Type Here to Get Search Results !

2nd MAY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


2nd MAY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

கேரளாவில் ரூ. 8,800 கோடி மதிப்புள்ள விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
  • கேரளாவின் திருவனந்தபுரத்தில் இன்று ரூ.8,800 கோடி மதிப்புள்ள விழிஞ்ஞம் சர்வதேச ஆழ்கடல் பன்னோக்கு துறைமுகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
  • 8,800 கோடி ரூபாய் மதிப்புள்ள விழிஞஞ்ஞம் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகம், வளர்ச்சியடைந்த இந்தியாவின் ஒருங்கிணைந்த தொலைநோக்கின் ஒரு பகுதியாக இந்தியாவின் கடல்சார் துறையில் செய்யப்படும் மாற்றத்தக்க முன்னேற்றங்களைக் குறிக்கும் நாட்டின் முதல் பிரத்யேக கொள்கலன் கையாளும் துறைமுகமாகும்.
இந்திய விமானப்படை பணியாளர்களின் துணைத் தளபதியாக ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி பொறுப்பேற்றார்
  • ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி, பிவிஎஸ்எம் ஏவிஎஸ்எம் விஎம், இந்திய விமானப்படை பணியாளர்களின் துணைத் தளபதியாக 2025, மே 02 அன்று பொறுப்பேற்றார்.
  • ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி, டேராடூனில் உள்ள இந்திய தேசிய ராணுவக் கல்லூரியில் தனது பள்ளிப் படிப்பை முடித்து, கடக்வாசலாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர்ந்தார்.
  • விமானப்படையின் துணைத் தளபதியாக பொறுப்பேற்பதற்கு முன், தென்மேற்கு விமானப்படை காமாண்டில் கமாண்டிங்-இன்-சீஃப் ஆக இருந்தார். 
  • இவரது சிறப்பான சேவையைப் பாராட்டி, 2025-ம் ஆண்டு பரம் விஷிஷ்ட் சேவா பதக்கம் (பிவிஎஸ்எம்), 2022-ம் ஆண்டு அதி விஷிஷ்ட் சேவா பதக்கம் (ஏவிஎஸ்எம்) 2008-ம் ஆண்டு வாயு சேனா பதக்கம் (விஎம்) ஆகிய குடியரசுத்தலைவர் விருதுகள் வழங்கப்பட்டன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel