Type Here to Get Search Results !

2nd DECEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


2nd DECEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

பிரதமர் அலுவலகத்தின் பெயரை 'சேவா தீர்த்' (புனிதமான சேவைத்தலம்) என்று பெயர் மாற்றம்
  • ராஜ் பவன்களை தொடர்ந்து பிரதமர் அலுவலகத்தின் பெயரை 'சேவா தீர்த்' (புனிதமான சேவைத்தலம்) என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
  • பிரதமர் அலுவலகம் அமைச்சரவைச் செயலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் இந்தியா ஹவுஸ் ஆகியவற்றின் அலுவலகங்களையும் உள்ளடக்கும், இது வருகை தரும் பிரமுகர்களுடன் உயர் மட்ட பேச்சுவார்த்தைகளுக்கான இடமாக இருக்கும்.
  • “சேவா தீர்த்தம்” என்பது சேவை உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு பணியிடமாகவும், தேசிய முன்னுரிமைகள் வடிவம் பெறும் இடமாகவும் இருக்கும் எனவும் இந்தியாவின் பொது நிறுவனங்கள் அமைதியான ஆனால் ஆழமான மாற்றத்திற்கு உட்பட்டுள்ளன.
  • ஆட்சி என்ற யோசனை ‘சத்தா’ (அதிகாரம்) இலிருந்து ‘சேவா’ (சேவை) க்கும், அதிகாரத்திலிருந்து பொறுப்புக்கும் நகர்கிறது, இந்த மாற்றம் நிர்வாக ரீதியாக மட்டுமல்ல, கலாச்சார மற்றும் தார்மீக ரீதியானது. 
  • பிரதமர் நரேந்திர மோடியின் கீழ், ‘கர்த்தவ்ய’ (கடமை) மற்றும் வெளிப்படைத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் நிர்வாக இடங்கள் மறுவடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் “ஒவ்வொரு பெயரும், ஒவ்வொரு கட்டிடமும், ஒவ்வொரு சின்னமும் இப்போது ஒரு எளிய யோசனையை சுட்டிக்காட்டுகின்றன. சேவை செய்ய அரசாங்கம் உள்ளது.
  • சமீபத்தில், ராஷ்டிரபதி பவனில் இருந்து இந்தியா கேட் வரை மரங்கள் நிறைந்த அவென்யூவான ராஜ்பாத்தை, கர்த்தவ்ய பாதை என்று அரசாங்கம் மறுபெயரிட்டது.
இந்தியாவின் ஜிடிபி 'சி கிரேடு' கணக்கீடு - சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு
  • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 2025-26 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 8.2% ஆக உயர்ந்துள்ளது.
  • இது கடந்த ஆறு காலாண்டுகளில் இல்லாத அதிகபட்ச வளர்ச்சியாகும் என்று ஒன்றிய அரசு தெரிவித்தது. ஆனால் சர்வதேச நாணய நிதியம் இந்த ஜிடிபி கணக்கீட்டை சி கிரேடு அறிக்கை என்று தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.  
  • இந்தியாவின் பொருளாதாரத் திட்டமிடல் மற்றும் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் புள்ளிவிவரங்களின் தரம் இந்தியாவில் குறைவாக உள்ளது. இந்தியாவின் தேசியக் கணக்கு விவரங்களின் தரத்திற்கு 'சி' கிரேடு (இரண்டாவது மிகக் குறைந்த மதிப்பீடு) அடிப்படையில் உள்ளது.
நவம்பர் மாதத்தில் ரூ.1.7 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்
  • கடந்த நவம்பர் மாதத்தில் 1,70,276 கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகியுள்ளது. முந்தைய ஆண்டு ஆண்டு நவம்பரில் 1,69,016 கோடி வசூல் ஆகியிருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் 0.7 சதவீதம் அதிகரித்துள்ளது. 
  • கடந்த அக்டோபர் மாதத்தில் முந்தைய ஆண்டை விட 4.6 சதவீதம் அதிகரித்து, ரூ.1.95 லட்சம் கோடி வசூலானது. கடந்த மாதத்தில் வசூல் குறைந்ததற்கு ஜிஎஸ்டி வரி குறைப்பும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. 
  • நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான 8 மாதங்களில் ரூ.14,75,488 கோடி வசூலானது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8.9 சதவீத வளர்ச்சியாகும்.
தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவோருக்கு உதவிடும் வகையில் ரிலையன்ஸ் ஜியோவுடன் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒப்பந்தம்
  • தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பை மேம்படுத்தவும் தடையற்ற போக்குவரத்து அனுபவத்தை ஏற்படுத்தவும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 
  • தேசிய நெடுஞ்சாலைகளில் தொலைத்தொடர்பு அடிப்படையிலான பாதுகாப்பு எச்சரிக்கை முறையை அறிமுகப்படுத்துவதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • ஜியோவின் 4ஜி  மற்றும் 5ஜி சேவையைப் பயன்படுத்தும் பயணிகள் தங்களது மொபைல் போன்களில் முன்கூட்டியே எச்சரிக்கை தகவல்களை பெறமுடியும்.  
  • விபத்து பகுதிகள், விலங்குகள் நடமாடும் பகுதிகள், பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள்  மற்றும் அவசர கால மாற்றுப்பாதை குறித்த தகவல்களை இதன் மூலம்  அறிந்து கொள்ள முடியும்.
  • இத்தகவல்களை உரிய நேரத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில்  பயணிப்போருக்கு அளிப்பதன் மூலம் அவர்கள் அதற்கேற்றால் போல் தங்களது வாகனங்களை இயக்க வகை செய்யப்படுகிறது. இந்த எச்சரிக்கை தகவல்களை குறுஞ்செய்தி, வாட்ஸ்அப், ஆகியவற்றின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel