Type Here to Get Search Results !

21st SEPTEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


21st SEPTEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தமிழக அரசுடன் கொச்சி ஷிப்யார்ட் மற்றும் மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் 
  • தமிழகத்தில் தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளங்களை நிறுவுவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகி உள்ளன. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் சிப்காட் நிர்வாகமும் மற்றும் வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகமும் சில வாரங்களுக்கு முன்பு கையொப்பமிட்டன.
  • “கொச்சி ஷிப்யார்ட் நிறுவனம், உலக அளவிலான வணிகக் கப்பல் கட்டும் தளத்தை நிறுவ ரூ.15,000 கோடியை முதலீடு செய்யும். முதல்கட்டமாக 10,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் (4,000 நேரடி மற்றும் 6,000 மறைமுக) உருவாக்கப்படும்.
  • மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் நிறுவனமானது, ரூ.15,000 கோடி முதலீட்டில் மற்றொரு உலகளாவிய வணிகக் கப்பல் கட்டும் தளத்தை அமைக்கிறது. இது 45,000-க்கும் மேற்பட்டோருக்கு (5,000 நேரடி மற்றும் 40,000 மறைமுக) வேலைவாய்ப்பை உருவாக்கும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இந்தியாவின் கடல்சார் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய நகர்வாக இருக்கும்.
  • இந்த இரண்டு மிகப்பெரிய திட்டங்களும் சேர்ந்து, கப்பல் கட்டுதல் மற்றும் கடல்சார் கண்டுபிடிப்புகளுக்கான உலகளாவிய மையமாக தமிழகம் உருவெடுக்க வழிவகுக்கும்.
திருமலாபுரத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈட்டி கண்டெடுப்பு
  • திருமலாபுரத்தில் குலசேகரப்பேரி கண்மாய் அருகே 35 ஏக்கரில் இரும்புக் கால இடுகாடு உள்ளது. இங்கு தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில், 2024ஆம் ஆண்டுமுதல் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. 
  • அகழாய்வு இயக்குநா் வசந்தகுமாா், துணை இயக்குநா் காளிஸ்வரன் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் இப்பணியில் ஈடுபட்டுள்ளனா்.
  • தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே திருமலாபுரம் தொல்லியல் அகழாய்வு மையத்தில் தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய அளவில் கற்களாலான அரண்களுக்குள் ஈமத் தாழிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 
  • 13.50 மீட்டா் நீளம், 10.50 மீட்டா் அகலமுள்ள 35 கற்பலகைகளாலான அரணுக்குள் ஈமத் தாழிகள் இருந்ததும், அவற்றின்மேல் 1.50 மீட்டா் உயரத்துக்கு கூழாங்கற்கள் நிரப்பப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது.
  • இப்பகுதியில் 38 குழிகள் தோண்டப்பட்டதில் 75 சிவப்பு, ஒரு கருப்பு சிவப்பு என 76 ஈமத் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் கழுத்துப் பகுதியில் கூம்பு, கூம்பின்கீழ் வட்டம், வட்டத்துக்குள் கூட்டல் என பல்வேறு சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
  • மேலும், 2.5 மீட்டா் நீள ஈட்டியும் கிடைத்துள்ளது. இதுவரை கிடைக்கப்பெற்றதில் இது மிகவும் நீளமானது என்பது குறிப்பிடத்கக்தது. 
  • மேலும், 3 தங்க வளையங்கள், பல்வேறு குறியீடுகளுடன் ஈமத் தாழிகள், பல வடிவத்தாலான மண்பாண்டங்கள், இரும்புப் பொருள்கள் என 250-க்கு மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன. இவை சுமாா் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படுகிறது.
உலக ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ஆனந்த்குமார் தங்கம் வென்றார்
  • உலக ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற 42. கி.மீ. மாரத்தான் ஸ்டேட்டிங்கில் தமிழகத்தைச் சேர்ந்த ஆனந்த்குமார் வேல்குமார் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
  • இதமூலம், ஸ்பீட் ஸ்கேட்டிங்கில் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
  • இதே சாம்பியன்ஷிப் போட்டியில், 500 மீட்டர் ஸ்பிரிண்ட் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். 1,000 மீட்டர் ஸ்பிரிண்ட் பிரிவில் பங்கேற்று தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel