Type Here to Get Search Results !

6th JUNE 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


6th JUNE 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

வழக்கறிஞர்களுக்கு பயிற்சி: இந்தியா, பிரிட்டன் ஒப்பந்தம்
  • இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள வழக்கறிஞர்கள் பரஸ்பரம் மற்ற நாட்டில் பயிற்சி மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது.
  • இதில், இந்திய பார் கவுன்சில், பிரிட்டன் மற்றும் வேல்ஸ் பார் கவுன்சில், பிரிட்டன் மற்றும் வேல்ஸ் சட்ட சொசைட்டி கையெழுத்திட்டுள்ளன.
  • இதன்படி, பிரிட்டனில், சர்வதேச சட்டம் தொடர்பான பயிற்சியுடன், சட்ட நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து நம் நாட்டைச் சேர்ந்த இளம் வழக்கறிஞர்கள் நேரடி பயிற்சி மேற்கொள்ள முடியும்.
  • அதே நேரத்தில், நம் வழக்கறிஞர்கள் அங்குள்ள நீதிமன்றங்களில் வாதிட முடியாது. அதுபோல, பிரிட்டன் வழக்கறிஞர்களும் இங்கு பயிற்சி மட்டுமே எடுத்து கொள்ள முடியும். 
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி குண்டு - இந்திய கடற்படை வெற்றிகர பரிசோதனை
  • எம்எச்-60 'ரோமியோ' மல்டி- மிஷன் ஹெலிகாப்டர் ஐஎன்எஸ் விக்த் போர்க்கப்பலில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட வரலாற்று நிகழ்வுக்குப் பிறகு மற்றொரு தனித்துவமான சாதனையை இந்திய கடற்படை நிகழ்த்தி காட்டியுள்ளது.
  • முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அதிக எடைகொண்ட 'டார்பிடோ' எனும் நீருக்கடியில் சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கும் நீர்மூழ்கி குண்டு சோதனை செவ்வாயன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. 
  • நிர்ணயிக்கப்பட்ட தூரத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அந்த குண்டு துல்லியமாக தாக்கி அழித்தது. இது, இந்திய கடற்படை மற்றும் டிஆர்டிஓவின் (பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம்) குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனை நிகழ்வாகும். 
ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருது
  • தென் அமெரிக்க நாடான சுரினாமுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, முதன் முறையாக, மூன்று நாட்கள் அரசு முறைப் பயணமாக சென்றுள்ளார்.
  • சிறப்பு விமானம் வாயிலாக, கடந்த 4ம் தேதி, சுரினாம் தலைநகர் பராமரிபோவுக்கு சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்முவை, அந்நாட்டு அதிபர் சந்திரிகாபெர்சாத் சந்தோகி வரவேற்றார்.
  • இந்நிலையில், பராமரிபோவில் உள்ள அதிபர் மாளிகையில், நடைபெற்ற விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு, சுரினாம் நாட்டின், 'கிராண்டு ஆர்டர் ஆப் தி செயின் ஆப் தி யெல்லோ ஸ்டார்' என்ற உயரிய விருதை, அந்நாட்டின் அதிபர் சந்திரிகாபெர்சாத் சந்தோகி வழங்கி கவுரவித்தார்.
  • இந்த விருதை, சுரினாமில் வசிக்கும் இந்தியர்களுக்கு அர்ப்பணிப்பதாக, ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்தார். விருது பெற்ற ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
மன்னார் வளைகுடா காப்பாளருக்கு 'யுனஸ்கோ' மேலாண்மை விருது
  • யுனஸ்கோ எனும் ஐக்கியநாடுகள் சபையில் கல்வி, கலாசார அமைப்பின் சார்பில் 2004 முதல், 'மைக்கேல் பட்டீஸ்' என்ற பெயரில், ஆண்டுதோறும் சிறந்த உயிர்கோள காப்பக மேலாண்மைக்கான விருது வழங்கப்படுகிறது.
  • நடப்பு ஆண்டுக்கான விருது, ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக காப்பாளர் பகான் ஜெக்தீஸ் சுதாகருக்கு வழங்கப்படுகிறது. 
