திட்டத்தின் நோக்கங்கள்
- பிறப்பு அடிப்படையிலான சாதி மற்றும் சமய உணர்வுகளை ஒழித்தல் மற்றும் சாதிகளுக்கிடையேயான திருமணத்தினை ஊக்குவிப்பதன் மூலம் பாகுபாட்டினை துடைத்தெறிதல்.
வழங்கப்படும் உதவிகள்
- ரூ.25,000 தொகையும் (ரூ.15,000 காசோலையாகவும் ரூ.10,000 தேசிய சேமிப்பு சான்றிதழாகவும்) திருமாங்கல்யம் செய்வதற்கான 8 கிராம் (1 சவரன் – 22 காரட்) தங்க நாணயமும் வழங்கப்படும்.
- ரூ.50,000 தொகையும் (ரூ.30,000 காசோலையாகவும் ரூ.20,000 தேசிய சேமிப்பு சான்றிதழாகவும்) திருமாங்கல்யம் செய்வதற்கான 8 கிராம் ((1 சவரன் – 22 காரட்) தங்க நாணயமும் வழங்கப்படும்.
தகுதியுடைய பயனாளிகள்
- சாதிகளுக்கிடையேயான திருமணம் செய்து கொண்ட தம்பதிகள்.
தகுதிகள்
- புதிதாக திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு நிதி உதவி அளிக்கப்படும். இதில் ஒருவர் கண்டிப்பாக பட்டியலிடப்பட்ட அல்லது பழங்குடியினத்தவராகவும் மற்றொருவர் மற்றுமொரு சாதியினராகவும் இருத்தல் வேண்டும்.
- புதிதாக திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு நிதி உதவி அளிக்கப்படும். இதில் ஒருவர் இதர அல்லது மேற்தட்டு வகுப்பினராகவும் மற்றொருவர் பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும் இருத்தல் வேண்டும்.