Type Here to Get Search Results !

TNPSC VAO GROUP 4 ONLINE TEST 13 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 13

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-4 (குரூப் - 4), 2015-2016, 2016-2017 மற்றும் 2017 - 2018-ஆம் ஆண்டுகளுக்கான குரூப் 4 பிரிவில் விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு பயன் அளிக்கு வகையில் டிஎன்பிஎஸ்சி இதுவரை நடத்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான வினா - விடைகள் இந்த தொடர்களில் தலைப்பு வாரியாக தொகுத்து வழங்குகிறோம். விண்ணப்பித்துள்ளோர் படித்து பயன்பெறலாம்.

UNIT - VIII :  History, Culture, Heritage and Socio – Political Movements in Tamil Nadu(POTHU TAMIL STUDY MATERIAL PDF)


* திணை இருவகைப்படும்.
* பெயர்ச்சொற்களை உயர்திணைப்பெயர், அஃறிணைப் எனப் பிரிக்கிறோம்.
* ஆண்பால் பெயர்ச்சொற்கள் ஆண்பால் வினை முடிவையே பெறும்.
* எண் இரு வகைப்படும். இடம் மூன்று வகைப்படும்.
* மொழியின் அடிப்படை உறுப்புகள் - எழுத்து, சொல், சொற்றொடர்
* எல்லா எழுத்துக்களுக்கும் அடிப்படையானது ஒலி
* திணை என்பது ஒழுக்கம். திணையின் உட்பிரிவு பால்
* எழுத்தினால் அமைக்கப்பட்டு, பொருளை அறிந்து கொள்வதற்கு கருவியாக இருக்கும் ஒலியே சொல் ஆகும்.
* இலக்கண வகையில் சொற்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
* இலக்கிய வகையில் சொற்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