  • வரும் 14ல் பாரீஸ் நகரில் நடைபெறும் விழாவில் அவருக்கு விருது வழங்கப்பட உள்ளது.இந்தியாவிற்கு முதன் முறையாக இந்த விருது கிடைத்துள்ளது. இவருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி சரிய வாய்ப்பு - உலக வங்கி அறிக்கை
  • உலக வங்கி சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட சா்வதேச பொருளாதார வாய்ப்பு நிலை குறித்த அறிக்கையில்  சா்வதேச பொருளாதார வளா்ச்சி 2022-இல் 3.1 சதவீதமாக இருந்தது, 2023-ஆம் ஆண்டில் 2.1 சதவீதமாக சரிய வாய்ப்புள்ளது. 
  • சீனாவைத் தவிா்த்து பிற வளா்ந்து வரும் பொருளாதார நாடுகள் மற்றும் சந்தைகளைப் பொருத்தவரை, கடந்த ஆண்டில் 4.1 சதவீதமாக இருந்தது நிகழாண்டில் 2.9 சதவீதமாக சரிய வாய்ப்புள்ளது. 
  • இந்தியாவைப் பொருத்தவரை 0.3 சதவீதம் அளவுக்கு சரிந்து 6.3 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
2,000 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், நாடு முழுவதும் மலிவுவிலை மக்கள் மருந்தகங்களைத் தொடங்க அனுமதி
  • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2000 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், நாடு முழுவதும் மலிவுவிலை மக்கள் மருந்தகங்களைத் தொடங்க அனுமதி வழங்கியுள்ளது. 
  • புதுதில்லியில் நடைபெற்ற மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா மற்றும் மத்திய சுகாதாரம், உரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா உடனான ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 
  • இதன்படி நாடு முழுவதும் உள்ள 2,000 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் அடையாளம் காணப்பட்டு மலிவு விலை மருந்தகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதன்படி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் 1000 மலிவுவிலை மருந்தகங்களும், எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் எஞ்சிய 1000 மலிவுவிலை மருந்தகங்களும் நாடு முழுவதும் திறக்கப்படும். 
  • மத்திய அரசின் இந்த முக்கியமான முடிவு, கூட்டுறவு சங்கங்களுக்கான வருவாயை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், கிராமப்புறங்களில் புதிய வேலைவாய்ப்பை உருவாக்கவும் வழிவகுக்கும். 
  • இன்றைய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டுறவு அமைச்சக செயலாளர், ரசாயனம் மற்றும் உரத்துறையின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
  • தற்போது நாடு முழுவதும் 9,400க்கும் மேற்பட்ட பிரதமரின் மலிவு விலை மருந்தகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 1,800 வகை மருந்துகள் 285 மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 
  • இந்த மலிவு விலை மருந்தகங்களில் பிரபல நிறுவனங்களின் மருந்துகள், 50 முதல் 90 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுவது இதன் சிறப்பம்சம்.
  • இந்த மருந்தகங்களைத் தொடங்க பார்மஸி தொடர்பான பட்டய மற்றும் பட்டப்படிப்பு பெற்ற தனிநபர்கள் விண்ணப்பிக்கலாம். அதேபோல் பார்மஸி தொடர்பான பட்டய மற்றும் பட்டப்படிப்பு படித்த நபர்களைக்கொண்ட தனியார் நிறுவனங்களும், மருத்துவமனைகளும், தொண்டு நிறுவனங்களும், அறக்கட்டளை நிறுவனங்களும் தகுதிபெற்றவையாகும். 
  • இதற்கு குறைந்தபட்சம் 120 சதுர அடி இடவசதியை சொந்தமாக கொண்டவர்களும், வாடகைதாரர்களும் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக மகளிர் தொழில்முனைவோர், மாற்றுத்திறனாளிகள், பட்டியலினத்தவர்கள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோர் சிறப்பு பிரிவில் விண்ணப்பிக்கலாம். மலிவு விலை மருந்தகங்களுக்கு ஊக்கத்தொகையாக அதிகபட்சமாக மாதந்தோறும் 15,000 வீதம் 5 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel