Type Here to Get Search Results !

3rd JULY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


3rd JULY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

சிங்கப்பூரில் முதாவது ஹைட்டரஜன் எரிபொருள் கொண்ட வாகனத்தின் சோதனை ஓட்டம்
  • ஒரு சிறு லாரி போன்ற வாகனத்தில் 'ஸ்பெக்ட்ரோனிக்' நிறுவனத்தின் ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலன் பொருத்தப்பட்டிருக்கும்.
  • இந்த லாரியில், ஒரு ட்ட வரையிலான எடையும் கொண்டு செல்லலால்ம. மேலும் 500 கிலோமீட்டர் தூரம் வரை ஓடும் திறன் பெற்றது. அது அதிவேகமாக மணிக்கு 44 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. ஐந்து நிமிடங்களில் அதில் எரிபொருள் நிரப்பப் முடியும்.
  • ஹைட்ரஜன் எரிபொருளின் மின்கலன், காற்றழுத்தப்பட்ட கலனுக்குள் உள்ள ஹைட்ரஜன் எரிபொருளைக் கொண்டும் காற்றில் உள்ள ஆக்ஸிடன் கொண்டும் ரசாயன முறைப்படி மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
  • ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலன் தொடர்பில் நடத்தப்படும் இரண்டாவது மிகப் பெரிய சோதனை இதுவாகும். மெர்சிடிஸ் பென்ஸ் A-வகை சிறிய கார்களில் எரிபொருள் மின்கல மின்சாரம் பொருத்தப்பட்டிருந்தபோது அது சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
  • அவை கோஸ்ட் ரோட்டில் உள்ள பிபி (BP) பெட்ரோல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள ஹைட்ரஜன் சாவடியில் எரிபொருளை நிரப்பின. அத்தொழில்நுட்பத்தில் செலவுகள் சற்று அதிகமாக இருந்ததால் அது கைவிடப்பட்டது.
  • இருப்பினும், இந்தத் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட பல்வேறு வளர்ந்த நாடுகள், தூய்மை எரிசக்தித் திட்டமாக தங்கள் நாடுகளில் அவற்றை மேற்கொண்டுள்ளன. 
  • ஹியுண்டே, பிஎம்டபுள்யூ, டோயோட்டா முதலிய நிறுவனங்கள் தங்கள் சிறிய வாகனங்களுக்கு எரிபொருள் மின்கல மின்சாரத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இலவச 'வை - பை' சேவை உச்ச நீதிமன்றத்தில் அறிமுகம்
  • உச்ச நீதிமன்றத்துக்கு, மே 22ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறை காலத்தில், 2,000க்கும் மேற்பட்ட வழக்குகளை கோடை விடுமுறை கால சிறப்பு அமர்வுகள் விசாரித்தன.
  • அப்போது, 700 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. இந்த விடுமுறை காலத்தில் மூன்று நீதிபதிகள் ஓய்வு பெற்றனர். இந்நிலையில், 42 நாட்களுக்குப் பின் உச்ச நீதிமன்றம் நேற்று முதல் வழக்கம் போல் மீண்டும் செயல்படத் துவங்கியது.
  • இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து அறைகளுக்கு வை - பை வசதி  வழங்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் ஐந்து வரையிலான நீதிமன்ற அறைகளில் வை - பை வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனி இந்த நீதிமன்ற அறைகளில் சட்ட புத்தகங்கள், ஆவணங்கள் இருக்காது. 
  • மின்னணு நடவடிக்கை வாயிலாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வசதியை, உச்ச நீதிமன்றத்துக்கு வரும் வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், வளாகத்துக்கு வருகை தருபவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel