Type Here to Get Search Results !

18th FEBRUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


18th FEBRUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

பஞ்சாப், உத்தராகண்ட், சத்தீஸ்கர் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான 15வது நிதிக்குழு மானியங்களை மத்திய அரசு விடுவித்துள்ளது
  • பஞ்சாப், உத்தராகண்ட், சத்தீஸ்கரில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2024–25 நிதியாண்டிற்கான 15-வது நிதிக்குழு மானியங்களை மத்திய அரசு விடுவித்துள்ளது. 
  • பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் / ஊரக உள்ளாட்சி அமைப்புகள்  ஆகியவற்றுக்கு வழங்கப்படும் இந்த மானியங்கள் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. 
  • பஞ்சாபின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, முதல் தவணையாக ரூ.225.1707 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மாநிலத்தின் தகுதியுடைய அனைத்து 22 மாவட்ட பஞ்சாயத்துகள், 146 வட்டார பஞ்சாயத்துகள்,  13144 கிராம பஞ்சாயத்துகள் ஆகியவற்றுக்கு வழங்கப்படும். 
  • சத்தீஸ்கர் மாநிலத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 15-வது நிதிக்குழுவின்  மானியங்கள், 2024–25-ம் நிதியாண்டிற்கு  2-வது தவணையாக ரூ.237.1393 கோடியும், 2024–25 நிதியாண்டின் 1-வது தவணையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலுவைத் தொகை ரூ.6.9714 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளன.
  • உத்தராகண்டில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 2024–25-ம் நிதியாண்டின் முதலாவது தவணையாக ரூ.93.9643 கோடி விடுவிக்கப்பட்டுள்ளன. இந்த நிதி தகுதியுள்ள 7,769 கிராம பஞ்சாயத்துகளுக்கும், தகுதியுடைய 995 வட்டாரப் பஞ்சாயத்துகளுக்கும், மாநிலத்தின் தகுதியுள்ள அனைத்து 13 மாவட்ட பஞ்சாயத்துகளுக்கும் அளிக்கப்படும்.
இந்தியா - கத்தார் வணிகத்தை இரட்டிப்பாக்க ஒப்புதல்
  • கத்தாரின் அரசா் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி 2 நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று (பிப். 17) இந்தியா வந்தாா். பிரதமா் நரேந்திர மோடி விமான நிலையத்துக்கு நேரடியாக சென்று அவரை வரவேற்றாா்.
  • பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் கத்தாா் அரசா் இந்தியா வந்துள்ளாா். அவா் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது அரசுமுறைப் பயணம் இதுவாகும். முன்னதாக, கடந்த 2015, மாா்ச்சில் அவா் இந்தியாவுக்கு வந்தாா்.
  • குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை தில்லியில் உள்ள அவரது மாளிகையில் சந்தித்தார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
  • இந்த சந்திப்பின்போது, இரு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. திருத்தப்பட்ட இரட்டை வரிவிதிப்பு திருத்தம் மற்றும் கூட்டு நடவடிக்கை ஆகிய இரு ஆவணங்களில் கையெழுத்திடப்பட்டது.
  • மேலும், பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் உறவுகளை வலுப்படுத்துதல், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்பு ஆகிய 5 குறிப்புகளில் கையெழுத்தானது.
  • இதன்படி, அடுத்த 5 ஆண்டுகளில் இருதரப்பு வணிகமும் 280 கோடி டாலர் மதிப்பை எட்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 26ஆவது தலைமை தேர்தல் ஆணையர் நியமனம்
  • இந்தியாவின் 26ஆவது தலைமை தேர்தல் ஆணையராக, ஞானேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அடங்கிய குழு கூடி ஞானேஸ்வர் குமார் பெயரை அறிவித்துள்ளது.
  • நாளை முறைப்படி பதவியேற்க இருக்கும் ஞானேஷ்குமார், 2029ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி வரை இப்பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
புதிய தேர்தல் ஆணையராக விவேக் ஜோஷி நியமனம்
  • தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த ராஜீவ் குமார் ஓய்வினைத் தொடர்ந்து தேர்தல் ஆணையராக இருந்த ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையராக திங்கள்கிழமை நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து விவேக் ஜோஷி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 
  • இதன்மூலம், தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரும், தேர்தல் ஆணையர்களாக சுக்பிர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோரும் செயல்படுவர். 
  • ஹரியானா மாநிலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளரான விவேக் ஜோஷி, கடந்த 2019ம் ஆண்டு முதல் மத்திய பணிகளில் உள்ளார். முன்பு இவர், இந்திய அரசின் பணியாளர்கள் ஆணைய செயலாளராகவும், உள்துறை அமைச்சகத்தின் பதிவுத்துறை ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel