Type Here to Get Search Results !

9th OCTOBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


9th OCTOBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் தனி தீர்மானம்
  • காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
  • காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் தனி தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். காவிரி நீர் உரிமையை காப்பதில் திமுக அரசு எப்போது உறுதியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
  • இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தண்ணீர் திறந்து விட கர்நாடகா அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்ற தனி தீர்மானத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்மொழிந்தார்.
  • முதல்வர் கொண்டுவந்த காவிரி தொடர்பான தீர்மானம் சட்டசபையில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
நியாயமான மற்றும் நெகிழ்வான உணவு முறைகளை நோக்கிய வேளாண் ஆராய்ச்சி முதல் தாக்கம் வரை என்ற தலைப்பில் சர்வதேச ஆய்வு மாநாட்டைக் குடியரசுத்தலைவர் தொடங்கி வைத்தார்
  • சி.ஜி.ஐ.ஏ.ஆர் அமைப்பின் பாலின சம விளைவுகளுக்கான சான்று மற்றும் புதிய வழிகளை உருவாக்கும் (ஜெண்டர்) தாக்க மேடை மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.ஏ.ஆர்) நடத்தும் 'வேளாண் ஆராய்ச்சி முதல் தாக்கம் வரை: நியாயமான மற்றும் நெகிழ்வான வேளாண் உணவு முறைகளை நோக்கி' என்ற சர்வதேச ஆய்வு மாநாட்டைத் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, புதுதில்லியில் தொடங்கி வைத்தார்.
டான்சானியா இந்தியா இடையே ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானது
  • கிழக்கு ஆப்ரிக்க நாடான டான்சானியாவின் அதிபர் சாமியா சுலுஹூ ஹாசன், நான்கு நாட்கள் பயணமாக புதுடில்லி வந்தார். அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
  • இதைத் தொடர்ந்து, இரு தரப்பு உறவுகள் குறித்து, அவருடன் பிரதமர் மோடி பேச்சு நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல இரு தலைவர்களும் முன்வந்துள்ளனர்.
  • டிஜிட்டல் பரிவர்த்தனை, கலாசாரம், விளையாட்டு, உள்ளிட்டவற்றில் இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதைத் தவிர, ராணுவத் துறையில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தானது.
  • வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் இரு நாடுகளும் முக்கிய பங்காளிகளாக உள்ளன. இதையடுத்து, பரஸ்பரம் அந்தந்த நாடுகளின் கரன்சியில் வர்த்தகம் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel