ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-4 (குரூப் - 4), 2015-2016, 2016-2017 மற்றும் 2017 - 2018-ஆம் ஆண்டுகளுக்கான குரூப் 4 பிரிவில் விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு பயன் அளிக்கு வகையில் டிஎன்பிஎஸ்சி இதுவரை நடத்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான வினா - விடைகள் இந்த தொடர்களில் தலைப்பு வாரியாக தொகுத்து வழங்குகிறோம். விண்ணப்பித்துள்ளோர் படித்து பயன்பெறலாம்.
* குறிஞ்சி, முல்லை முதலியன ஐந்தும் அன்பின் ஐந்திணை எனப்படும்.
* குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த இடமும்
* முல்லை - காடும் காடு சார்ந்த இடமும்
* மருதல் - வயலும் வயல் சார்ந்த இடமும்
* நெய்தல் - கடலும் கடல் சார்ந்த இடமும்
* பாலை - மணலும் மணல் சார்ந்த இடமும்.
* பொழுது இரு வகைப்படும். ஓராண்டின் ஆறு கூறுகள். பெரும்பொழுது ஒரு நாளின் ஆறு கூறுகள் சிறு பொழுது.
* பொழுது இரு வகைப்படும். ஓராண்டின் ஆறு கூறுகள். பெரும்பொழுது ஒரு நாளின் ஆறு கூறுகள் சிறு பொழுது.
* கார்காலம் - ஆவணி, புரட்டாசி
* குளிர்காலம் - ஐப்பசி, கார்த்திகை
* முன்பனி காலம் - மார்கழி, தை
* பின்பனி காலம் - மாசி, பங்குனி
* இளவேனிற் காலம் - சித்திரை, வைகாசி
* முதுவேனிற் காலம் - ஆனி, ஆடி
* காலை - காலை 6 - 10 மணி வரை
* நண்பகல் - காலை 10 - 12 மணி வரை
* ஏற்பாடு - பிற்பகல் 2 - 6 மணி வரை
* மாலை - மாலை 6 - இரவு 10 மணி வரை
* யாமம் - இரவு 10 - 2 மணி வரை
* வைகறை - இரவு 2 முதல் காலை 6 மணி வரை
* திணை - பெரும்பொழுது - சிறுபொழுது
* குறிஞ்சி - குளிர்காலம், முன்பனி - யாமம்
* முல்லை - கார்காலம் - மாலை
* மருதம் - ஆறு பெரும்பொழுதுகள் - வைகறை
* நெய்தல் - ஆறு பெரும்பொழுதுகள் - ஏற்பாடு
* பாலை - இளவேனில், முதுவேனில், பின்பனி - நண்பகல்
* குறிஞ்சி - குளிர்காலம், முன்பனி - யாமம்
* முல்லை - கார்காலம் - மாலை
* மருதம் - ஆறு பெரும்பொழுதுகள் - வைகறை
* நெய்தல் - ஆறு பெரும்பொழுதுகள் - ஏற்பாடு
* பாலை - இளவேனில், முதுவேனில், பின்பனி - நண்பகல்
*புறம் பற்றிய நெறிகளைக் கூறுவது புறத்தினை. புறத்தினைகள் பன்னிரண்டு வகைப்படும்.
* நிரைகவர்தல் என்பது வெட்சித்திணை.
* ஆதிரைகளை மீட்டல் என்பது கரந்தைத்திணை
* மண்ணாசை காரணமாகப் போருக்குச் செல்வது - வஞ்சித் திணை
* எதிர்த்துப் போரிடல் - காஞ்சித்திணை
* மதிலைக் காத்தல் என்பது நொச்சித்திணை
* மதிலைச் சுற்றி வளைத்தல் என்பது உழிஞைத் திணை
* அதிர பொருவது என்பது தும்பைத் திணை
* வெற்றி பெற்ற மன்னன் வாகைப்பூச் சூடி மகிழ்வது வாகைத்திணை
* பாடாண்திணை என்பது ஆண்மகனின் ஒழுகலாறுகள் - பாடு ஆண் திணை
* வெட்சி முதல் பாடாண் வரை உள்ள புறத்திணைகளின் பெதுவானவற்றைக் கூறுவது பொதுவியல்.
* ஒருதலைக் காமம் என்பது கைக்கிளை
* பொருந்தாக் காமம் என்பது பெருந்தினை கைக்கிளை இரு வகைப்படும்.