* பெயர்சொல் ஆறு வகைப்படும்.
* பொருளின் செயலை, இயக்கத்தை உணர்த்தும் சொல் வினைச்சொல்
* வினைச்சொல் காலம் காட்டும், வேற்றுமை உருபை ஏற்காது
* பெயர்ச்சொல், வினைச்சொற்களை இடமாகக் கொண்டு வரும் சொற்கள் இடைச்சொல் (இடை-இடம்)
* இடைச்சொற்கள் தனியாக வந்தால் பொருள் தராது.
* பெயர்ச் சொல், வினைச்சொற்களைச் சார்ந்து அவற்றின் குணத்தை உணர்த்தி வரும் சொற்கள் உரிச்சொற்கள் எனப்படும்.
* உரிச்சொற்கள் இருவகைப்படும்.
* கடி என்பது பலகுணம் தழுவிய ஓர் உரிச்சொல்
* இயல்பால் அமைந்த தமிழ்ச்சொல் இயற்சொல் எனப்படும்.
* இயற்சொல் இரு வகைப்படும்.
* பசு, காற்று, செடி, குடம் - பெயர் இயற்சொல் சிரித்தான், பறந்தது, மேயந்தன - வினை இயற்சொல்
* கற்றவர்கள் மட்டுமே பொருள் அறியும் வகையில் அமைந்த சொற்கள் திரிசொல் எனப்படும்.
* திரிசொல் இரண்டு வகைப்படும்.
* வடமொழிச்சொல் திரிந்தும், திரியாமலும் தமிழ் மொழியில் வந்து வழங்குமானால் அவை வடசொல் எனப்படும்.
* தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள பிற பகுதிகளிலிருந்து தமிழில் வழங்கும் சொல் திசைச்சொற்கள்
* எந்தக் காரணமும் கருதாமல் ஒரு பொருளுக்குக் குறியீடாக இட்ட பெயரே இடுகுறிப் பெயர்.
* காரணம் கருதி இடப்பட்ட பெயர்கள் காரணப் பெயர்கள்
* காடு என்பது இடுகுறிப் பொதுப்பெயர்
* பனை - என்பது இடுகுறிச் சிறப்புப் பெயர்
* பறவை - காரணப் பொதுப் பெயர்
* மரங்கொத்தி - காரணச் சிறப்பு பெயர்
* செயல் முடிந்ததைக் குறிக்கும் சொல் - வினைமுற்று
* வினைமுற்று காலம் காட்டும். திணை ,பால், எண், இடம் ஆகியவற்றை உணர்த்தும்(காட்டும்).
* முற்று பெறாத வினைச்சொல் எச்சம் எனப்படும்.
* முற்றுப் பெறாத வினைச்சொல் பெயரைக் கொண்டு முடிந்தால் பெயரெச்சம், வினையைக் கொண்டு முடிந்தால் வினையெச்சம்.
* பெயர்ச்சொல்லின் பொருள் வேறுபடுவதை வேற்றுமை என்பர். வேற்றுமை எட்டு வகைப்படும்.
* எழுவாய்(இயல்பான பெயர்) பயனிலைக் கொண்டு முடிவது முதல் வேற்றுமை (அ) எழுவாய் வேற்றுமை.
* முதல் வேற்றுமை, வினை, பெயர், வினா ஆகியவற்றைப் பயனிலையாகக் கொண்டு முடியும்.
* கர்ணன் வந்தான் - வினைப்பயனிலை
* அவன் இராமன் - பெயர்ப் பயனிலை
* அவன் யார்? - வினாப் பயனிலை
* முதல் வேற்றுமைக்கு உருபு இல்லை.
* பெயர்ச் சொல்லினது பொருளைச் செயப்படு பொருளாக வேறுபடுத்துவது இரண்டாம் வேற்றுமை ஆகும்.
* இரண்டாம் வேற்றுமையை செயப்படுபொருள் வேற்றுமை என்றும் வழங்குவர். * இதன் உருபு "ஐ" ஆகும்.
* இரண்டாம் வேற்றுமை உணர்த்தும் பொருள்கள் ஆறு.
* மூன்றாம் வேற்றுமையின் உருபு ஆல், ஆன், ஒரு, ஓடு
* மூன்றாம் வேற்றுமை தாம் ஏற்ற பெயர்ப்பொருளை கருவி, கருத்தா உடனிகழ்ச்சிப் பொருளாக வேறுபடுத்தும்.
* கருவிப் பொருள் இரு வகைப்படும். கருத்தாப் பொருள் இரு வகைப்படும்.
* நாற்காலி தச்சனால் செய்யப்பட்டது என்பது இயற்றுதல் கருத்தா.
* கோவில் அரசனால் கட்டப்பட்டது என்பது ஏவுதல் கருத்தா
* எழுவாயின் செயலுடன் பிறிதொன்றனது செயலும் உடன் நிகர்வது
* உடனிகழ்ச்சி பொருள் (தாயோடு குழந்தை சென்றது)
* நான்காம் வேற்றுமையின் உருபு - "கு" ஆகும்
* ஐந்தாம் வேற்றுமையின் உருபுகள் - இல், இன் என்பன.
* ஆறாம் வேற்றுமையின் உருபு - "அது"
* ஏழாம் வேற்றுமைக்குக் கண், உள், மேல், கீழ் என்பன உருபுகள் ஆகும்.
* எட்டாம் வேற்றுமைக்கு உருபு இல்லை இதனை விளிவேற்றுமை என்பர்.
* ஒரு சொல்லின் முதல், இடை, கடை எழுத்து மாறுபட்டாலும் பொருள் மாறுபடாது இருப்பது போலி.
* போலி மூன்று வகைப்படும்.
* முதல் போலி - மஞ்சு - மைஞ்சு, மயல் - மையம்
* இடைப்போலி - முரசு - முரைசு, அரசியல் - அரைசியல்
* கடைப்போலி - அறம் - அறன், பந்தல் - பந்தர்
* முற்றுப்போலி - அஞ்சு - ஐந்து
* எழுத்து தனித்தோ, தொடர்ந்தோ பொருள் தருமானால் அது சொல்
* பதம், கிளவி, மொழி என்பன சொல்லின் வேறு பெயர்கள்.
* ஓரெழுத்து தனித்து தொடர்ந்தோ பொருள் தருமானால் அது சொல்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel