- இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு என இரண்டு அரசுகளும் இணைந்து தமிழ்நாட்டில் மீனவர் விபத்துக் குழு காப்புறுதித் திட்டத்தைச் செயல்படுத்துகின்றன.
- இத்திட்டத்திற்கான காப்புறுதி பிரிமியத் தொகையாக ஒரு மீனவருக்கு (தலா ரூ.7/- வீதம்) ஆண்டுக்கு ரூ.14/-வீதம் செலுத்துகிறது.
- இத்திட்டத்தின் கீழ், மீனவர் விபத்தில் இறந்தால் அல்லது முழுவதும் நிவர்த்தி செய்ய இயலாத முழு ஊனமடைந்தால் ரூ.50,000/-ம், பகுதி ஊனமடைந்தால் ரூ.25,000/-ம் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படுகிறது.
தகுதிகள்
- தமிழ்நாட்டிலுள்ள மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருக்கவேண்டும்.
- முழுநேர கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருக்கவேண்டும்.
விண்ணப்பப் படிவம்
- இந்தத் திட்டத்திற்கான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட மீன்துறை உதவி இயக்குனர் (கடல் வளம்), மாவட்ட மீன்துறை உதவி இயக்குனர் (உள்நாட்டு வளம்), மீன்துறை உதவி இயக்குனர் (நீர் வாழ் உயிரின வளர்ப்பு), மாவட்ட மீன்துறை உதவி இயக்குனர் (விரிவாக்கம் மற்றும் பயிற்சி)ஆகிய ஏதாவதொரு அலுவலகத்தில் பெற்று அதை முழுமையாக நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும்.