Type Here to Get Search Results !

17th FEBRUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


17th FEBRUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ஏப்ரல்-ஜனவரி 2024-25 காலகட்டத்தில் ஒட்டுமொத்த ஏற்றுமதி 7.21% அதிகரிப்பு
  • ஏப்ரல்-ஜனவரி 2024-25 காலகட்டத்தில் நாட்டின் ஏற்றுமதி தொடர்பான புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஏப்ரல்-ஜனவரி 2024-25 காலகட்டத்தில் ஒட்டுமொத்த ஏற்றுமதி (பொருட்கள் மற்றும் சேவைகள்) 682.59 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஏப்ரல்-ஜனவரி 2023-24-ல் 636.69 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது 7.21% வளர்ச்சியாகும்.
  • இந்தக் காலகட்டத்தில் பொருட்கள் ஏற்றுமதியின் ஒட்டுமொத்த மதிப்பு 358.91 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது, இது ஏப்ரல்-ஜனவரி 2023-24 காலகட்டத்தில் 353.97 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது 1.39% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
  • பெட்ரோலியம் அல்லாத பிற ஏற்றுமதிகள் ஏப்ரல் -ஜனவரி 2023-24ல் 283.45பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது ஏப்ரல்-ஜனவரி 2024-25-ல் 305.84 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது.
  • ஜனவரி 2025-ல் மின்னணு பொருட்கள், பொறியியல் பொருட்கள், மருந்துகள், அரிசி, ரத்தினங்கள், நகைகள் ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரித்து காணப்பட்டது.
  • மின்னணு பொருட்களின் ஏற்றுமதி ஜனவரி 2024-ல் 2.29 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 78.97% அதிகரித்து 2025 ஜனவரியில் 4.11 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது.
  • பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி ஜனவரி 2024-ல் 8.77 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 7.44% அதிகரித்து 2025 ஜனவரியில் 9.42 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.
  • மருந்துகள் ஏற்றுமதி ஜனவரி 2024-ல் 2.13 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 21.46% அதிகரித்து 2025 ஜனவரியில் 2.59 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.
  • அரிசி ஏற்றுமதி ஜனவரி 2024-ல் 0.95 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 44.61% அதிகரித்து 2025 ஜனவரியில் 1.37 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.
  • ரத்தினங்கள், நகைகள் ஏற்றுமதி ஜனவரி 2024-ல் 2.59 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 15.95% அதிகரித்து 2025 ஜனவரியில் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.
  • 2025 ஜனவரி மாத்திற்கான மொத்த ஏற்றுமதி (வர்த்தகம், சேவைகள் இணைந்து) 74.97 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2024 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது 9.72 சதவீத வளர்ச்சியாகும்
இந்தியாவின் நான்காவது தலைமுறை ஆழ்கடல் நீர்மூழ்கிக் கப்பல் மத்ஸ்யா 6000 சோதனை வெற்றி
  • மத்திய அரசின் ஆழ்கடல் இயக்கச் செயல்பாடுகளின் கீழ், புவி அறிவியல் அமைச்சகம், சமுத்திரயன் திட்டத்தின் ஒரு பகுதியாக "மத்ஸ்யா-6000" என்று பெயரிடப்பட்ட 4-வது தலைமுறை ஆழ்கடல் நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்து மேம்படுத்தும் பணியை தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்திடம் ஒப்படைத்திருந்தது. 
  • இந்த அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல் அதன் சிறிய 2.1 மீட்டர் விட்டம் கொண்ட கோள வடிவ பகுதிக்குள் மூன்று பேரை தங்க வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் கடல் ஆய்வுத் திறன்களில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.
  • இதற்கான வடிவமைப்பு கட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மத்ஸ்யா-6000-ன் செயல்பாட்டிற்கு முக்கியமான பல்வேறு துணை அமைப்புகள் அடையாளம் காணப்பட்டு உருவாக்கப்பட்டன. 
  • துணை அமைப்புகள் அனைத்தும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் அவை தற்போது முழுமையான ஒருங்கிணைப்புக்கும் சோதனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளன.
  • அதன் வெளிப்புற கட்டமைப்பில் தடையற்ற ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக, 500 மீட்டர் செயல்பாட்டு வரம்பில் ஒருங்கிணைந்த உலர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
2025-26 வரை பிரதமரின் விவசாயிகள் வருமான பாதுகாப்பு இயக்கத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்
  • 15-வது நிதி ஆணையத்தின் காலகட்டம் வரை ஒருங்கிணைந்த பிரதமரின் விவசாயிகள் வருமான பாதுகாப்பு இயக்கத்தை (அன்னதாதா ஆய் சன்ரக்ஷன் அபியான் -PM-AASHA) அதாவது 2025-26 வரை தொடர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 
  • ஒருங்கிணைந்த பிரதமரின் ஆஷா திட்டம், கொள்முதல் நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதில் அதிக செயல்திறனை ஏற்படுத்தும். 
  • இது விவசாயிகளின் விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை வழங்க உதவுவது மட்டுமல்லாமல், நுகர்வோருக்கு மலிவு விலையில் அத்தியாவசி வேளாண் விளைபொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும்.
  • உள்நாட்டு பருப்பு உற்பத்தியை மேம்படுத்துவதில் பங்களிக்கும் விவசாயிகளை ஊக்குவிக்கவும், இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், 2024-25 கொள்முதல் ஆண்டில் உற்பத்தியில் 100% க்கு சமமான அளவில் விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு, உளுந்து, மசூர் ஆகியவற்றை கொள்முதல் செய்ய அரசு அனுமதித்துள்ளது.
மத்திய பட்டு வாரியத்தின் சில்க்டெக் 2025 சர்வதேச மாநாடு
  • ஜவுளி இணையமைச்சர் திரு பபித்ரா மார்கெரிட்டா, மத்திய பட்டு வாரியம் ஏற்பாடு செய்துள்ள சில்க்டெக்-2025 சர்வதேச மாநாட்டை புதுதில்லியில் தொடங்கி வைத்தார். 
  • சில்க்டெக் 2025 என்ற இந்த மாநாடு பாரத் டெக்ஸ் ஜவுளி கண்காட்சி நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்று வருகிறது. ஜவுளி அமைச்சகத்தின் செயலாளர் திருமதி நீலம் ஷமி ராவ், முன்னிலையில் இன்று புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்த மாநாடு தொடங்கியது. 
  •  மத்திய பட்டு வாரியத்தின் கீழ் ராஞ்சியில் செயல்படும் ஆராய்ச்சி நிறுவனம் பட்டுத் துறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் இந்த சர்வதேச மாநாட்டை ஏற்பாடு செய்து நடத்தியது.
  • பட்டுத் துறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்த இரண்டு நூல்களை இந்த மாநாட்டின் போது, ஜவுளி இணை அமைச்சர் வெளியிட்டார். 
  • மாநாட்டின் போது, மத்திய பட்டு வாரியத்தின் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்திற்கும் பிற ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel