
8th OCTOBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
வீடூரில் 2000 ஆண்டு பழமையான தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு
- விழுப்புரம் மாவட்டத்தின் வீடூர் கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற மேற்பரப்பு ஆய்வில் 2000 ஆண்டுகள் பழமையான தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- இரண்டு பானை ஓடுகளில் "நோறா I" மற்றும் "பசி" என்ற தமிழ் சொற்கள் தமிழ் பிராமி எழுத்துக்களால் குறிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு பானை ஓட்டில் தொன்மை காலத்தில் பயன்பாட்டில் இருந்த குறியீடுகளும் காணப்படுகின்றன.
- தமிழ்நாடு அரசு, உயிரியல் பன்மைச் சட்டம் 2002, பிரிவு 37(1)ன் கீழ், அரிட்டாபட்டியை நவம்பர் 2022 இல் பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது, காசம்பட்டி மார்ச் 2025 இல் அறிவிக்கப்பட்டது மற்றும் எலத்தூர் ஏரி செப்டம்பர் 2025-ல் அறிவிக்கப்பட்டது.
- இதனைத் தொடர்ந்து 32.22.50 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட ஈரோடு மாவட்டத்திலுள்ள நாகமலை குன்றினை மாநிலத்தின் நான்காவது உயிரியல் பாரம்பரியத் தளமாக அறிவித்துள்ளது.
- பல்லுயிர் பாரம்பரியத் தளங்கள் என்பவை, தனித்துவமான மற்றும் நலிந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை ஆதரிக்கும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாகும்.
- இவை அரிய, அச்சுறுத்தலுக்கு உள்ளான மற்றும் முக்கிய நலிந்த இனங்களைப் பாதுகாக்கின்றன, பரிணாம முக்கியத்துவத்தைப் பேணிப் பாதுகாக்கின்றன, இவை இயற்கையுடனான கலாசாரப் பிணைப்புகளை வலுப்படுத்துகின்றன.
- அதன் நிலப்பரப்பில் உள்ள ஆழமான நீர்நிலைகள், ஆழமற்ற ஓரங்கள், சேற்று நிலங்கள் (மட்பிளாட்கள்) மற்றும் பாறைப் பகுதிகள் ஆகியவை வளமான பல்லுயிர்களை ஆதரிக்கின்றன.
- தமிழ்நாடு ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு (2024) நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, இங்கே 138 தாவர இனங்கள், 118 பறவை இனங்கள் (30 இடம்பெயரும் மற்றும் 88 உள்ளூர்), 7 பாலூட்டிகள், 11 ஊர்வனங்கள், 5 சிலந்திகள் மற்றும் 71 பூச்சியினங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதைக் காட்டுகின்றன.
- இங்குள்ள முக்கிய உயிரினங்களில் பெரிய புள்ளிகள் கொண்ட கழுகு, வெளிறிய பூனைப் பருந்து மற்றும் பென்னெல்லிஸ் கழுகு ஆகியவை அடங்கும்.
- தாவரங்களைப் பொறுத்தவரை, 48 இனங்கள் மற்றும் 114 பேரினங்களின் கீழ் வரும் 138 தாவர இனங்கள் உள்ளன. இதில் 125 இருவித்திலைத் தாவரங்கள் மற்றும் 13 ஒருவித்திலைத் தாவரங்கள் அடங்கும்.
- பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 8 புதன்கிழமை நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் (NMIA) முதல் கட்டத்தை திறந்து வைத்தார். இந்தியாவின் முதல் முழுமையான டிஜிட்டல் விமான நிலையம் என்ற பெருமையை இந்த விமான நிலையம் பெற்றுள்ளது.
- ஆண்டுக்கு 2 கோடி பயணிகளை இந்த விமான நிலையம் கையாளும் என்றும் இந்த ஆண்டின் இறுதிக்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நவி மும்பை விமான நிலையம் ரூ.19,650 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இது பல விமான நிலையங்களைக் கொண்ட நகரங்கள் அல்லது பரந்த பெருநகரப் பகுதிகளின் உலகளாவிய பட்டியலில் மும்பையை சேர்க்கிறது. லண்டன், நியூயார்க் மற்றும் டோக்கியோ ஆகியவை அடங்கும்.
- அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன், டி.சி.-யில் அமைந்துள்ள உலக வங்கி உலகநாடுகளில் பொருளாதாரத்தை கண்காணிக்கும் சர்வதேச நிறுவனமாக உள்ளது. இந்நிலையில் 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணித்திருந்தது.
- அமெரிக்காவின் வர்த்தக வரிவிதிப்பு மற்றும் உலகநாடுகளிடையேயான ஏற்பட்டுள்ள போர் பதற்றம் போன்ற காரணங்களால் இந்தியா கடுமையாக பாதிக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் தற்போது உலக வங்கி தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது.
- அதன்படி, 2025-26ம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.5%ஆக இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது. விவசாய உற்பத்தி, வலுவான நுகர்வோர் வளர்ச்சி, கிராமப்புற ஊதிய வளர்ச்சி உள்ளிட்டவை இதற்கு முக்கிய காரணம் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
- மேலும் 2026-27ம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.3%ஆக குறையும் எனவும் உலக வங்கி கணித்துள்ளது.
- இந்திய மொபைல் மாநாட்டை புதுதில்லியில் உள்ள யஷோபூமியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். ஆசியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு, ஊடகம், தொழில்நுட்பத்துறைக்கான இந்த மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், இதில் கலந்து கொள்வதற்காக வந்துள்ள அனைத்துப் பிரதிநிதிகளையும் வரவேற்றார்.

