Type Here to Get Search Results !

30th AUGUST 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


30th AUGUST 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

கர்நாடகாவில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கும் திட்டத்தை தொடங்கினார் ராகுல் காந்தி
  • கர்நாடக தேர்தலின்போது, குடும்ப தலைவிகளுக்கு மாதம்ரூ.2,000, பட்டதாரிகளுக்கு ரூ.3,000, டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500, மாதம் 10 கிலோ இலவசஅரிசி, அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் இலவசம், பேருந்தில் மகளிருக்கு இலவசப் பயணம் ஆகிய 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்தது.
  • இதன்படி, பட்டதாரிகளுக்கு ரூ.3,000, டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500, மாதம் 10 கிலோ இலவச அரிசி, அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், பேருந்தில் மகளிருக்கு இலவச பயணம் ஆகிய திட்டங்கள் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டன.
  • இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து 100 நாள் ஆனதைக் குறிக்கும் வகையில் மைசூரு நகரில் நேற்று விழா நடைபெற்றது.
  • இதில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  • அப்போது மல்லிகார்ஜுன கார்கே குடும்ப தலைவிகளுக்கு ரூ.2,000 வழங்கி, குடும்ப லட்சுமி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து பெண்களுக்கு ராகுல் காந்தி, சித்தராமையா, டி.கே.சிவகுமார் ஆகியோரும் ரூ.2,000 வழங்கினர்.
பிஐபியின் முதன்மை இயக்குநர் ஜெனரல் நியமனம்
  • மூத்த இந்திய தகவல் சேவை அதிகாரி மணீஷ் தேசாய், பத்திரிகை தகவல் பணியகத்தின்(பிஐபி) முதன்மை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
  • 1989ம் ஆண்டு பேட்ச் அதிகாரியான அவர் அரசின் முதன்மை செய்தித் தொடர்பாளராகவும் இருப்பார். ஓய்வுபெறும் தற்போதைய முதன்மை இயக்குநர் ஜெனரல் ராஜேஷ் மல்ஹோத்ராவிடம் இருந்து பொறுப்புகளை பெற்றுக்கொண்டு நாளை பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தற்போது, மணீஷ் தேசாய் மத்திய தகவல் தொடர்புப் பணியகத்தின் தலைமை இயக்குநராக உள்ளார். இதே போல் மூத்த ஐஐஎஸ் அதிகாரி பூபேந்திர கைந்தோலாவை செய்தித்தாள்களின் பதிவாளர் (ஆர்என்ஐ) பத்திரிகை பதிவாளராக ஒன்றிய அரசு நியமித்து உள்ளது.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், தேசிய தூய்மை தொழிலாளர்கள் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் 
  • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமும், தேசிய தூய்மைத் தொழிலாளர்கள் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகமும் 2023-24 மற்றும் 2024-25 நிதியாண்டுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. 
  • இந்த உத்தி சார்ந்த கூட்டாண்மை நாடு முழுவதும் உள்ள இந்த விளிம்புநிலை சமூகங்களுக்கு அதிகாரமளிப்பதில் கவனம் செலுத்துவதன் மூலம் தூய்மைத் தொழிலாளர்கள், மனிதக்கழிவை கையால் அகற்றுபவர்கள், குப்பை அள்ளுபவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • குறிப்பிட்ட இலக்கான நலத்திட்டங்களுக்கு நிதியை திறம்பட ஒதுக்கீடு செய்வதன் மூலமும் பயன்படுத்துவதன் மூலமும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான உறுதிப்பாட்டை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் சுட்டிக்காட்டுகிறது.
  • பாதுகாப்பு, கல்வி, திறன் மேம்பாடு, தொழில்முனைவு மற்றும் நிலையான வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்கும் முன்முயற்சிகளை அதிகரிக்க இந்த கூட்டாண்மை முயற்சிக்கிறது. 
  •  நமது சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க மோசமான காலநிலையை எதிர்கொண்டு கடினமாக உழைக்கும் இந்தத் தொழிலாளர்களின் முழுமையான முன்னேற்றத்திற்கு பங்களிக்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel