Type Here to Get Search Results !

26th March 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


26th March 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ஸ்விஸ் ஓபன் பாட்மிண்டன்: சாட்விக்-ஷிராக் ஜோடி சாம்பியன்
  • சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் ஸ்விஸ் ஓபன் சூப்பர் 300 பாட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. ஆடவர் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சாட்விக் சாய்ராஜ், ஷிராக் ஷெட்டி ஜோடி 21-19, 24-22 என்ற செட் கணக்கில் சீனாவின் ரென் ஜியாங் யூ, டான் கியாங் ஜோடியை வீழ்த்தியது. 54 நிமிடங்களில் இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது.
  • இந்த சீசனில் சாட்விக்- ஷிராக் ஷெட்டி ஜோடி பெறும் முதல் பட்டம் இதுவாகும். மேலும் உலக அளவிலான போட்டிகளில் இந்த ஜோடி வெல்லும் 5-வது சாம்பியன் பட்டமாகும் இது.
  • கடந்த 2018-ல் ஹைதராபாத் ஓபன், 2019-ல்தாய்லாந்து ஓபன், கடந்த ஆண்டில் இந்தியா ஓபன், பிரெஞ்சு ஓபனில் இந்த ஜோடி பட்டம் வென்றிருந்தது.
  • மேலும் 2022-ம் ஆண்டில் காமன்வெல்த் போட்டிகளிலும் சாட்விக், ஷிராக் ஷெட்டி ஜோடி பட்டம் வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
மகளிர் குத்துச்சண்டை - நிகத் ஜரீன் 2வது முறையாக உலக சாம்பியன் & தங்கம் வென்றார் லோவ்லினா
  • 13-வது உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில், 50 கிலோ எடைப் பிரிவின் இறுதிப்போட்டி நடைபெற்றது.
  • இந்த இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை நிகத் ஜரீனும், வியட்நாம் வீராங்கனை நுகுயென் தி தாமும் மோதினர். இதில் சிறப்பாக விளையாடிய நிகத் ஜரீன், பல குத்துகளை வியட்நாம் வீராங்கனை முகத்தில் விட்டு புள்ளிகளை குவித்தார். இறுதியில் 5-0 என்ற கணக்கில் நிகத் ஜரீன் வெற்றி பெற்று தங்கத்தைத் தட்டிச் சென்றார்.
  • இதன்மூலம் உலகக் குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோமுக்குப் பிறகு 2 முறை உலக குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார் ஜரீன். மேரி கோம் 6 முறை உலக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இதைத் தொடர்ந்து நடைபெற்ற 75 கிலோ பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹெயினும், ஆஸ்திரேலிய வீராங்கனை கேயிட்லின் பார்க்கரும் மோதினர். இதில் லோவ்லினா 5-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய வீராங்கனை பார்க்கரை வீழ்த்தி தங்கத்தை வென்று அசத்தினார்.
  • இதையடுத்து இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் 4 தங்கப் பதக்கங்களை அள்ளியுள்ளனர்.
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் 'எல்.வி.எம்.3 - எம் 3' ராக்கெட்
  • இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், நம் நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு, புவி கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்கான செயற்கைக்கோள்களை வடிவமைக்கிறது. 
  • அவை, பி.எஸ்.எல்.வி., - - ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்கள் உதவியுடன், புவி வட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர இஸ்ரோ, வருவாய் ஈட்டும் நோக்குடன், வணிக ரீதியாக வெளிநாடுகளைச் சேர்ந்த செயற்கைக் கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்துகிறது.
  • அதன்படி, இஸ்ரோவின் வணிகப் பிரிவான, 'நியூ ஸ்பேஸ் இந்தியா' உடன், பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஒன்வெப் நிறுவனம், 72 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த ஒப்பந்தம் செய்தது. ஒப்பந்தப்படி, 2022 அக்., 23ல், 36 செயற்கைக் கோள்கள், வெற்றிகரமாக விண்ணில் நிறுத்தப்பட்டன.
  • மீதமுள்ள, 36 செயற்கைக் கோள்களை சுமந்தபடி, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, 'எல்.வி.எம்.3 -- எம் 3' ராக்கெட், நேற்று காலை 9:00 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
  • இந்த ராக்கெட், ஜி.எஸ்.எல்.வி., மாக் 3 வகையை சேர்ந்தது; 643 டன் எடை; 43.5 மீட்டர் உயரம் கொண்டது. இதுவே அதிக எடை உடைய ராக்கெட்.
  • பூமியில் இருந்து புறப்பட்ட 19வது நிமிடத்தில் இருந்து, ராக்கெட் திட்டமிடப்பட்ட, 455.53 கி.மீ.,ரில் உடைய புவி வட்ட பாதையில் தகவல் தொடர்புக்கான, 36 செயற்கைக் கோள்களையும், ஒரு சமயத்தில் நான்கு என்ற வீதத்தில், வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel