Type Here to Get Search Results !

2018 ம் ஆண்டு வேதியலில் நோபல் பரிசு (NOBEL PRIZE FOR CHEMISTRY 2018)

புரத ஆய்வுக்காக வேதியல் துறையில் நோபல் பரிசு
  • நொதி (என்சைம்) தொடர்பான ஆய்வில் தங்களின் கண்டுபிடிப்புகளுக்காக 3 விஞ்ஞானிகளுக்கு 2018ம் ஆண்டு வேதியியலில் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
  • அமெரிக்கர்களான பிரான்சஸ் அர்னால்டு மற்றும் ஜார்ஜ் பி. ஸ்மித், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலுள்ள பிரிடன் கிரகோரி வின்டர் ஆகியோர் இந்த பரிசை பகிர்ந்து கொள்கின்றனர்.
  • உயிரியலில் ரசாயன எதிர்வினைகளை அதிகரிக்க செய்கின்ற புதிய நொதிகளை உருவாக்க "இயக்கப்படும் பரிணாமம்" என்கிற தொழிற்நுட்பத்தை இந்த நோபல் பரிசை வென்றவர்கள் பயன்படுத்தினர்.
  • இத்தகைய நொதிகள் புதிய மருந்துகள் மற்றும் பசுமை எரிபொருட்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகின்றன.அர்னால்டு இந்த பரிசின் பாதி தொகையான 9,98,619 டாலரை பெறுகிறார். மீதி பாதியை ஸ்மித்தும், வின்டரும் சம்மாக பகிர்ந்து கொள்வர்.
  • ஜார்ஜ் பி. ஸ்மித் மற்றும் கிரகோரி வின்டர் புதிய புரதங்களை பரிணமிக்க செய்ய பெஜ் காட்சி தொழிற்நுட்பத்தை உருவாக்கினர். குறிப்பிட்ட பாக்டீரியாவை அழிய செய்து புதிய ஆன்டிபாடிகளை உருவாக்குவதற்கு இதனை அவர்கள் பயன்படுத்தினர்.
  • இவ்வாறு தீங்கான பாக்டீரியாக்களை மற்றும் வைரஸ்களை சமநிலைப்படுத்தி நோய் எதிர்ப்பு அமைப்பால் பயன்படுத்தப்படும் பெரிய புரதங்களாக இந்த ஆன்டிபாடிகள் செயல்பட்டன.
  • இந்த பெஜ் காட்சி தொழிற்நுட்பப்படி உருவாக்கப்பட்ட முதலாவது ஆன்படியான 'அடலிமுமாப்' 2002ம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • இது முடக்கு வாதம், தடிப்பு தோல் அழற்சி மற்றும் குடல் அழற்சி நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்பட்டது.அதுமுதல் நச்சுத்தன்மை, நோய் தடுப்பு திறனை அதிகரித்தல், பிற இடங்களில் பரவும் புற்றுநோய் ஆகியவற்றுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஆன்டிபாடிகளை பெஜ் காட்சி தொழில்நுட்பம் உருவாக்கியுள்ளது.
  • பிரான்சஸ் அர்னாடு வேதியலுக்கான நோபல் பரிசு பெறுகின்ற 5வது பெண்ணாவார். இதற்கு முன்னர் 2009ம் ஆண்டு இஸ்ரேலை சேர்ந்த அடா யேநாத் இந்த நோபல் பரிசை பெற்றுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel