- குரூப் 2 தேர்வு நேற்று முன் தினம் தமிழக முழுவதும் 116 மையங்களில் 2268 தேர்வு எழுதும் கூடங்கள் அமைக்கப்பட்டது. இதற்கான தேர்வு பணியில் 39188 ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
- நேற்று முன் தினம் இந்த தேர்வை தமிழில் 480863 பேரும், ஆங்கிலத்தில் 145858 பேரும் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். காலை 10 மணிக்கு தொடங்கி 1 மணிக்கு முடிந்தது. இந்த தேர்வில் எந்த முறைகேடும் நடக்காமல் இருக்க 254 பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
- நடந்து முடிந்த இந்த தேர்வில் வெற்றி பெறுவோருக்கு அடுத்தகட்டமாக நேர்முக தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறுவோருக்கு தமிழக அரசின் 23 துறைகளில் பணிகள் ஒதுக்கப்படும்.
- கடந்தகாலங்களில் ஒரு அரசு பணிக்கு குறைந்தபட்சம் 50 பேர் போட்டியிடுவது வழக்கம். ஆனால், நேற்று நடந்த குரூப் 2 தேர்வில் ஒரு அரசு பணிக்கு சுமார் 500 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
- இந்த தேர்வுக்கான விடைத் தாள் நாளை இணையத்தில் வெளியிடப்படும் என தமிழக அரசின் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது. மேலும்,விடைகள் குறித்த ஆட்சேபனை இருந்தால், இணையதளம் மூலமே உரிய கோரிக்கைகளை வரும் 20ம் தேதிக்குள் முன்வைக்கலாம் தமிழக அரசின் தேர்வுக் குழு என தெரிவித்துள்ளது.
Tentative Answer Keys
Combined Civil Services Examination -II
(Group - II Services) (Interview posts) Preliminary Examination
(Date of Examination: 11.11.2018 FN)
Tentative Keys Hosted on 14.11.2018
| |
Sl No. |
Subject Name
|
1 | |
2 | |
3 | |
|