Type Here to Get Search Results !

TNPSC VAO GROUP 4 ONLINE TEST 5 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 5 (COMBINED EXAM OF VAO & GROUP - 4 (CSSE - IV) QUESTION & ANSWER - 5)


ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-4 (குரூப் - 4), 2015-2016, 2016-2017 மற்றும் 2017 - 2018-ஆம் ஆண்டுகளுக்கான குரூப் 4 பிரிவில் விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு பயன் அளிக்கு வகையில் டிஎன்பிஎஸ்சி இதுவரை நடத்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான வினா - விடைகள் இந்த தொடர்களில் தலைப்பு வாரியாக தொகுத்து வழங்குகிறோம். விண்ணப்பித்துள்ளோர் படித்து பயன்பெறலாம்.

UNIT - VIII :  History, Culture, Heritage and Socio – Political Movements in Tamil Nadu(POTHU TAMIL STUDY MATERIAL PDF)
 
வினா-விடை - 5-வது பதிவில் சான்றோர்களின் சிறப்புப் பெயர் பட்டியல் குறித்து பார்ப்போம்.
1. தெய்வப்புலவர், செந்நாப் போதார், பொய்யில் புலவர், நான்முகனார், நாயனார், தேவர், முதற்பாவலர், மாதானுபங்கி, பெருநாவலர் - திருவள்ளுவர்
2. தம்பிரான் தோழர், வன்தொண்டன் - சுந்தரர்
3. தமிழ் மூதாட்டி, அருந்தமிழ்ச் செல்வி - ஒளவையார்
4. புலனழுக்கற்ற அந்தணன், விவிரித்த கேள்வி விளங்கு புகழ்புலவர், குறிஞ்சிக்கவி - கபிலர்
5. மாத முனிவன், மாமுன், தமிழ்முனி, குறுமுனி, திருமுனி, முதல் சித்தர் - அகத்தியர்
6. வரலாற்றுப் புலவர் - பரணர்
7. இலக்கியச் சிங்கம் - நக்கீரன்
8. அரசத் துறவி - இளங்கோவடிகள்
9. அம்மை - காரைக்காலம்மையார்
10. காப்பியனார் - தொல்காப்பியனார்
11. சாத்தன் - சீத்தலைச் சாத்தனார்
12. இன்தமிழ் ஏசுநாதர், சம்மந்தர் - திருஞானசம்பந்தர்
13. கவிமணி - தேசிய விநாயகம் பிள்ளை
14. அப்பர் - திருநாவுக்கரசர்
15. தென்னவன் பிரம்மராயன், திருவாதவூரார், வாதவூரடிகள், ஆளுடைய பிள்ளை - மாணிக்கவாசகர்
16. தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி, புதுக்கவிதையின் தந்தை, விடுதலைக்கவி, உணர்ச்சிக்கவி, தேசியக் கவி, பாட்டுக்கொரு புலவன், சிந்துக்குத் தந்தை, புதுமைக்கவி, மகாகவி, நீடுதுயில் நீக்கப்பாடி வந்த நிலை - பாரதியார்
17. கவிச்சக்கரவர்த்தி, விருத்தக்கவி - கம்பர் (கம்பரைப் புகழ்நதவர் சடையப்ப வள்ளல்)
18. சூடிக்கொடுத்த சுடர்கொடி, பாவை நாச்சியார் - ஆண்டாள்
19. தமிழ்வியாசர் - நம்பியாண்டார் நம்பி
