
27th MARCH 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம் - தமிழக சட்டசபையில் நிறைவேற்றம்
- மத்திய அரசு சமீபத்தில் வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. இந்நிலையில், தமிழக சட்டசபையில் அந்த மசோதாவை கைவிட வேண்டும் என்று அரசினர் தீர்மானத்தை கொண்டுவர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.
- இந்த நிலையில், வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் கொண்டு வந்து முன்மொழிந்தார்.
- இதனைத் தொடர்ந்து, இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். வக்ஃப் தீர்மானத்திற்கு பா.ஜ.க மட்டும் எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து வெளியேறியது. ஆனால், அ.தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தன.
- இதனையடுத்து, வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
- திரிபுரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2024-25-ம் நிதியாண்டிற்கான பதினைந்தாவது நிதி ஆணைய மானியத்தின் இரண்டாவது தவணையை மத்திய அரசு விடுவித்துள்ளது.
- இது உள்ளாட்சி நிர்வாகத்தை வலுப்படுத்தவும், கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவிடும். திரிபுராவில், அனைத்து வட்டார பஞ்சாயத்துகள், மாவட்ட பஞ்சாயத்துகள் மற்றும் பாரம்பரிய உள்ளாட்சி அமைப்புகளுடன் சேர்த்து, தகுதியான 589 கிராம பஞ்சாயத்துகளுக்கு பயனளிக்கும் வகையில், மத்திய அரசு 31.1259 கோடி ரூபாயை நிபந்தனையற்ற மானியத் தொகையாக (2-வது தவணை) ஒதுக்கீடு செய்துள்ளது.
- கர்நாடகா மாநிலம் முழுவதிலும் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உதிவிடும் வகையில் 5375 தகுதியான கிராம பஞ்சாயத்துகளுக்கு 404.9678 கோடி ரூபாயை நிபந்தனையற்ற மானியத் தொகையாக (இரண்டாவது தவணை) விடுவிக்கப்பட்டுள்ளது.
- இந்த மானியங்கள் அரசியலமைப்பு சட்டத்தின் பதினோராவது அட்டவணையின் கீழ் உள்ள 29 அம்சங்களில் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் வழங்கப்படுகின்றன.
- இந்த மானியத் தொகையை கொண்டு, சம்பளம், நிர்வாகச் செலவுகள் நீங்கலாக வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
- மக்களவையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் புதன்கிழமை நிறைவேறியது.
- குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்குகளில் நான்கு நாமினிகளை வைத்திருக்க அனுமதிக்கிறது.
- மேலும் இயக்குநர்களுக்கான "கணிசமான வட்டி" மறுவரையறை தொடர்பான மாற்றங்களையும் முன்மொழிகிறது. அதன் வரம்புகள் தற்போதைய வரம்பான ரூ .5 லட்சத்திற்கு பதிலாக ரூ .2 கோடியாக அதிகரிக்கக்கூடும்.
- அரசியலமைப்பு (தொண்ணூற்று ஏழாவது திருத்தம்) சட்டம், 2011 உடன் ஒத்துப்போகும் வகையில், கூட்டுறவு வங்கிகளில் இயக்குநர்களின் பதவிக்காலத்தை (தலைவர் மற்றும் முழுநேர இயக்குநர் தவிர) எட்டு ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தவும் இது வழிவகை செய்கிறது.