தேசிய பஞ்சாயத்து ராஜ் நாள் - ஏப்ரல் 24
- பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது.இதை நினைவுகூறும் விதமாக
- தேசிய பஞ்சாயத்து ராஜ் நாள் (National Panchayati Raj Day) ஆண்டுதோறும் ஏப்ரல் 24 ஆம் நாளன்று இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.
- பஞ்சாயத்து ராஜின் நோக்கம் அதிகாரத்தைப் பரவலாக்குவது. மக்கள் ஆளும் பஞ்சாயத்து அமைப்புகள் அனைத்துமே மிக வலிமையானவை. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், தாங்களே நிர்வாகம் செய்யும் உரிமையை பெறுகிறார்கள்.
- அரசு அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து அமைப்புகளுக்கு பரவலாக்கவும், மக்கள் கிராம அளவில் தாங்களே நிர்வாகத்தை நடத்துவதற்கான உரிமை வார்த்தையளவில் இல்லாமல் உண்மையாக நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.
- மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை குறைத்துக்கொண்டு உள்ளாட்சி அமைப்புகளுடன், அதிகாரத்தை பகிர்ந்துகொள்வது அவசியமாக உள்ளது. பஞ்சாயத்துகள் வலுவாக இருந்தால்தான் அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்படும்.
- இச்சட்டத்தின் அடிப்படையில் ஊராட்சி மன்றத்தின் மூலம் கீழ்கண்ட பணிகள்நிறைவேற்றப்படுகின்றன.
- தெரு விளக்குகள் அமைத்தல்.
- ஊர்ச் சாலைகள் அமைத்தல்
- குடிநீர் வழங்குதல்.
- கழிவுநீர்க் கால்வாய் அமைத்தல்.
- சிறிய பாலங்கள் கட்டுதல்.
- வீட்டுமனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குதல்.
- கிராம நூலகங்களைப் பராமரித்தல்.
- தொகுப்பு வீடுகள் கட்டுதல்.
- இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு மைதானங்களை நிறுவுதல், பராமரித்தல் ஆகியன ஆகும்.
- இத்தினத்தில் சிறந்த பஞ்சாயத்து தலைவருக்கான விருது வழங்கப்படுகிறது.கடந்த ஆண்டில் இராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் பஞ்சாயத்து தலைவர் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 10 பஞ்சாயத்து தலைவர்களுக்கு இவ்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
- இக்கொண்டாட்டத்தை பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் முன்னெடுத்து வருகிறது.