Type Here to Get Search Results !

சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியம்

சொட்டு நீர் பாசன வசதி
  • சிறு, குறு விவசாயிகள் 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பதற்கு இதுவரை இருந்த பரப்பு வரம்பு நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தாங்கள் விரும்பும் பரப்பு முழுமைக்கும் 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து பயன் பெறலாம்.
  • நாளுக்கு நாள் நீர்த்தேவை அதிகரித்து வரும் நிலையில், சிக்கனமாக நீரைப் பயன்படுத்தி, வருங்காலத் தலைமுறைக்கு வளமான நீர்வளத்தை விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். மேலும், அபரிமிதமாக நீரைப் பயன்படுத்துவதைவிட அளவாக பயன்படுத்தும் போதுதான் நிறைவான மகசூல் பெற முடிகிறது என்பது அறிவியல் பூர்வமாகவும், அனுபவப் பூர்வமாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  • எனவேதான் நீர்ச் சிக்கனத்துக்கும், நிறை மகசூலுக்கும் ஒருசேர வழிவகுக்கும் சொட்டு நீர்ப்பாசன முறையை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் வழங்கி உதவுகிறது.
  • ஒரு பயனாளிக்கு இதுவரை அதிகபட்ச 100 சதவீத மானியம் ரூ. 43,816ஆக இருந்தது. எனவே, 1.2 மீட்டருக்கு 0.6 மீட்டர் எனக் குறுகிய இடைவெளியில் சாகுபடி செய்யும் காய்கறி போன்ற பயிர்களுக்கு ஒரு ஏக்கர் பரப்பிற்கு மட்டுமே 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க முடியும்.
  • 10 மீட்டருக்கு 10 மீட்டர் இடைவெளியில் நடப்படும் மா போன்ற பயிர்களுக்கு சிறு விவசாயிகளுக்கு 5 ஏக்கரும், குறு விவசாயிகளுக்கு இரண்டரை ஏக்கரும் 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்கலாம்.
  • பயிரிடும் பயிரின் இடைவெளிக்கேற்ப 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்கும் பரப்பு மாறுபடும். எஞ்சிய பரப்பிற்கு 75 சதவீத மானியத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்துக் கொள்ளலாம் என்று இருந்தது.
  • ஆனால், தற்போது ஒரு ஏக்கருக்கு ரூ. 43,816-க்கு மிகாமல் சிறு விவசாயி நன்செய் நிலமாயிருந்தால் இரண்டரை ஏக்கர் வரைக்கும், புன்செய் நிலமாக இருந்தால் 5 ஏக்கர் வரைக்கும் எந்த பயிராக இருந்தாலும், என்ன இடைவெளியாய் இருந்தாலும் விருப்பம் இருப்பின் அவருக்குச் சொந்தமாக இருக்கும் பரப்பு முழுமைக்கும் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்துக் கொள்ளலாம்.
  • அதேபோல குறு விவசாயி நன்செய் நிலமாக இருந்தால் ஒன்றேகால் ஏக்கர் வரைக்கும், புன்செய் நிலமாக இருந்தால் இரண்டரை ஏக்கர் வரைக்கும் எந்த பயிராக இருந்தாலும், என்ன இடைவெளியாய் இருந்தாலும் விரும்பினால் இருக்கும் பரப்பு முழுமைக்கும் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்துக் கொள்ளலாம்.
  • சிறு, குறு விவசாயிகள் தங்களிடம் உள்ள நிலம் முழுமைக்கும் 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர்ப் பாசனம் அமைக்க தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது.



யார், யார் மானியம் பெறலாம்?
  • வருவாய்த் துறை நில வகைப் பாட்டின்படி நன்செய் நிலமென்றால் இரண்டரை ஏக்கருக்குள்ளும், புன்செய் நிலமென்றால் 5 ஏக்கருக்குள்ளும் சொந்த நிலமுள்ளவர்கள் இம்மானிய உதவி பெறத் தகுதியானவர்கள்.
  • சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் மோட்டாருடன் கூடிய கிணறோ, ஆழ்துளைக் கிணறோ போதிய நீராதாரத்துடன் இருக்க வேண்டும். பொதுவான நீராதாரம் கொண்ட சின்னஞ்சிறு விவசாயிகள் இரண்டு மூன்று பேர் சேர்ந்தும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel