Type Here to Get Search Results !

2nd SEPTEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


2nd SEPTEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

பிரதமர் நரேந்திர மோடி புதுதில்லியில் செமிகான் இந்தியா 2025ஐ தொடங்கிவைத்தார்
  • இந்தியாவின் குறைக்கடத்தி துறையை வளர்ச்சியடைய செய்யும் நோக்கில் செமிகான் இந்தியா – 2025-ஐ புதுதில்லி யஷோபூமியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
  • செப்டம்பர் 2 முதல் 4 வரை நடைபெறும் செமிகான் இந்தியா 2025 என்ற 3 நாள் மாநாடு இந்தியாவில் வலுவான நீடித்த செமிகண்டக்டர் சூழல் அமைப்பில் கவனம் செலுத்தும். 
  • மேலும், வடிவமைப்புடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களை எடுத்துரைப்பதோடு புத்தொழில் சூழல் அமைப்பின் வளர்ச்சி, சர்வதேச ஒத்துழைப்பு, இந்தியாவின் செமிகண்டக்டர் துறைக்கான எதிர்காலத் திட்டம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தும்.
  • இந்த மாநாட்டில் 48 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் அதிகமான பிரதிநிதிகள், 50 உலகளாவிய தலைவர்கள் உட்பட 150-க்கும் அதிகமான உரையாளர்கள் 350-க்கும் அதிகமான காட்சிப்படுத்துநர் உட்பட 20,750 பேர் பங்கேற்பார்கள். 
  • இதில், 6 நாடுகளின் வட்டமேசை விவாதங்களும் நடைபெறும். பணியாளர் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுக்கான அரங்குகளும் இடம் பெறும்.
பிரதமர் நரேந்திர மோடி பீகார் மாநில வாழ்வாதார கடன் கூட்டுறவு கூட்டமைப்பை தொடங்கி வைத்தார்
  • பிரதமர் நரேந்திர மோடி பீகார் மாநில வாழ்வாதார கடன் கூட்டுறவு கூட்டமைப்பை காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
  • இந்த நிகழ்ச்சியில் பீகார் முதலமைச்சர் திரு நிதிஷ் குமார், துணை முதலமைச்சர்கள், திரு சாம்ராட் சௌதரி, திரு விஜய் குமார் சின்ஹா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  • இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்த புனிதமிக்க செவ்வாய்க்கிழமையில் உயர்ந்த நம்பிக்கைக்குரிய முன்முயற்சி தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறினார். 
  • வாழ்வாதார கடன் கூட்டுறவு கூட்டமைப்பு மூலம் பீகாரின் அன்னையர்கள் மற்றும் சகோதர, சகோதரிகளுக்கு புதிய வசதி அளிக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.
மேகலாயாவில் இந்தியா – தாய்லாந்து கூட்டு ராணுவப் பயிற்சி
  • இந்தியா – தாய்லாந்து இடையேயான 14-வது கூட்டு ராணுவப் பயிற்சியான ‘மைத்ரி’ மேகலாயாவின் உம்ராயில் செப்டம்பர் 1 அன்று தொடங்கியது. 
  • செப்டம்பர் 14 வரை நடைபெறவுள்ள இருதரப்பு பயிற்சியில் இருநாட்டு ராணுவங்களின் தற்போதைய திட்டங்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. 
  • இந்திய ராணுவத்தின் சார்பில் 120 வீரர்களும் தாய்லாந்து ராணுவத்தின் சார்பில் 53 வீரர்களும் இக்கூட்டுப் பயிற்சியில் இடம் பெற்றுள்ளனர். கடந்த 13-வது கூட்டு ராணுவப் பயிற்சி தாய்லாந்தில் டாக் மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் வச்சிராப்ராக்கானில் நடைபெற்றது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel