செயலாளராக இருந்த கிருஷ்ணன் தமிழக அரசின் நிதித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை செயலாளராக இருந்த சண்முகம், தலைமை செயலாளராக பொறுப்பேற்றதை தொடர்ந்து புதிய நிதித்துறை செயலாளராக கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதிய நிர்வாக இயக்குநராக கர்ணம் சேகர் பொறுப்பேற்பு
  • பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக கர்ணம் சேகர் பொறுப்பேற்றுள்ளார்.
  • ஏற்கெனவே அப்பதவியில் இருந்த ஆர்.சுப்ரமணியகுமாருக்கு பதிலாக கர்ணம் சேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கடந்த ஏப்ரல் மாதத்தில், கர்ணம் சேகர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சிறப்பு அதிகாரியாகவும், முழு நேர இயக்குநராகவும் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.



நீர்நிலைகளை பாதுகாக்க 'ஜல்சக்தி அபியான்' திட்டம் -மத்திய அரசு
  • நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க ' ஜல்சக்தி அபியான்' திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சனை தலைவிறித்து ஆடுகிறது. இந்த பிரச்னையை சரி செய்யவும், இயற்கை வளத்தைப் பாதுகாக்கவும் மத்திய அரசு ஜல் சக்தி அபியான் என்ற திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
  • இதன்முலம் இந்தியாவில் 257 மாவட்டங்களில் உள்ள 1,592 தாலுகா வாரியாக நீர்நிலைகள் கண்காணிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
  • தற்போது நாட்டிலுள்ள 255 மாவட்டங்கள் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் வறட்சியான மாவட்டங்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, நீர்ப் பாதுகாப்பு மற்றும் சேகரிப்பு திட்டங்களை ஊக்குவிக்க 'ஜல்சக்தி' அபியான் திட்டத்தை, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் டெல்லியில் இன்று தொடங்கியுள்ளது.
  • இதற்காக மத்திய அரசு 255 கூடுதல் மற்றும் இணைச்செயலாளர்களை ஏற்கனவே நியமித்துள்ளது. இவர்கள் வறட்சி மாவட்டங்களுகு பொறுப்பாளர்களாக இருந்து தண்ணீர் சேமிப்பு திட்டங்களை செயல்படுத்துவதுவதுடன் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். இன்று முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை ஒரு பகுதியாகவும், அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை ஒரு பகுதியாகவும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
கோவை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு மத்திய அரசின் விருது 
  • பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) அலுவலகங்களில் சிறந்த சேவைக்கான மத்திய அரசின் விருதை கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் பெற்றுள்ளது.
  • 20 முதல் 21 நிமிட காலத்திற்குள் கடவுச்சீட்டுக்களை பதிவு செய்யும் வகையில் செயல்படுவதால் இவ்விருது வழங்கப்பட்டுள்ளதாகவும், 2013 முதல் 2017 வரையிலும், அதன் பின் தற்போது என 6 முறை இவ்விருதை கோவை அலுவலகம் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அகில இந்திய வாலிபால் கஸ்டம்ஸ் அணி சாம்பியன்
  • அகில இந்திய ஜான் நினைவு வாலிபால் போட்டியில் சென்னை கஸ்டம்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.சென்னையில் நடைபெற்ற இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன. 
  • இறுதிப் போட்டியில் சென்னை கஸ்டம்ஸ் - எஸ்ஆர்எம் அணிகள் மோதின. இதில் கஸ்டம்ஸ் அணி 3-2 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணிக்கு கோப்பையுடன் ₹1 லட்சம் வழங்கப்பட்டது. 
  • 2ம் இடம் பிடித்த எஸ்ஆர்எம் அணிக்கு கோப்பையுடன் ₹75 ஆயிரம் கிடைத்தது.3வது இடம் பிடித்த ஐசிஎப் அணிக்கு ₹50 ஆயிரம், 4வது இடம் பிடித்த குஜராத் வருவான வரித்துறை அணிக்கு ₹30 ஆயிரம் வழங்கப்பட்டது.
  • தொடரின் சிறந்த வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட கோகுல்நாத் (கஸ்டம்ஸ்), எரின் (ஐசிஎப்), குருபிரசாந்த் (எஸ்ஆர்எம்), மனோஜ் (குஜராத்), மிதுன்குமார் (இந்தியன் வங்கி) ஆகியோருக்கு தலா ₹5 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel