Type Here to Get Search Results !

DOWNLOAD OCTOBER CURRENT AFFAIRS 2018 TNPSCSHOUTERS TAMIL PDF



TNPSCSHOUTERS  - OCTOBER 2018
CURRENT AFFAIRS
S.NO
DAY & MONTH
DOWNLOAD LINK
1.
1st OCTOBER 2018
2.
2nd OCTOBER 2018
3.
3rd OCTOBER 2018
4.
4th OCTOBER 2018
5.
5th OCTOBER 2018
6.
6th OCTOBER 2018
7.
7th OCTOBER 2018
8.
8th OCTOBER 2018
9.
9th OCTOBER 2018
10.
10th OCTOBER 2018
11.
11th OCTOBER 2018
12.
12th OCTOBER 2018
13.
13th OCTOBER 2018
14.
14th OCTOBER 2018
15.
15th OCTOBER 2018
16.
16th OCTOBER 2018
17.
17th OCTOBER 2018
18.
18th OCTOBER 2018
19.
19th OCTOBER 2018
20.
20th OCTOBER 2018
21.
21st OCTOBER 2018
22.
22nd OCTOBER 2018
23.
23rd OCTOBER 2018
24.
24th OCTOBER 2018
25.
25th OCTOBER 2018
26.
26th OCTOBER 2018
27.
27th OCTOBER 2018
28.
28th OCTOBER 2018
29.
29th OCTOBER 2018
30.
30th OCTOBER 2018
31.
31st OCTOBER 2018


மருத்துவத்துக்கான நோபல்
  • புற்று நோய் சிகிச்சை தொடர்பான புதிய கண்டுபிடிப்புக்காக இந்த நோபல் பரிசை ஜேம்ஸ் ஆலிசன் மற்றும் டசகு ஹான்ஜோ ஆகியோர் கூட்டாக பெறுகிறார்கள்.
  • இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படுகின்றன. முதல் பரிசாக மருத்துவ நோபல் பரிசு பெறும் பெயர்கள் வெளியிடப்பட்டன. ஆலிசனும், ஹான்ஜோவும் இணைந்து புற்றுநோய் சிகிச்சையில் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். 
  • அதாவது நோய் எதிர்ப்பு சக்தியை முறைப்படுத்தி புற்று நோய் செல்களைக் கட்டுப்படுத்தும் முறையை இவர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்காகவே இவர்களுக்கு பல் பரிசு கிடைத்துள்ளது.
  • ஆலிசன் அமெரிக்காவைச் சேர்ந்தவர். டசகு ஜப்பானைச் சேர்ந்த மருத்து விஞ்ஞானி ஆவார். 
பயோமெட்ரிக் முறையில் ரோஹிங்ய மக்களை கணக்கெடுக்க உத்தரவு
  • இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ரோஹிங்யா மக்களை பயோமெட்ரிக் முறையில் அடையாளம் காண வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 
  • இந்த அடையாளம் நடவடிக்கை மேற்கொண்ட பிறகு, அதன் அறிக்கையை மாநில அரசுகள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதன்பின்னர் மியான்மார் அரசாங்கத்துடன் மத்திய அரசு பேச்சுவாரத்தை நடத்தும் எனக் கூறினார்.
  • ஏற்கனவே நமது நாட்டில் ரோஹிங்கியா மக்கள் சட்ட விரோதமாக தங்கியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் அவர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்தியாவில் சுமார் 40,000 ரோஹிங்கியா மக்கள் தங்கியுள்ளனர். அவர்களை குறித்து தகவல்களை சேகரித்து அனுப்புமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடதக்கது.
ரூ.1,240 கோடியை விவசாயத்தில் முதலீடு செய்த பில்கேட்ஸ்
  • மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரும், உலகின் மிகப்பெரிய பணக்காரர்களின் ஒருவருமான பில்கேட்ஸின் பார்வை தற்போது அறிவியல் தொழில்வளர்ச்சியில் இருந்து விவசாயத்தின் பக்கம் திரும்பியுள்ளது. 
  • காரணம் உலகில் உள்ள அனைவரும் எதிர்நோக்கும் மிகப்பெரிய பிரச்சனை விவசாயம் அழிந்து வருவதாகவும். அழிவில் இருக்கும் விவசாயத்தை மீட்டெடுக்கும் பொருட்டு பில்கேட்ஸின் நடவடிக்கை உள்ளது.
  • அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ளா பண்ணை நிலம், தரிசு நிலம் என சுமார் 14,500 ஏக்கர் நிலம் வாங்கியிருக்கிறார். இதன் மதிப்பு ரூ.1.240 கோடி என கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த ஆண்டின் மிகப் பெரும் நில விற்பனை இதுதான். தனது தொண்டு நிறுவனம் மூலம், சுகாதாரத் திட்டங்களுக்குப் பெரும் தொகையை வழங்கிவரும் பில் கேட்ஸ், விவசாய நிலத்தில் முதலீடு செய்திருப்பது பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி
  • நாட்டிலுள்ள 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மற்றும் ஆய்வு செய்ய மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அனுமதி அளித்துள்ளார். மொத்தம் 6 நிறுவனங்களுக்கு இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில், கடற்பகுதி, நிலப்பரப்பு என 41 இடங்களில் வேதந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 
  • வேதாந்தாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள 41 இடங்களில் இரண்டு காவிரி கடல் பகுதியில் வருபவை. ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு இரண்டு இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஓஎன்ஜிசிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடம் மட்டும் நிலப்பகுதியில் வருகிறது. .



