9th NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக மூவர் தேர்வு
- உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளாக மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தலைமை நீதிபதி உள்பட 34 நீதிபதிகளைக் கொண்டது உச்ச நீதிமன்றம். எனினும், கடந்த சில மாதங்களாக 3 நீதிபதி பணியிடங்கள் காலியாக இருந்தன.
- இதையடுத்து, காலி பணியிடங்களை நிரப்பும் நோக்கில் உச்ச நீதிமன்ற கொலிஜியம் புதிய நீதிபதிகளை தேடும் பணியில் ஈடுபட்டது.
- இதையடுத்து, டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சத்திஷ் சந்திர ஷர்மா, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ், கவுகாத்தி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்தீப் மேத்தா ஆகியோரை, உச்ச நீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்கு கடந்த 6-ம் தேதி பரிந்துரை செய்தது.
- உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரை ஏற்கப்பட்டதை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் வெளியிட்டார்.இதையடுத்து, மூவரும் பதவி ஏற்க உள்ளனர்.
- இவர்கள் பதவி ஏற்ற பிறகு, உச்ச நீதிமன்றம் மீண்டும் தனது முழு பலத்தைப் பெறும். இதற்கு முன் கடந்த பிப்ரவரி மாதம், உச்ச நீதிமன்றம் முழு பலத்துடன் இருந்தது.
- அப்போது, காலியாக இருந்த இரண்டு நீதிபதி பணியிடங்கள் நீதிபதிகள் ராஜேஷ் பின்டால், அரவிந்த் குமார் ஆகியோரைக் கொண்டு நிரப்பப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
- அரிசி, கோதுமை, மைதா ஆகியவற்றின் சில்லறை விலையைக் கட்டுப்படுத்த, சந்தையில் தலையிட மத்திய அரசின் முன்முயற்சியின் ஒரு பகுதியாக, கோதுமை, அரிசி ஆகிய இரண்டின் வாராந்திர மின்னணு ஏலங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
- 8-ம் தேதி அன்று நடைபெற்ற 20வது மின்-ஏலத்தில் 3 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் 2.25 லட்சம் மெட்ரிக் டன் அரிசி திறந்த சந்தை விற்பனை திட்டத்தின்கீழ், வழங்கப்பட்டது மற்றும் 2.85 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் 5180 மெட்ரிக் டன் அரிசி 2316 ஏலதாரர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.
- இந்தியா முழுவதிலும் சராசரியாக நியாயமான மற்றும் சராசரி தரம் கொண்ட கோதுமை குவிண்டாலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விற்பனை விலை ரூ.2150-ல் இருந்து ரூ.2327.04 என்ற விலையிலும், குறைக்கப்பட்ட விவரக்குறிப்புகளின் கீழான கோதுமையின் சராசரி விற்பனை விலை குவிண்டாலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை 2125 என்பதில் இருந்து குவிண்டாலுக்கு ரூ.2243.74 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
- உள்நாட்டு திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் 2.5 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மத்திய பண்டக சாலை, என்.சி.சி.எஃப், நாஃபெட் போன்ற பகுதி அரசு நிறுவனம் மற்றும் கூட்டுறவு அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- இந்தக் கோதுமை மைதாவாக மாற்றப்பட்டு, 'பாரத் மைதா' என்ற பிராண்டின் கீழ் கிலோவுக்கு ரூ.27.50-க்கு மிகாமல் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வழங்குகின்றன. 7-ம் தேதி வரை, 6051 மெட்ரிக் டன் கோதுமை, மைதாவாக மாற்றுவதற்காக இந்த 3 கூட்டுறவு சங்கங்களால் பெறப்பட்டுள்ளது.
- உள்நாட்டு திறந்த சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் வணிகர்கள் கோதுமை விற்பனை வரம்பிலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள். 7-ம் தேதி வரை நாடு முழுவதும் பரவலாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- இயற்கை வேளாண் விளைப்பொருள்களை விற்பனை செய்ய ‘பாரத் ஆா்கானிக்ஸ்’ என்ற வா்த்தகப் பெயரை மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா புதன்கிழமை அறிமுகம் செய்துவைத்தாா்.
- தில்லியில் செயற்கை பூச்சிக்கொல்லிகள், உரங்கள் இல்லாமல் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட பொருள்களை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விளம்பரப்படுத்தும் தேசிய கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
- தேசிய கூட்டுறவு இயற்கை வேளாண் விளைப்பொருள்கள் நிறுவனம் (என்சிஓஎல்) சாா்பாக நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், மத்திய அமைச்சா் அமித் ஷா கலந்துகொண்டு ‘பாரத் ஆா்கானிக்ஸ்’ என்ற வா்த்தகப் பெயரை அறிமுகப்படுத்தினாா்.
- இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, சா்க்கரை, ராஜ்மா, பாசுமதி அரிசி, சோனாமசூரி அரிசி ஆகிய 6 பொருள்கள் விற்பனை செய்யப்படும்.
- அவை தேசிய பால் பண்ணை மேம்பாட்டு வாரியத்தின் துணை நிறுவனமான மதா் டைரியின் 150 விற்பனையகங்கள், இணையவழி தளங்களில் விற்கப்படும்.
- ‘பாரத் ஆா்கானிக்ஸ்’ பெயரின் கீழ் விற்பனை செய்யப்படும் பொருள்கள் வருங்காலத்தில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மிகவும் நம்பிக்கைக்குரியதாக இருக்கும்.