- படுக்கை விரிப்பை விலை கொடுத்து வாங்கும் திட்டம் தமிழகத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் விரிவுபடுத்தப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில் பயணத்தின் போது குளிர்சாதன ரெயில் பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தலையணை, படுக்கை விரிப்பு மற்றும் கம்பளி ஆகியவை வழங்கப்படுகின்றன.
- இதேபோல் ஏ.சி. அல்லாத இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளுக்கு அந்த வசதி கிடைக்கும் வகையில் ‘இ–பெட் ரோல்’ திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
- இந்த திட்டம் ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் சில குறிப்பிட்ட ரெயில்களில் முதற்கட்டமாக நடைமுறைக்கு வந்தது. தமிழகத்தில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திலும், திருவனந்தபுரத்தில் திருவனந்தபுரம் சென்டிரல் ரெயில் நிலையத்திலும் நடைமுறைக்கு வந்து தற்போது செயல்பாட்டில் உள்ளது.
விரிவாக்கம்
- கடந்த 4 மாதங்களுக்கு மேலாக இந்த திட்டம் சென்னை சென்டிரல் மற்றும் திருவனந்தபுரம் சென்டிரல் ரெயில் நிலையங்களில் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. மேலும் தமிழகத்தில் உள்ள பிற ரெயில் நிலையங்களிலும் இதை விரிவுபடுத்தப்பட உள்ளது. அதற்கான முயற்சிகளை நாங்கள் தற்போது மேற்கொண்டு வருகிறோம்.
- விரைவில் இந்த திட்டம் பிற ரெயில் நிலையங்களிலும் அமலுக்கு வரும். தற்போது சென்னை சென்டிரலில் இந்த திட்டம் மூலம் நாளொன்றுக்கு 2 படுக்கை விரிப்பு மற்றும் ஒரு தலையணை அடங்கிய ஒரு ‘செட்’டை 10 பேர் வரை முன்பதிவு செய்து பெறுகிறார்கள்.