20. அருண்மொழித் தேவர் - சேக்கிழார்
21. பட்டர்பிரான் - பெரியாழ்வார்
22. வெண்பாப்புலவர் - புகழேந்தி
23. தமிழ்த் தென்றல் - திரு.வி.கல்யாண சுந்தரனார்
24. உவமைக்கவிஞர் - சுரதா
25. புரட்சிக் கவிஞர், புரட்சிக்கவி, பாவேந்தர், புதுமைக்கவிஞர், இயற்கை கவிஞர், பூங்காட்டுத் தம்பி, கனகசுப்புரத்தினம், தமிழ் நாட்டின் ரசூல் கம்சத் தேவ் - பாரதிதாசன்
26. நாமக்கல் கவிஞர், காந்தியக் கவிஞர் - வெ.இராமலிங்கம் பிள்ளை
27. பரணிப்புலவர் - ஜெயங்கொண்டார்
28. ஆசுகவி - காளமேகப்புலவர்
29. சந்தக்கவி - அருணகிரிநாதர்
30. சன்மார்க்க கவி, வள்ளலார் - இராமலிங்க அடிகளார்
31. திருமங்கை மன்னன் - திமங்கையாழ்வார்
32. கவியரசு - கண்ணதாசன்
33. மகாவித்துவான் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை
34. சிறுகதை மன்னன்- ஜெயகாநாதன், புதுமைப்பித்தன்
35. சுஜாதா - இரங்கராஜன்
36. தமிழ் அண்ணல் - டாக்டர் இராமபெரியகருப்பன்
37. கிறிஸ்துவக் கம்பன் - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை. இவர் இரட்சண்ய யாத்திரிகம் எனும் நூலின் ஆசிரியர். இந்நூல் பில்க்ரிம்ஸ் பிரோகிரஸ் எனும் ஆங்கில நூலின் தழுவலாகும்)
38. பதிப்புச் செம்மல் - ஆறுமுக நாவலர்
39. சொல்லின் செல்வர் - ரா.பி.சேதுப்பிள்ளை
40. மொழி ஞாயிறு - தெய்வநேயப் பாவாணர்
41. தத்துவக் கவிஞர் - திருமூலர்
42. கர்ம வீரர், கறுப்பு காந்தி, கல்வி கண் திறந்தவர், கிங் மேக்கர், படிக்காத மேதை - காமராசர்
43. அண்ணல், மகாத்மா, தேசப்பிதா - காந்தியடிகள்
44. தமிழர் தந்தை - சி.பா. ஆதித்தனார்
45. தமிழ்நாட்டின் வால்டர்ஸ்காட், தமிழ் வரலாற்று நாவலின் தந்தை - கல்கி
46. தனித்தமிழ் இசைக்காவலர் - இராஜா அண்ணாமலைச் செட்டியார்
47. சந்தக்கவி - அருணகிரிநாதர்
48 - ரசிகமணி - டி.கே.சி
49. தனித்தமிழ் இயக்கத் தந்தை - மறைமலையடிகள்
50. தமிழ்த் தாத்தா- உ.வே.சாமிநாத ஐயர் -இயர் பெயர் வேங்கடரத்தினம். இவருக்கு சாமிநாதன் என்ற பெயரை வைத்தவர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை. இவரே உ.வே.சு.வின் ஆசிரியர். இவர் வாழ்க்கை வரலாறின் பெயர் என் சரிதம்
51. இராஜாஜி, மூதறிஞர் - இராஜகோபாலாச்சாரி
52. கவிக்குயில் - சரோஜினி நாயுடு
53. சிற்பி - பாலசுப்பிரமணியன்
54. உவமைக்கவிஞர், சுரதா - சுப்புரத்தினதாசன். இயர்பெயர் இராசகோபாலன், பாரதிதாசன் மீது கொண்ட பற்று காரணமாகவே இவர் தம் பெயரை சுப்புரத்தின தாசன் என மாற்றிக்கொணாடார்.
55. தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த், தமிழ்நாட்டின் தாகூர், ரமி, கவிஞரேறு, பாவலர் மணி - வாணிதாசன்
56. கவியரசு - வைரமுத்து
57. நடமாடும் பல்கலைக்கழகம் - நெடுஞ்செழியன்
58. திராவிட சாஸ்திரி - சூரிய நாராயண சாஸ்திரிகள்
59. அழகிய மணவாளதாசர், திவ்வியகவி - பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
60. கவிராட்சசன் - ஓட்டக்கூத்தர்
61. உரையாசிரியர் - இளம்பூரணர்
62. பெருங்கவிக்கோ - பா.மு. சேதுராமன்
63. மீரா - மீ. ராஜேந்திரன்
64. தமிழ்மாணவர் - போப்பையர்
65. வீரமாமுனிவர் - கொன்ஸ்டான் ஜோசப் பெஸ்கி
66. அறிஞர், பேரறிஞர், தென்னாட்டு பெர்னாட்ஷா - அண்ணாதுரை
67. புரட்சித் தலைவர் - எம்.ஜி.ராமச்சந்திரன்
68. கலைஞர் - மு.கருணாநிதி
69. வைக்கம் வீரர், பகுத்தறிவுப் பகலவன், தந்தை பெரியார், சுயமரியாதைச் சுடர், தெற்காசிய சாக்ரடீஸ், வெண்தாடி வேந்தர், சுயமரியாதைச் சுடர் - ஈ.வெ.இராமசாமி
70. இந்தியாவின் நைட்டிங்கேல் - சரோஜினி நாயுடு
71. இந்தியாவின் எடிசன் - ஜி.டி.நாயுடு (கோபால்சாமி துரைசாமி நாயுடு)
72. இந்தியாவின் முதிரிந்த மனிதர் - தாதாபாய் நவ்ரோஜி
73. இந்தியாவின் இரும்பு மனிதர், இந்தியாவின் பிஸ்மார்க் - வல்லபாய் படேல்
74. இந்தியாவின் விடிவெள்ளி - ராஜா ராம் மோகன் ராய்
75. ஆசிய ஜோதி, இந்தியாவின் ஆபரணம் - நேரு
76. இந்தியாவின் கிளி - அமிர்குஸ்ரு
77. இந்தியாவின் தேச பந்து - சி.ஆர்.தாஸ்
78. இந்தியாவின் பங்க பந்து - முஜிபூர் ரஹமான்
79. இந்திய வானசாஸ்த்திரத்தின் தந்தை - ஆரியப்பட்டர்
80. பஞ்சாப் சிங்கம் - வாலா லஜபதிராய்
81. மராத்திய சிங்கம் - சிவாஜி
82. லோகமான்யர் - பாலகங்காதர திலகர்
83. பீமாராவ் ராம்ஜி - அம்பேத்கர்
84. இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர் - தயானந்த சரஸ்வதி
85. தமிழ்நாட்டின் மாப்பசான் - ஜெயகாந்தன்
86. பாவலர் ஏறு - பெருஞ்சித்தரனார்
87. இந்தியாவின் ஷேக்ஸ்பியர் - காளிதாசர்
89. தென்னாட்டு தாகூர் - அ.கி.வேங்கடரமணி
90. தென்னாட்டின் ஜான்சிராணி - கடலூர் அஞ்சலையம்மாள்
91. கவிக்கோ - அப்துல் ரஹமான்
92. தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா, உலகம் சுற்றிய முதல் தமிழ் அறிஞர் - மு.வரதராசன்
93. தற்கால உரைநடையின் தந்தை - ஆறுமுக நாவலர்
94. தனித்தமிழ் இலக்கியத்தின் தந்தை - மறைமலை அடிகள்
95. தமிழ்நாட்டின் ஜென் ஆஸ்டின் - அநுத்தமா
96. தமிழ்நாட்டின் ஜேம்ஸ் ஹாட்லி - சுஜதா . இவரது இயர்பெயர் எஸ்.ரங்கராஜன்.
97. தமிழகத்தின் அன்னிபெசண்ட் - மூவலூர் இராமாமிர்தம் அம்மையார். அவ்வாறு அழைத்தவர் காந்தியடிகள்.
98. தென்னாட்டு போஸ் - முத்துராமலிங்க தேவர்
99. தென்னாட்டு திலகர், செக்கிழுத்த செம்மல், கப்பல் ஓட்டிய தமிழன், வ.உ.சி - வ.உ.சிதம்பரனார்.
100. பகுத்தறிவுக் கவிராயர் - உடுமலை நாரயணகவி
101. சிலம்புச் செல்வர் - மா.பெ.சிவஞானம்
102. அரசியலின் சொல்லின் செல்வர் -ஈ.வே.கி.சம்பத்
103. இலக்கியத்தின் சொல்லின் செல்வர் - இரா.பி.சேதுப்பிள்ளை
104. சொல்லின் செல்வன் - அனுமன்
105. முத்தமிழ் காவலர் - கி.ஆ.பெ. விஸ்வநாதம்
106. தமிழ் தென்றல் - திரு.வி.கல்யாண சுந்தரனார் (திருவாரூர் விருத்தாச்சலம் கல்யாண சுந்தரனார்)
107. குழந்தைக் கவிஞர் - அழ.வள்ளியப்பா
108. இயற்கைக் கவிஞர் - வில்லியம் வொர்ட்ஸ்வொர்த்
109. மக்கள் கவிஞர் - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்
110. கரந்தைக் கவிஞர் - வேங்கடாஜலம் பிள்ளை
111. நாமக்கல் கவிஞர், காந்தியக்கவிஞர், ஆஸ்தான கவிஞர், ஆட்சி மொழிக்காவலர், முதல் அரசவைக் கவிஞர் - வெ.ராமலிங்கம்பிள்ளை
112. திருவருட்பிரகாச வள்ளலார் - இராமலிங்க அடிகளார்
113. திவ்ய கவி, தெய்வகவி, அழகிய மாணவாளதாசர் - பிள்ளைபெருமாள் ஐயங்கார்
114. கவியரசு - முடியரசன் - இயற்பெயர் துரைராசு
115. நாடகத்தந்தை - பம்மல் சம்மந்த முதலியார்
116. தமிழ்நாடக தலைமை ஆசிரியர், நாடக உலகின் இமயமலை - சங்கரதாஸ் சாமிகள்
117. தமிழ் நாடக மறுமலர்ச்சி தந்தை - கந்தசாமி
118. சிறுகதை மன்னன், புதுமைப் பித்தன் - சொ.விருத்தாசலம்
119. சிறுகதையின் முன்னோடி - வ.வே.சு.ஐயர்
120. புதுக்கவிதையின் பிதாமகன் - நா.பிச்சமூர்த்தி
121. இசைக்குயில் - எம்.எஸ்.சுப்புலட்சுமி
122. திரை இசைத் திலகம் - மருதகாசி
123. ஏழிசை மன்னர் - தியாகராஜ பாகவதர்
124. முத்தையா - கண்ணதாசன் (சேரமான் காதலி என்ற புதினத்திற்கு சாகித்ய அகடாமி பரிசு பெற்றவர்)
125. கவிராட்சன் - ஒட்டக்கூத்தர்
126. ரசிகமணி - டி.கே.சிதம்பரநாத முதலியார்
127. பண்டித மணி - மு.கதிரேச செட்டியார்
128. நவீனக் கம்பர் - மீனாட்சி சுந்தரனார்
129. அமுது அடியடந்த அன்பர், திருவாதவூரர், ஆளுடை அடிகள் - மாணிக்கவாசகர் (சைவ சமயக்குரவரர் நால்வரில் ஒருவர்)
129. திராவிட சிசு, ஆளுடைப்பிள்ளை - திருஞானசம்பந்தர்
130. அப்பர், வாசீகர், தருமசேனர், மருள்நீக்கியார், ஆளுடை அரசு - திருநாவுக்கரசர்
131. பொதிகை முனி - அகத்தியர்
132. நாவலர் - சோமசுந்தர பாரதியார்
133. கவியோகி - சுத்தானந்த பாரதியார்
134. பரிதிமாற்கலைஞர், தமிழ் நாடகப் பேராசிரியர் - சூரிய நாராயண சாஸ்திரி
135. தமிழ் மாணவர் - ஜி.யூ.போப் (ஜியார்ஜ் யூக்ளோ போப், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். நாலடியாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்)
136. கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி - வீரமாமுனிவர். (இவர் இத்தாலி நாட்டில் பிறந்தவர். இவருக்கு தமிழ் கற்றுத் தந்தவர் மதுரை சுப்பிரமணியன்)
137. திராவிட ஒப்பிலக்கணத் தந்தை - கார்டுவெல்
138. இரட்டைப் புலவர்கள் - இளஞ்சூரியர், முதுசூரியர்
139. இலக்கண தாத்தா - மே.வி.வேணுகோபால்
140. மைசூர் புலி - திப்புசுல்தான்
141. மாதர்குல மாணிக்கம் - முத்துலட்சுமி ரெட்டி (அவ்வை இல்லத்தை உருவாக்கியவர்)
142. வைணவம் தந்த செல்வி, சூடிக்கொடுத்த சுடர்கொடி - ஆண்டாள்
143. சுல்தான் அப்துல் காதர் - குணங்குடி மஸ்தான்
144. மே தினம் கண்டவர் - சிங்கார வேலனார்
145. காந்தியடியின் தத்தெடுக்கப்பட்ட மகள் எனப் பெயர் பெற்றவர் - அம்புஜத்தமாள் 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel