Type Here to Get Search Results !

3rd APRIL 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


3rd APRIL 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

பிரதமரின் தாய்லாந்து பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள்
  • தாய்லாந்துக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள  பிரதமர் திரு. நரேந்திர மோடி, தாய்லாந்து பிரதமர் மேதகு திரு பத்ரோடன் ஷினவத்ராவை இன்று பாங்காக் நகரில் சந்தித்தார். அரசு இல்லம் சென்றடைந்த பிரதமரை திரு ஷினவத்ரா வரவேற்று சம்பிரதாய முறைப்படி வரவேற்றார். 
  • இது அவர்களின் இரண்டாவது சந்திப்பாகும். முன்னதாக, 2024 அக்டோபரில் வியன்டியானில் நடைபெற்ற ஆசியான் தொடர்பான உச்சிமாநாட்டின் போது இரு தலைவர்களும் சந்தித்தனர்.
  • இந்தியா மற்றும் தாய்லாந்து இடையேயான ஒட்டுமொத்த இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர்.
  • இந்தியா-தாய்லாந்து உத்திசார் ஒத்துழைப்பை நிறுவுவது குறித்த கூட்டுப் பிரகடனம் வெளியிடப்பட்டது. 
  • டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்புக்காக தாய்லாந்து அரசின் டிஜிட்டல் பொருளாதார அமைச்சகத்துக்கும் இந்திய அரசின் மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • குஜராத்தின் லோதலில் உள்ள தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை மேம்படுத்துவதற்காக, மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சகத்துக்கும் தாய்லாந்து அரசின் கலாச்சார அமைச்சகத்தின் நுண்கலைத்துறைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • மத்திய அரசின் தேசிய சிறு தொழில்கள் கழகத்துக்கும், தாய்லாந்து அரசின் சிறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு அலுவலகத்துக்கும்  இடையே குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • மத்திய அரசின் வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்துக்கும் தாய்லாந்து வெளியுறவு அமைச்சகத்துக்கும்  இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • மத்திய அரசின் வடகிழக்கு கைவினைப்பொருட்கள், கைத்தறி மேம்பாட்டுக் கழகத்துக்கும் தாய்லாந்து அரசின் படைப்பாற்றல் பொருளாதார நிறுவனத்துக்கும்  இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஐந்து மாநிலங்களில் ஊரக வளர்ச்சியை ஊக்கப்படுத்த 15-வது நிதி ஆணையத்தின் ரூ. 1,440 கோடி மானியத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது
  • 2024-25 நிதியாண்டின் அருணாச்சலப் பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், நாகாலாந்து, பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும், பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களுக்கும் 15-வது நிதி ஆணையத்தின் ரூ. 1,440 கோடி மானியத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.
  • இந்த மானியங்கள் ஒவ்வொரு நிதியாண்டிலும் இரண்டு தவணைகளாக ஒதுக்கீடு செய்யப்பட்டு பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், ஜல்சக்தி அமைச்சகம் (குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை) ஆகியவற்றின் பரிந்துரைகளின் அடிப்படையில் நிதி அமைச்சகத்தால் விடுவிக்கப்படுகிறது.
  • இதன்படி, 2024-25 நிதியாண்டின் முதல் தவணையாக ஒருங்கிணைந்த மானியம் மத்திய பிரதேசத்திற்கு ரூ.651.7794 கோடியும், குஜராத் மாநிலத்திற்கு ரூ.508.6011 கோடியும், 2022-23 நிதியாண்டின் முதல் தவணையாக அருணாச்சலப் பிரதேசத்திற்கு ரூ.35.40 கோடியும், நாகாலாந்து மாநிலத்திற்கு ரூ. 19.20 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. 
  • பஞ்சாப் மாநிலத்திற்கு 2024-25-ம் நிதியாண்டின் 2-ம் தவணையாக ரூ.225.975 கோடி வழங்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி துணை ஆளுநராக பூனம் குப்தா நியமனம்
  • ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த எம்.டி.பத்ரா கடந்த ஜனவரி மாதம் பதவியில் இருந்து விலகிய பிறகு அப்பதவி காலியாக இருந்தது.
  • இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பூனம் குப்தாவை நியமிப்பதற்கு நியமனங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
  • பூனம் குப்தா தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின்(என்சிஏஇஆர்) இயக்குனர் ஜெனரலாக உள்ளார்.பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் உறுப்பினர் மற்றும் 16வது நிதி கமிஷனுக்கான ஆலோசனை குழுவின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். 
  • வாஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியில் நீண்ட காலம் பணியாற்றிய பூனம் குப்தா கடந்த 2021ல் என்சிஏஇஆர்-ல் அவர் சேர்ந்தார்.
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மக்களவையில் நிறைவேற்றம்
  • மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் கோரி மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா மக்களவையில் சட்டப்பூர்வ தீர்மானத்தை முன்மொழிந்தார். 
  • இதையடுத்து மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மணிப்பூரில் நடந்த வன்முறையில் உயிரிழந்தவர்களுக்கு அவையில் அஞ்சலியும், அனுதாபமும், ஆழ்ந்த வருத்தமும் தெரிவிக்கப்பட்டது.
வக்ஃப் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • வக்ஃப் திருத்த சட்ட மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்து.இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த சட்டத்தை பரிசீலிக்க கூட்டு நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரை செய்யப்பட்டது.
  • இதனையடுத்து கூட்டு நடவடிக்கை குழுவின் ஆய்வின் போது எதிர்கட்சிகள் கொடுத்த திருத்தம் முழுவதுமாக நிராகரிக்கப்பட்டு மீண்டும் வக்ஃப் திருத்த சட்ட மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. 
  • இதனையடுத்து எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் வியாழக்கிழமை நிறைவேற்றியது. இந்த மசோதாவுக்கு இந்தியா கூட்டணியின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
  • எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செய்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்ட பின்னர் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்காக அவை நள்ளிரவு வரை நடைபெற்றது. 
  • நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் பதிலுக்குப் பிறகு, சபாநாயகர் ஓம் பிர்லா, அவையின் முடிவிற்காக பட்டியலிடப்பட்ட வணிகத்தில் உள்ள உருப்படி எண் 12 - வக்பு (திருத்த) மசோதா, 2025 - எடுத்துக் கொள்ளப்படுவதாக அறிவித்தார். 
  • மசோதா பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு பின்னர் "திருத்தங்களுக்கு உட்பட்டு, இந்த மசோதாவிற்கு ஆதரவு 288, எதிர்ப்பு 232. பேரும் வாக்களித்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel