- அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சுகாதாரத் தகவல் மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப் பட உள்ளது. அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளின் சிகிச்சை குறித்த விவரங்களை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
- தமிழகத்தில் உள்ள 1771 ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தபட்டது. ஆரம்பச் சுகாதார நிலையங்களின் மாத அறிக்கை இந்த மென்பொருளில் பதிவேற்றப்படுகிறது.
நோயளிகள் பின்பற்ற வேண்டியவைகள்
- பதிவு எண்ணுடன் கூடிய O.P சீட்டினை பத்திரமாக வைத்திருங்கள்
- அடுத்த முறை வரும்போது மருத்துவமனையில் காத்திருக்கும் நேரம் மிக குறையும்.
- பரிசோதனை செய்த பின் கணினியின் மூலம் பரிசோதனை முடிவு- மருந்து வழங்குதல் போன்றவை மிக எளிதாக கிடைக்கப்பபெறுகிறது.
- மறுமுறை சிகிச்சைக்கு வரும்போது ஆய்வக குறிப்புகளை தவறாமல் எடுத்து வரவும்.
- உங்கள் O.P பதிவு எண்ணினை பயன்படுத்தி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கணினி மூலம் முன்சிகிச்சை விவரங்களையும், தொடர் சிகிச்சைகளையும் எளிதாக பெறலாம்.