- பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் மதிப்பெண் பெறும் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவி, மேற்படிப்பினை தொடர இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு அண்ணல் காந்தியடிகளின் நினைவாக இப்பரிசுத் தொகை அளிக்கப்பட்டு வருகிறது.
- இந்த பரிசுத்தொகை முதல் வருடத்திற்கு ரூ.1500 வீதமும், அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.1000 வீதமும் வழங்கப்படுகிறது.
முதலமைச்சரின் தகுதிப் பரிசுகள்
- பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் /கிறுத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்களில் 15 மாணவிகளில் முதல் 1000 பேருக்கும் அவர்களது மேற்படிப்பை தொடர்ந்து படித்தால் ஆண்டு ஒன்றுக்கு ஒவ்வொருவருக்கும் ரூ.1500/- வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு தகுதிப்பரிசு வழங்கப்படுகிறது.
தமிழக அரசின் சிறப்பு உதவித் தொகை திட்டம் (போஸ்ட்-மெட்ரிக்)
- 10ம் வகுப்பிற்கு மேற்பட்ட படிப்பிற்கான (போஸ்ட்-மெட்ரிக்) தமிழக அரசின் சிறப்பு உதவித் தொகை திட்டம்
- மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற இயலாத கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவ / மாணவியர்க்கு 10ம் வகுப்பிற்கு மேற்பட்ட படிப்பிற்காக (போஸ்ட்-மெட்ரிக்) சிறப்பு உதவித்தொகை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
- இதன்படி விடுதியில் தங்காது 10ம் வகுப்பிற்கு மேற்பட்ட படிப்பு பயிலும் மாணவ / மாணவியர்க்கு மாதம் ஒன்றிற்கு ரூ.65 முதல் ரூ.125 வரையில் பராமரிப்புப்படி மற்றும் கட்டாயக் கட்டணங்கள், படிப்புக்கு ஏற்றவாறு உதவித் தொகை வழங்கப்படுகிறது.
- மேலும், இவ்வுதவித் திட்டத்தின் கீழ், தொழிற் பயிற்சி மற்றும் இதர பயிற்சிகள் பெற 10ம் வகுப்பு தேர்ச்சி தேவையில்லாத இனங்களும் போஸ்ட் மெட்ரிக் படிப்பாகக் கருதப்பட்டு, அதற்குரிய உதவித்தொகை வழங்கப்படுகிறது. மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் இக்கல்வி உதவித் தொகைகள் அந்தந்த கல்வி நிறுவனத்தின் மூலமாக மாணவ / மாணவியர்க்கு வழங்கப்படுகிறது.
பெரியார் ஈ.வெ.ரா. நாகம்மை இலவச படிப்பு திட்டம்
- அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பட்டப்படிப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசக் கல்வி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பு பயில விரும்பும் ஏழை மாணவிகளில் நலனைக் காப்பதற்காகவும் பட்ட மேற்படிப்பில் இலவச கல்வியை பெறுவதற்காகவும் பெரியார் ஈ.வெ.ரா. நாகம்மை திட்டம் பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவிகளுக்கு 2007-2008ஆம் ஆண்டு முதல் வழங்க ஆணையிடப்பட்டது.
- இக்கல்வியாண்டிலிருந்து இத்திட்டத்தின் கீழ் பயன் பெறும் மாணவியரின் பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு 24 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்:
- வேறு குழந்தைகள் இல்லாமல் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே உள்ள குடும்பங்களில் பெற்றோரில் எவரேனும் ஒருவர் 35 வயதுக்கு முன்னதாக குடும்பக் கட்டுபாட்டு அறுவைச் சிகிச்சை செய்திருந்தால், குழந்தையின் பெயரில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை மேம்பாட்டு நிறுவனத்தில் அரசு ரூ,22 ஆயிரத்து 200 டெபாசிட் செய்யும்.
- டெபாசிட் செய்யப்பட்ட நாளிலிருந்து ஐந்தாண்டு முதல் கிடைக்கும் வட்டித் தொகையில் இருந்து மாதம் ஒன்றுக்கு நூற்று ஐம்பது ரூபாய்
- அந்த பெண் குழந்தை கல்வி பயில்வதற்காக வழங்கப்படுகிறது. இருபதாம் ஆண்டில் முழுமையாக வட்டியுடன் கூடிய முதிர்வுத் தொகை அப்பெண்ணின் மேற்படிப்பு மற்றும் திருமண செலவிற்கு உதவும் வகையில் வழங்கப்படும்.