சிறைத் துறை சார்பில் பெட்ரோல் நிலையங்கள்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்
- தமிழகத்தில் சிறைவாசிகள் புதிய வாழ்வைத் தொடங்கும் வகையில் அவர்களுக்கு பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்த பயிற்சிகளின் மூலமாக தயாரிக்கப்படும் பொருள்கள் சிறை அங்காடிகளின் வழியாக விற்பனை செய்யப்படுகின்றன.
- சிறை அங்காடிகளின் நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்தும் வகையில், தமிழக அரசின் சிறைத் துறை, இந்தியன் ஆயில் நிறுவனம் இணைந்து வேலூர் மத்திய சிறை வளாகத்தில் பெட்ரோல் நிரப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, கோவை, பாளையங்கோட்டை, புதுக்கோட்டை பார்ஸ்டல் பள்ளி ஆகிய இடங்களில் உள்ள மத்திய சிறைச்சாலை வளாகங்களிலும் பெட்ரோல் நிரப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
குஜராத்தில் சூரிய மின்சக்தி திட்டத்தை அமைக்கிறது அதானி கிரீன் எனர்ஜி
- குஜராத்தில் சூரியசக்தி மின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் அதற்கான திட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை குஜராத் ஊர்ஜா விகாஸ் நிகம் கோரியிருந்தது. அதில் கலந்து கொண்ட அதானி கிரீன் எனர்ஜிக்கு முற்றிலும் சொந்தமான அதானி ரினியூவபிள் எனர்ஜி பார்க் நிறுவனம் சூரிய மின் உற்பத்தி திட்டத்தை அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை பெற்றுள்ளது என்று அதானி கிரீன் எனர்ஜி செபியிடம் தெரிவித்துள்ளது.
- தற்போது அமைக்கப்படவுள்ள இந்த சூரியமின் உற்பத்தி திட்டம் வரும் 2020-21-ஆம் நிதி ஆண்டில் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோட்டக் மஹிந்திரா வங்கியிலிருந்து வெளியேறியது ஐஎன்ஜி குழுமம்
- கோட்டக் மஹிந்திரா வங்கியில் ஐஎன்ஜி குழுமம் இறுதியாக 1.20 சதவீத பங்கு மூலதனத்தை வைத்திருந்தது. தற்போது, அந்த பங்குகள் முழுவதையும் ஐஎன்ஜி விற்பனை செய்து விட்டது. இதையடுத்து, கோட்டக் மஹிந்திரா வங்கியிலிருந்து ஐஎன்ஜி குழுமம் முழுமையாக வெளியேறி விட்டது என அந்த வங்கி தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி! - இலங்கை வரலாற்று சாதனை
- தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இலங்கை அணி, தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தது.
- இதன்மூலம் தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த முதல் அணி என்ற பெருமையையும் இலங்கை அணி பெற்றது. குஷால் மெண்டிஸ் ஆட்ட நாயகனாகவும் குஷால் பெரேரா தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இஸ்லாமிய நாடுகள் கூட்டம்: இந்தியா பங்கேற்பு
- இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம், ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் மார்ச் 1, 2 தேதிகளில் நடக்க உள்ளது.
- இந்த மாநாட்டில், கவுரவ பார்வையாளராக பங்கேற்குமாறு, இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கான அழைப்பை, எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் ஜையத் அல் நஹயான் விடுத்தார். இதனை ஏற்று, இந்த மாநாட்டில் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்ள உள்ளார்.
பசு பாதுகாப்பு அமைப்பின் தூதராக ஹேமமாலினி நியமனம்
- பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்கவும், அவற்றை பாதுகாக்கவும் உத்திரப்பிரதேச அரசு கவ் சேவா என்ற பசு பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. தனி அதிகாரம் கொண்ட இந்த அமைப்பிற்கு மாநில பட்ஜெட்டில் இருந்து சுமார் ரூ.647 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- இந்நிலையில் கவ் சேவா அமைப்பிம் பிரச்சார தூதராக நடிகையும், மதுரா தொகுதியின் நாடாளுமன்ற உறுபினராக உள்ள ஹேமமாலினியை மாநில அரசு நியமனம் செய்துள்ளது. பசு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஹேமமாலினி ஈடுபடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற 'தங்க மங்கை' அபூர்வி சந்தேலா
- சர்வதேச துப்பாக்கி சுடுதல் பெடரேசன் சார்பில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்றார்.
- இதனையடுத்து வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை சீன வீராங்கனைகள் வென்றனர். துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்றுள்ள சந்தேலாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
சியோல் அமைதி பரிசு இந்திய பிரதமர் மோடிக்கு வழங்கல்
- சியோலில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விருதினை பெறும் முதல் இந்தியர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. இதற்கு முன்னர், ஐநா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலினா மெர்கல் ஆகியோர் இந்த விருதினை பெற்றுள்ளனர்.