- 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று அண்ணாதுரையின் 105-வது பிறந்த தினத்தின் போது இது அறிமுகப்படுத்தப்பட்டது.
- சுத்தமான குடிநீர் உற்பத்தி மற்றும் விநியோகித்தல் திட்டம்.
- இத்திட்டத்தின் மூலம் சுத்தமான குடிநீரை உற்பத்தி செய்து ஒரு லிட்டர் நெகிழிப் புட்டிகளில் அடைத்து நீண்ட தொலைவு செல்லும் அரசுப் பேருந்துகள் மற்றும் பேருந்து நிலையங்களில் அவை விற்பனை செய்யப்படும்.
- ஒரு லிட்டர் புட்டியின் விலை ரூ.10 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டியில் உள்ள உற்பத்தி ஆலையத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தினால் இது செயல்படுத்தப்படுகிறது.
- நகரத்தில் உள்ள ஏழைக் குடும்பங்கள் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை இலவசமாகப் பெறுவார்கள்.
- முதல் பகுதியாக இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக சென்னையில் 100 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
- நீரில் மொத்தம் கரைந்த திடப் பொருட்கள் 50 ppm (Parts per million) அளவிற்கு கீழ் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அம்மா குடிநீர்
April 01, 2019
0