கருட்பொருள் | குறிஞ்சி/மலை | காடு/முல்லை | வயல்/மருதம் | நெய்தல்/கடல் | பாலை/வறண்ட |
தெய்வம் | முருகன் | திருமால் | இந்திரன் | வருணன் | கொற்றவை |
மக்கள் | வெற்பன், குறவர், குறத்தியர் | தோன்றல், ஆயர், ஆச்சியர் | ஊரன்,உழவன், உழத்தியர் | சேர்ப்பன், பரதன், பரத்தியர் | எயினர், எயிற்றினர் |
உணவு | மலைநெல், தினை | வரகு, சாமை | செந்நெல், வெண்ணெய் | மீன், உப்புக்குப் பெற்ற பொருள் | சூறையாடலால் வரும் பொருள் |
விலங்கு | புலி, கரடி, சிங்கம் | முயல், மான், புலி | எருமை, நீர்நாய் | முதலை, சுறா | வலியிழந்த யானை |
பூ | குறிஞ்சி காந்தல் | முல்லை தோன்றி | செங்கழுநீர் தாமரை | தாழை நெய்தல் | குரவம் பாதிரி |
மரம் | அகில் வேங்கை | கொன்றை, கயா | காஞ்சி, மருதம் | புன்னை, ஞாழல் | இலுப்பை பாலை |
பறவை | கிளி, மயில் | காட்டுக்கோழி, மயில் | நாரை, நீர்கோழி, அன்னம் | கடற்காகம் | புறா, பருந்து |
ஊர் | சிறுகுடி | பாடி, சேரி | பேரூர், மூதூர் | பட்டினம், பாக்கம் | குறும்பு |
நீர் | அருவி நீர், சுனை நீர் | காட்டாறு | மனைக்கிணறு, பொய்கை | மணற்கிணறு, உவர்க்கழி | வற்றிய சுளை, கிணறு |
பறை | தொண்டகம் | ஏறுகோட்பறை | மணமுழா, நெல்லரிகிணை | மீன்கோட்பறை | துடி |
யாழ் | குறிஞ்சியாழ் | முல்லையாழ் | மருதயாழ் | விளரியாழ் | பாலையாழ் |
பண் | குறிஞ்சிப்பன் | முல்லைப்பண் | மருதப்பன் | செவ்வழிப்பண் | பஞ்சுரப்பன் |
தொழில் | தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல் | ஏறு தழுவுதல், நிரை மேய்த்தல் | நெல்லரித்தல், களை பரித்தல் | மீன் பிடித்தல், உப்பு விளைத்தல் | நிரைகவர்தல், வழிப்பறி |
யாப்பு
* யாப்பு என்றால் கட்டுதல் என்பது பொருள்
* யாப்பு என்றால் கட்டுதல் என்பது பொருள்
* செய்யுளுக்குரிய உறுப்புகளைக் கொண்டு பாடலை உருவாக்குதலே யாப்பு எனப்படும். யாப்பின் உறுப்புகள் ஆறு.
* ஓரெழுத்து தனித்தோ, இணைந்தோ ஒலிப்பது அசை. இரு வகைப்படும்.
* அசைகள் பல சேர்ந்து அமைவது சீர் எனப்படும்
* சீர்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்த அமைவது தளை எனப்படும்
* இரண்டு அல்லது பல சீர்கள் சேர்ந்து அமைவது அடி எனப்படும்.
* அடிகள் இரண்டு முதலியனவாகத் தொடர்ந்து அடுக்கிப் பாடுவது பா
* செய்யுள் இலக்கணத்தைக் கூறுவது யாப்பிலக்கணம் எனப்படும்.
(செய்யுள், பாட்டு, கவிதை, தூக்கு என்பன செய்யுள் என்பதன் வேறு பெயர்கள்)
(செய்யுள், பாட்டு, கவிதை, தூக்கு என்பன செய்யுள் என்பதன் வேறு பெயர்கள்)
* பா நான்கு வகைப்படும். சீர் நால்வகைப்படும்.
* யாப்பிலக்கணத்தில் எழுத்துக்கள் மூன்று வகைப்படும்.
* மெய்யும், ஆய்தமும் யாப்பில் ஒற்றெழுத்து எனக் குறிக்கப்படுகிறது.
* வெண்பாவின் ஈற்றில் அமையும் சீர் ஓரசைச்சீர் என்பர்.
* இரண்டு அசைகள் சேர்ந்து ஒரு சீராவது ஈரசைச்சீர். இது நான்கு வகைப்படும்.
* ஈரசைச்சீர் நான்கும் ஆசிரியப்பாவிற்கு உரியவை. ஈரசைச்சீர்களை இயற்சீர் எனவும், ஆசிரிய உரிச்சார் எனவும் வழங்கப்படும்.
* மூன்று அசைகள் சேர்ந்து ஒரு சீர் ஆவது மூவசைச்சீர் (இது-8)
* மூவசைச்சீரில் நேரசையில் முடிவது(நான்கும்) காய்ச்சீர்கள்.
* காய்ச்சீர்கள் வெண்பாவிற்கு உரியன. ஆதலின் வெண்பா உரிச்சீர் என்பர்.
* மூவகைச்சீர்களில் நிரையசையில் முடிவது(நான்கும்) கனிச்சீர்கள்.