Type Here to Get Search Results !

20th FEBRUARY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


20th FEBRUARY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

நிதிஆயோக் புதிய சிஇஓ பிவிஆர் சுப்பிரமணியம்
  • நிதி ஆயோக் புதிய சிஇஓவாக பிவிஆர் சுப்பிரமணியம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். நிதிஆயோக் சிஇஓவாக பரமேஸ்வரன் ஐயர் கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி நியமிக்கப்பட்டார்.
  • 2 ஆண்டுகள் பணி நியமனம் செய்யப்பட்ட அவர் தற்போது உலக வங்கியின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். வாஷிங்டனில் உள்ள உலக வங்கியில் அவர் 3 ஆண்டுகள் இந்த பதவியில் இருப்பார். 
  • இதை அடுத்து நிதிஆயோக் அமைப்பின் புதிய சிஇஓவாக ஆந்திராவை சேர்ந்த பிவிஆர் சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். 
சர்வதேச டி20 போட்டியில் சாதனை படைத்த ஹர்மன்ப்ரீத் கௌர்
  • இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையில் அயர்லாந்து மகளிர் அணியுடன் குரூப் போட்டியில் விளையாடி வருகிறது.
  • இந்த போட்டியின் மூலம் ஹர்மன்ப்ரீத் புதிய சாதனையை படைத்துள்ளார்.
  • சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனையை ஹர்மன்ப்ரீத் கௌர் படைத்துள்ளார். இந்திய ஆடவர் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் சாதனையையும் இதன் மூலம் ஹர்மன்ப்ரீத் முறியடித்துள்ளார்.
  • இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தா 115 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 
  • சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடிவர்களில் 150 போட்டிகளில் விளையாடி முதல் இடத்தில் ஹர்மன்ப்ரீத் கௌரும், 148 போட்டிகளில் விளையாடி 2வது இடத்தில் ரோகித் சர்மாவும், 143 போட்டிகளில் விளையாடி 3வது இடத்தில் சுசி பட்டேலும் உள்ளனர்.
இந்தோ-உஸ்பெகிஸ்தான் கூட்டு ராணுவப் பயிற்சி உத்தராகண்ட் மாநிலம் பித்தோராகரில் தொடங்கியது
  • இந்திய ராணுவத்துக்கும் உஸ்பெகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையிலான ‘டஸ்ட்லிக்’ என்னும் நான்காவது கூட்டு ராணுவப்பயிற்சி உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகரில் தொடங்கியது. இரு நாடுகளையும் சேர்ந்த தலா 45 வீரர்கள் இந்தக் கூட்டுப் பயிற்சியில் கலந்து கொண்டனர். 
  • இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே ஆக்கப்பூர்வமான உறவுகளை மேம்படுத்துவதே இந்தப் பயிற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்திய ராணுவத்தில் கார்வால் ரைபிள்ஸ் பிரிவில் இருந்து வீரர்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர். 
  • இரு நாடுகளுக்கிடையிலான முதலாவது பயிற்சி 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்றது.
  • 14 நாட்கள் நடைபெறவுள்ள இந்தக் கூட்டுப்பயிற்சி மலைப்பகுதிகள் மற்றும் சிறுநகரப் பகுதிகளில் தீவிரவாத நடவடிக்கைகளை தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 
  • கூட்டுப்பயிற்சியில் விவாதங்கள், குறைகள், செயல்முறை விளக்கங்கள் ஆகியவை நடைபெறும். புதிய தலைமுறைத் தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்பத்தைக் கையாள்வது தொடர்பான நடவடிக்கைகளில் இருநாட்டு ராணுவ வீரர்கள் பயிற்சி மேற்கொள்வார்கள். படைகளுக்கு இடையே இயங்கும் தன்மையை அதிகரிக்க முக்கியத்துவம் அளிக்கப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel