விண்வெளியில் செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தி சாதித்த இந்தியா
- பூமிக்கு 300 கி.மீ. உயரத்தில் ஒரு செயற்கைக் கோளை 3 நிமிடங்களில் சுட்டு வீழ்த்தியுள்ளது இந்தியா. நமது சொந்த குறைந்த புவி சுற்றுப் பாதை (low earth) செயற்கைக்கோளையே ஏ-சாட் ஏவுகணை மூலமாக, நாம் சுட்டு வீழ்த்தியுள்ளோம்.
- இன்றைய தினம் தன்னை ஒரு விண்வெளி சக்தி நாடாக இந்தியா பதிவு செய்துள்ளது. இதுவரை, அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகள்தான், இந்த சாதனையை செய்துள்ளன. இந்த சாதனை படைத்த 4 வது நாடு இந்தியாவாகும்.
- A-SAT ஏவுகணை இந்தியாவின் விண்வெளி திட்டங்களுக்கு, புதிய பலத்தை கொடுக்கும். நாட்டின் பாதுகாப்பு, பொருளாதார, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு, மிஷன் சக்தி மைல் கல்லாக இருக்கும். இந்த திட்டத்திற்கு உதவிகரமாக இருந்த விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துக்கள். இந்த திட்டத்திற்கு மிஷன் சக்தி என்று பெயரிடப்பட்டுள்ளது.
திப்பு சுல்தான் துப்பாக்கி ஏலம்
- பிரிட்டனின் பெர்க் ஷையர் மாகாணத்தில், ஒரு வீட்டிலிருந்து, இந்தியாவின் மைசூரை ஆண்ட, திப்பு சுல்தான் பயன்படுத்திய, வாள்கள், கைத்துப்பாக்கி உள்ளிட்ட எட்டு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
- இவை, நேற்று ஏலம் விடப்பட்டன. திப்பு சுல்தான் பயன்படுத்திய வாள், 98 லட்சம் ரூபாய்க்கும்; வெள்ளியால் ஆன கைத்துப்பாக்கி, 55 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் விடப்பட்டன.
தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தில் திருத்தம்: தமிழகத்தில் நாளொன்றுக்கு ரூ.229 ஊதியம்
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தில் (2005) மத்திய அரசு மேற்கொண்ட திருத்தம் தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- இதன்படி தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கான ஊதியம் நாளொன்றுக்கு தலா ரூ.229 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளது.
Vivo IPL 2019 தொடரின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை பெற்றது YuppTV
- தெற்காசிய நிகழ்ச்சிகளை ஆன்லைனில் ஒளிபரப்பிவரும் உலகின் தலைசிறந்த OTT பிளாட்ஃபார்ம்களில் ஒன்றான YuppTV தற்போது Vivo IPL 2019 தொடரை இந்தியா தவிர்த்த பிற உலக நாடுகளுக்கு டிஜிட்டலில் ஒளிபரப்புவதற்கான உரிமையைப் பெற்றுள்ளது.
- இதனால் இந்தியர்கள் மட்டுமல்லாது இனி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் 12-வது ஐ.பி.எல் சீசனை உடனுக்குடன் கண்டுகளிக்க முடியும்.
- ஆஸ்திரேலியா, காண்டிநெண்டல் யூரோப், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தெற்கு & மத்திய அமெரிக்கா மற்றும் தென் கிழக்கு ஆசியா & மத்திய ஆசிய நாடுகளில் உள்ள YuppTV வாடிக்கையாளர்கள் இதன் மூலம் ஐ.பி.எல் தொடரைக் கண்டுகளிக்க முடியும்.
ஏப்ரல் 18-ஆம் தேதி அரசு பொது விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு
- மக்களவை மற்றும் இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி அரசு பொதுவிடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
- மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 2-ஆம் கட்டமாக ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதனுடன், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
லசித் மாலிங்கவிற்கு ஐபிஎல் போட்டிகளில் பங்குபெற அனுமதி
- இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவிற்கு இந்தியன் பீரிமியர் லீக் போட்டிகளில் பங்கு பெறுவதற்கான அனுமதியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று வழங்கியுள்ளது.
- இதற்கிடையில், லசித் மாலிங்க, மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில், இந்த முறையில் இந்தியன் பீரிமியர் லீக் போட்டிகளில் பங்கேற்கவுள்ளார்.