- போரின் போது, எதிரி நாட்டிடம் சிக்கும் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, 1929ல், உலக நாடுகள் கூடி, ஜெனீவா ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கின.
- இதில், போர் கைதிகளாக சிக்கும் வீரர்களை எவ்வாறு நடத்த வேண்டும்; அவர்களுக்கு என்ன மரியாதை அளிக்க வேண்டும் என்பது குறித்து, விதிகள் உருவாக்கப்பட்டன.இரண்டாம் உலகப்போரின் போது, ஜெனீவா ஒப்பந்தத்தில் பல்வேறு குறைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
- அதன் பின், ஒப்பந்தத்தில் உள்ள குறைகளை நீக்க, பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டி இருந்தது. இதையடுத்து, 1949ல், போர் கைதிகள் நடத்தை விதிகள் உருவாக்கப்பட்டு, பல்வேறு சீர்திருத்தங்கள், ஜெனீவா ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்டன.
- அதன் விபரம்: * போர் கைதிகளை, எந்தவொரு நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தி விசாரணை நடத்தக் கூடாது; அவர்களுக்கு தண்டனை வழங்கக் கூடாது; கைது மட்டுமே செய்ய வேண்டும்* கைது செய்யப்பட்ட வீரர்கள், எந்த பதவியில் இருக்கின்றனரோ, அதற்குரிய மரியாதையை, அவருக்கு வழங்க வேண்டும்* உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, அவரை துன்புறுத்தக் கூடாது.
- சர்வதேச மனித உரிமை சட்டப்படி, கைது செய்யப்பட்ட வீரர்கள், தங்குவதற்கு இடம், உடை, உணவு, உரிய மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும்* கைது செய்யப்பட்ட வீரர்களை, ஏழு நாள் முடியும் போது, அவர்களது நாட்டிற்கு திரும்ப அனுப்ப வேண்டும் அல்லது போர் முடிந்த உடன் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
- ஏனென்றால், அவர் மீண்டும் படையெடுத்து வரக் கூடாது என்பதற்காக, இந்த கைது மேற்கொள்ளப்படுகிறது.
போர் கைதிகளை பாதுகாக்கும் ஜெனீவா ஒப்பந்தம் என்ன? GENEVA PACT
March 02, 2019
0
Tags