டிஜிட்டல் இந்தியாவுக்காக ஏடிஎம்களில் பணம் எடுக்க மத்திய அரசு கட்டுப்பாடு
  • டிஜிட்டல் இந்தியாவு திட்டத்தை முற்றிலும் மத்திய அரசு செயல்படுத்த விரும்புகின்றது. இதற்காவும் மேலும் பல்வேறு வழிகளில் பணம் கொள்ளையடிக்க படுவதை தடுக்கும் விதமாகவும் ஏடிஎம்களில் பணம் எடுப்பதை மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
  • இந்நிலையில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் இனி ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் மட்டுமே பணம் எடுக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய உத்தரவு இம்மாதம் 31ம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கின்றது.
சர்வதேச நாணய முறை நிதிய பொருளாதார நிபுணராக இந்தியப் பெண் நியமனம்
  • ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியை கீதா கோபினாத் சர்வதேச நாணயமுறை நிதியத்தில் பொருளாதார நிபுணராக நியமிக்கபட்டுள்ளார்.
  • ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியையான கீதா கோபினாத் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர். தற்போது இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளார். இவர் வாஷிங்டன் மற்றும் டில்லி பல்கலைக்கழகங்களில் முதுநிலை பட்டம் பெற்றவர் ஆவார். அமெரிக்க பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இவர் பி எச்டி பட்டம் பெற்றுள்ளார்.
  • தற்போது சர்வதேச நாணயமுறை நிதியத்தின் (INTERNATIONAL MONETARY FUND) இவர் பொருளாதார நிபுணராக நியமிக்கபட்டுள்ளார். இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கபடும் இரண்டாமிந்தியர் என்னும் பெருமையை கீதா அடைந்துள்ளார். இதற்கு முன்பு இந்த பதவியில் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் இருந்துள்ளார்.
ஐ எல் எஃப் எஸ் நிறுவனம் அரசுடமை ஆக தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் ஒப்புதல்
  • திவாலாகும் நிலையில் உள்ள ஐ எல் எஃப் எஸ் நிறுவனத்தை அரசுடமை ஆக்க தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • இன்ஃப்ராஸ்டிரக்சர் லீசிங் அண்ட் ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் சுருக்கமாக ஐ எஸ் எஃப் எல் என அழைக்கப்படுகிறது. இந்த நிறுவனம் சாலைகள், ரெயில்வே பாதைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் எண்ணெய் கிணறுகள் என பல உள்கட்டமைப்பை அமைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் சொத்துக்களின் மதிப்பு ரூ.6950.19 கோடி ஆகும்.
  • இந்த நிறுவனம் வழங்கிய கடன்களை திரும்ப பெறாததால் இந்த நிறுவனம் வாங்கிய கடன்களை திரும்ப செலுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே நிறுவனம் தற்போது திவாலாகும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அரசு தற்போது உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து வருவதால் இந்த நிறுவனத்தை அரசுடமை ஆக்க தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் அனுமதி கோரியது. .
  • அதற்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்துள்ளது. தீர்ப்பாயம் தெரிவித்த படி இயக்குனர்களை மாற்ற அரசு ஒப்புக் கொண்டுள்ளது. 
உலகிலேயே முதல் முறையாக செயற்கை கருத்தரிப்பின் மூலம் பிறந்த சிங்கக் குட்டிகள்
  • உலகின் முதல் முறையாக செயற்கை கருத்தரிப்பின் மூலம் தென் ஆப்ரிக்காவில் இரண்டு சிங்கக் குட்டிகள் பிறந்துள்ளன.
  • தென் ஆப்ரிக்காவின் தலைநகரான் பிரிடோரியாவில் உள்ள விஞ்ஞானிகள் பெண் சிங்கம் ஒன்றை செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel